ஓம்நமசிவய!
வெற்றி விநாயகா போற்றி!
வேத விநாயகா போற்றி!
வீர கணபதியே போற்றி!
வைர விநாயகா போற்றி!
முகலிங்கம்!
உருவ வழிபாட்டில் மூர்த்தங்களின் வழி எளிதாக இறைவனை அறிந்து பயன்பெற ஒன்று முதல். ஐந்து வரை பூசாபாகத்தில் முகம்- அமைதல் மரபு. அவை 4வகை. 1.ஆட்யம்- லிங்கத்தின் சிவ பாகத்தில் 1000 முகங்களுடன் இருப்பது. 2.அநாட்யம்- முகம் எதுவும் இல்லாதது. 3.சுரேட்யம்- பூசா பாகத்தில் 108 முகம் உடையது. 4.சர்வசம்- இது முழு உறுப்புகளுடன் ஒருமுக (கிழக்கு நோக்கிய தத்புருட முகம்) இரண்டுமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், மேற்கு நோக்கிய சத்யோசாதம்), மூன்றுமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம்), நான்குமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம், மேற்கு சத்யோசாதம்), ஐந்துமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம், மேற்கு சத்யோசாதம் உச்சியில் ஈசானம்) என்ற ஐந்து வகை முகங்களுடையது.
இவ்வகை லிங்கங்களை கருவரையில் வைக்கும்போது 4கோபுரங்களை உடைய கோவிலில் 4/5 முகலிங்கங்களையும், 3கோபுரங்களை உடைய கோவிலில் 3 முகலிங்கங்களையும், 2கோபுரங்களை உடைய கோவிலில் 2 முகலிங்கங்களையும், 1கோபுரத்தை உடைய கோவிலில் 1 முகலிங்கத்தையும் அமைக்க வேண்டும்.
8- முகம் அஷ்டதார
16- முகம் சந்திரதாரா
32- முகம் தர்மதாரா
64- முகம் சகுசஷ்டி- சிவலீலா சம்த்த லிங்கம்
#####