Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 03:06

சதாசிவம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வரத விநாயகா போற்றி!
ஜோதி விநாயகா போற்றி!
விஜய விநாயகா போற்றி!
வினைதீர் விநாயகா போற்றி!


சதாசிவம்!

 

உச்சியில் ஈசானம் சுத்த பளிங்கு நிறத்துடனும், கிழக்கில் தத்புருடம் கோங்கின் பூ நிறத்துடனும், தெற்கில் அகோரம் கருநிறத்துடன் அவிழ்த்த தாடியுடனும், வடக்கில் வாமதேவம் செம்பவள நிறத்துடன் பெண்முகத் தோற்றத்திலும், மேற்கில் சத்யோசாதம் பால் நிறத்துடன் குழந்தை முகத்தோற்றத்திலும் வெளிப்படையாக ஐந்து முகங்களைக் கொண்டு முகங்கள் தோறும் மூன்று கண்களுடனும் 10திருக்கரங்களுடன் சிவ ஆகமத்தை உபதேசிப்பவர்.
திருமுடிகளில் கொன்றை மாலையையும், பிறைச்சந்திரனையும் சூடி கழுத்தின் கீழ் சுத்த பளிங்கின் நிறத் திருமேனியும் வலப்பக்க ஐந்து கைகளில் அபயம், சூலம், வேல், மாத்திரைக்கோல், தமருகம் ஆகியனவும், இடப்பக்க ஐந்து கைகளில் வரதம், மாதுளம்பழம், நாகம், செபமாலை, நீலோத்பலம் ஆகியவற்றுடன் இரு திருவடிகள் கொண்டு பதுமாசனத்தில் எழுந்தருளியிருப்பார்.
சிவ வடிவத்தில் சதாசிவ வடிவமே எல்லா வடிவங்களுக்கும் பிறப்பிடமகும். ஆகமம் என்பதில் ‘ஆ’ என்பது ஞானமும், ‘க’ என்பது மோட்சமும், ‘ம’ என்பது ஆணவ நாசமும் ஆகும். உலக உயிர்களின் ஆணவத்தை நாசம் செய்து அனைத்து உயிர்களையும் உய்விப்பதற்காக தொன்றியவையே ஆகமங்கள். ஆகமங்களை அருள தோன்றிய வடிவம் சதாசிவம். அவரிடமிருந்துதான் 28 சைவ ஆகமங்கள் தோன்றின. அவைகள் காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூட்சமம், சகஸ்ரம், அம்சுமத், சுப்ரபேதம், விசயம், நிச்வாசம், வாயம்புவம், அனலம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோத்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனப்படும்.
மேலும் அவரிடமிருந்துதான் நான்மறை வேதங்களும் தோன்றின. வேதமும் ஆகமங்களும் சதாசிவபெருமானால் அருளப்பட்டதால் அவை தம்முள் சிறிதும் பேதமின்றி இயங்கும் தன்மையுடையவை. காட்சி: மதுரை, சுதைவடிவில்- மதுரை, திருவிடை மருதூர், தஞ்சை.

#####

Read 5243 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:55
Login to post comments