Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 10:49

சக்ரதானர்-சக்ரதானஸ்வரூப மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

கமல விநாயகா போற்றி!
கஜ கன்ன விநாயகா போற்றி!
குருந்தாள் விநாயகா போற்றி!
கூத்தாடும் பிள்ளையே போற்றி!

சக்ரதானர்-சக்ரதானஸ்வரூப மூர்த்தி!

 

உலகத்தை ஒரே செங்கோல் ஆட்சியாக நடத்திவந்த குபன் என்ற அரசன் சார்பாக திருமால் ததீசி என்ற முனிவரை எதிர்த்துப் போர் புரியும்போது தன் சக்ராயுதத்தை அம்முனிவர் மேல் ஏவ அச்சக்கராயுதம் அம்முனிவரை ஒன்றும் செய்யாமல் வாய் மடிந்து திருமாலிடம் திரும்பி வந்ததைக் கண்ட அச்சுதன் தன்னைப் போலவே ஒரு மாயை திருமால் வடிவை ஏற்படுத்தியதைக் கண்ட முனிவர் தன் காற்பெருவிரலை அசைத்து என்னற்ற திருமால்களை உருவாக்க, ததீசி முனிவர் தவவலிமை மிக்கவர் அவரை தன்னால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்ததும் திருமால் ததீசி முனிவரை வணங்கி விடை பெற்றார்.
உலகம் முழுவதும் அழிந்து ஊழிக்காலம் அகன்றபின் சிவபெருமான் மீண்டும் உலகைப் படைத்து பிரம்மன், திருமால் ஆகிய இருவருக்கும் படைத்தல், காத்தல் தொழில்களை வழங்கினார். திருமால், தேவர்களை அசுரர்களிடமிருந்து காக்க வலிமை மிக்க ஆயுதம் வழங்க வேண்டினார். சிவபெருமான் சூரிய சந்திரர்களின் தேஜஸ்லிருந்து மயன் விஸ்வகர்மாவை ஒர் சக்கரம் மற்றும் வலிமை மிக்க கதை ஆயுதம் தயாரிக்கச் சொல்லி அதை திருமாலிடம் வழங்கினார். உமாதேவியர் தமது திருமுகத்தினால் ஒரு சங்கும் திருவிழிகளினால் ஒரு தாமரை மலரையும் உருவாக்கி அவற்றைத் தாங்குவதற்கு மேலும் இரண்டு கைகளையும் அளித்தார்.
இந்த சக்கரமே வாய் மடிந்து விட்டதனால் இதைவிட வலிமை மிகுந்த சக்கரம் பெற விரும்பிய திருமாலிடம் தேவர்கள் சலந்தரன் என்ற அசுரனை சிவன் நிலத்தில் வரைந்த சக்கராயுதத்தினால் கொன்றார். சுதர்சனம் என்ற அந்த சக்ராயுதப்படையை சிவனிடம் கேட்டுப் பெறுக என்றனர்.
இமயமலைச் சாரலில் லிங்கம் அமைத்து சிவ வழிபாடு செய்து வந்தார் திருமால். திருமாலின் பக்தியை உலகிற்கு வெளிப்படுத்த விருப்பம் கொண்ட பெருமான் ஒருநாள் திருமால் பூஜை செய்து வரும் 1000 தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தார். ஒவ்வொரு திருப்பெயராக உச்சரித்து ஒரு மலரால் அர்சித்து வந்தார். கடைசி திருப்பெயருக்கு மலரில்லாமையால் வருத்தம் கொண்டார். என்ன செய்வது என்று புரியாமல் தன் கண் மலரையே அர்ச்சினைக்கு உபயோகிக்க முடிவெடுத்து தன் கண்ணை அகழ்ந்தெடுத்து அர்ச்சனையை முடித்தார்.
திருமாலின் பக்தியைக் கண்ட சிவபெருமான் காட்சி கொடுத்து கமலை கேள்வ உன் பூசைக்கு மனம் களித்தோம். உனது கண்ணை உனக்கு அளித்தோம். கமலக் கண்ணன் (தாமரைக் கண்ணன்) என்ற பெயரை அடைவாய் என்றார். மேலும் திருமால் விரும்பிய சுதரிசன சக்ராயுதத்தை அளித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவாய் என ஆசி அருளினார்.
நான்கு கரங்களுடன், சடாமகுடத்துடன் சாந்த மூர்த்தியாய் தன் வலக்காலை மடக்கி, இடக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்க இருகரங்களில் மானும் டங்கமும் (உளி) முன் வலக்கரத்தில் சக்கரம், இடப்பக்கம் உமை அமர்ந்திருக்க வலப்புறம் நான்முகன், எதிரில் சிவனை வழிபடும் நிலையில் திருமால்.
உலகம் வியக்கும் பெரும் போகம் அளிப்பவர். மாலுக்கு சக்கரம் அளித்த கோலம். தன்னை பூதூவி வழிபட்ட திருமாலுக்கு சுதரிசனம் எனும் சக்ராயுதத்தை கொடுத்த வடிவம் சக்ரதானஸ்வரூப மூர்த்தி. நிகழ்வு நடந்த தலம்: திருமாற்பேறு. மற்றும் திவீழிமிழலை

#####

Read 5558 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:01
Login to post comments