Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:15

சதா நிருத்த மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

கருணை முதிர் இளங்கன்றே போற்றி!
கரகம் கவிழ்த்த கரியே போற்றி!
கயமா முகனைக் கடிந்தாய் போற்றி!
விக்ன விநாயகா விமலா போற்றி!
எனை நினைந்தடிமை கொள்வாய் போற்றி!
உனை நான் நினைய அருள்வாய் போற்றி!


சதா நிருத்த மூர்த்தி!

எல்லா உயிர்க்கும் அவரவர் நிலைக்கேற்ப ஆணவமல இருளைப் போக்கி வினைகளை அகற்றி பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலாகிய முத்தி அருளுதற் பொருட்டு பஞ்சாட்சரமே திருமேனியாகக் கொண்டு ஐந்தொழில்களையும் ஒருசேர இயற்றும் பஞ்சகிருத்திய திருநடனத்தை எஞ்ஞான்றும் இயற்றும் அருள் வடிவே சதா நிருத்த வடிவமாகும். இந்த தாண்டவமே உலகம் படிக்கவும், வினைப்போகம் உள்ளவும் காக்கவும், பின்னர் ஒடுக்கவும், வினைகளை மறைத்தல் தொழிலால் நுகர்விக்கவும் பின் அருளவும் பயன் படுகின்றது.
சிவனின் கையிலுள்ள துடி படைத்தலைக் காட்டும்- துடியைக் கொட்டுவதால் ஆன்மாக்களின் மாயையை உதறுகின்றான்., அபயகரம் காத்தலைக் காட்டும்- உயிர்களை இன்பக் கடலில் திளைக்கச் செய்கின்றான்., கையிலுள்ள நெருப்பு அழித்தலைக் காட்டும்- அதனால் கன்ம மலத்தினைச் சுடுகின்றான்.. முயலகன் மீது ஊன்றிய பாதம் மறைத்தலைக் காட்டும்-ஆணவ மலத்தை அழுத்தித் தேய்விக்கின்றான். தூக்கிய திருவடி அருளலைக் காட்டும்-உயிர்களைப் பிறவிக் கடலிலிருந்து எடுக்கின்றான். இதையே பஞ்ச கிருத்தியம் என்பர். மலங்களை நீக்கி ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தும் அம்பலத்தானின் திருக்கோலத்திற்கேற்ப இவ்வுலகம் இயங்குகின்றது.
ஐந்தொழிலால் உலகைத் தொழிற்படுத்தற் பொருட்டாகக் கொள்வதை ஊன நடனம் என்றும் இவ்வகைத் தொழிலால் அருள் செய்வதை ஞான நடனம் என்று கூறலாம் நான்கு கரங்களும் மூன்று கண்களும், பரந்த சடையும், பொன்னிறமும் கூடியவராய் மயில் தோகை சூடிய முடியின் வலப்பக்கம் பிறையும் ஊமத்த மலரும், வலச்சடையின் நுனியில் கங்கையையும் புனைந்து வலக்காதில் மகரகுண்டலம், இடக்காதில் இலையும் பூண்டு, அணிகள் பல அணிந்து புலித்தோல் உடுத்தி பின் வலக்கையில் உடுக்கை பின் இடக்கையில் தீயகலும், முன் வலக்கையில் அபயமும், முன் இடக்கையை நீட்டி ஆடும் தாண்டவம். வலது காலை முயலகன் மீதும் இடது காலை வலப்பாகமாக நீட்டி ஆடுகின்றார். பஞ்சகிருத்திய நடனத்தை ஏஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்..காட்சி: தில்லை

#####

Read 4986 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:04
Login to post comments