ஓம்நமசிவய!
பக்தி விநாயகா போற்றி!
பஞ்சபூத விநாயகா போற்றி!
பாகீரத விநாயகா போற்றி!
பாசாங்குச விநாயகா போற்றி!
கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி!
நான்முகனிடமிருந்து இறப்பில்லா ஆயுளும், வல்லமையும், வெற்றியும் அடைய தவமிருந்து சிவபிரானைத் தவிர என்ற நிபந்தனையுடன் வரம் பெற்றான். யானை வடிவு கொண்ட கயாசூரன் பிரம்மனிடம் வரம்பெற்ற கர்வத்தால் எல்லோரிடமும் போர் தொடுத்து துன்புறுத்தத் தொடங்கினான். இந்திரனின் ஊர்தி ஐராவதத்தின் வாலைப் பிடித்து சுழற்றி அடித்தான். அக்கினி, யமன், நிருதி ஆகிய எண்திசைக் காவலர்களை வென்றான். பின் தன் குலத்தினரையும் துன்புறுத்த தொடங்கினான். அருந்தவத்தோர் காசி சென்று இறைவனிடம் கயாசூரனைப் பற்றிக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டினர்.
அருதவத்தோர் காசி சென்றதை அறிந்து காசிக்கு வந்த கயாசூரன் நான்முகனின் எச்சரிக்கையை மறந்து சிவனின் இருப்பிடத்திற்கு வந்தான். பேரிரைச்சலுடன் பெருமானை எதிர்த்தான். சிவன் தன் காலால் அவனை உதைத்துத் தள்ளி விழியால் தீப்பொறி கக்கி யானை உடல் கொண்ட கயாசூரனது தோலை உரித்தார்.
யானை வடிவங்கொண்ட கயாசூரனை அழித்த வடிவம்-கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி!. நிகழ்வு நடந்த தலம்.:காசி (கீர்த்திவாசேசுவரர்)
#####