gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 07 September 2017 11:34

காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திரிமுக விநாயகா போற்றி!
துங்கக் கரிமுகனே போற்றி!
துண்டி விநாயகா போற்றி!
துன்முக விநாயகா போற்றி!


காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!


இறப்பு பற்றிய எண்ணமே மனிதனை தத்துவ நெறிக்கு அழைத்துச் செல்லும். தோற்றம் உண்டேல் மரணம் உண்டு என்பது வெள்ளிடைமலை. காலகால மூர்த்தி காலனிடமிருந்து நம்மைக் காப்பவர்.
மணல்மேடு என்ற ஊரில் கவுசிக முனிவரின் மகன் மிருகண்டு முனிவர் தம் மனைவியருடன் வாழ்ந்து வந்தார். மகப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம் புரிய குறைந்த அறிவும் நீண்ட ஆயுளும் கொண்ட மகன் வேண்டுமா அல்லது நல்லறிவும் நற்குணங்களும் கொண்ட பதினாறு வயதுவரை வாழும் மகன் வேண்டுமா என இறைவன் கேட்க நிறைந்த அறிவுள்ள மகனே வேண்டும் எனக் கேட்க மார்க்கண்டேயன் பிறந்தான். தனக்கு பதினாறு வயது நிரம்பும் அளவில் தன் ஆயுளைப் பற்றிய குறையை அறிகின்றான்.
பெற்றோர் அனுமதியுடன் திருக்கடவூருக்கு வந்து அமிர்தகடேசரை வழிபட்டு வர, குறித்த பதினாறு வயது நிரம்பியதும் உயிரைக் கவர காலன் வர மார்க்கண்டேயன் அச்சம் கொண்டு திருமேனியைக் கட்டிப்பிடிக்க லிங்கத்துடன் பாசக்கயிறை வீசிய காலனை தனது இடது காலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக வாழ அருள் புரிந்தார்.
மூன்று திருக்கண்களுடன் நான்கு கரங்கலுடன் கூரிய பற்களுடன் திகழ்வார். வலபக்க ஒரு கரத்தில் சூலம் காதுவரை உயர்ந்தும், மற்றொரு கரத்தில் பரசு / அருட் குறிப்பும், இடப்பக்க முன் கரத்தில் சூசி குறிப்புடன், பின்கரம் விசுமய முத்திரையுடன்- வியப்பினை உணர்த்தும் குறிப்புடன் இருக்கும். வலது கால் தாமரையிலும், இடது கால் எமனுடைய தலையிலும் இருக்கும்.
துன்பங்கள் அனைத்தையும் துடைத்து அபயம் அருளுபவர், மார்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த வடிவம்-காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!. வீரட்டம் புரிந்த நிகச்சியான இது நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். காட்சி: பட்டீசுவரம், திருச்செங்காட்டாங்குடி. மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்.

#####

Read 5873 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:32
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27051184
All
27051184
Your IP: 52.14.221.113
2024-04-20 18:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg