Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:02

புஜங்கத்திராச மூர்த்தி,!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பரில சேடம் அளிப்பாய் போற்றி!
எண்ணிய எண்ணியாங்கு ஈவாய் போற்றி!
தண்கடமாமுகத் தலைவா போற்றி!
முக்கட் செம்மேனியெனே போற்றி!
முக்கட் பரமாம் முதல்வா போற்றி!
வரம் எல்லாம் தரு வள்ளல் போற்றி!


புஜங்கத்திராச மூர்த்தி,!

பாம்புகளை அடக்கிய துன்பக் காத்தல் செயல்- உயிர்கள் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப துன்பங்களைக் கொடுத்து அவற்றின் வினைகளை அழித்து காத்தல் துன்பக்காத்தல் எனப்படும்.
தவத்தில் சிறந்த தருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர். உண்மையறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி நடத்தி அதில் தோன்றிய புலி, மழு, மான் கன்று ஆகியவற்றை ஏவினர். அவற்றைவையெல்லாம் உடை, பாதச்சிலம்பு, ஆயுதம், சிரோமாலை, சேனை ஆகியவையாக மாற்றினார். யாகத்திலிருந்து கொடிய நாகங்கள் இறைவன்மீது ஏவப்பட அவைகள் தங்களிடமுள்ள காளி, காளாஸ்திரி, யமன், யமதூதன் ஆகிய நான்கு நச்சுப் பற்களால் அண்ணலை அணுக ஆதிநாளில் கருடனுக்கு அஞ்சி தம்பால் சரணடைந்த பாம்புகளை உடலில் தாங்கிருந்தவர், அவைகளுடன் இப்பாம்புகளையும் ஏற்று ‘உமது குலத்தாருடன் ஒன்றுகூடி வாழுங்கள் என்று அவைகளை திருக்கரம், திருவடி, அரை முதலிய இடங்களில் கங்கணம், காலனி, அரைநாண் முதலியவனவாக அணிந்தார். எந்த நாகங்களுக்கும் கெடுதல் செய்யாமல் தாமும் தம் பகைவர்களைச் சீறிப் பயமுறுத்தவேண்டும் ஆனால் தீங்கிழைக்கலாகாது என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தும் வடிவம் புஜங்கதிராச மூர்த்தியாகும்.
சிவனின் மறக்கருனையாகிய துன்பக் காத்தல் செயலைக் குறிக்கும் நடனம் புஜங்கத்திராச நடனம் எனப்படும். நிகழ்வு நடந்த தலம்: திருப்புத்தூர்

#####

Read 3546 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:01
Login to post comments