gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 08 September 2017 18:19

பைரவ மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தழையும் நல் இன்பங்கள் தருவாய் போற்றி!
தனக்கு ஒப்பில்லாத தலைவா போற்றி!
எனக்கு அருள் தருவாய் இனியா போற்றி!
நூறு வயதும் தருவாய் போற்றி!
நவக்கிரக தோஷங்கள் நீக்குவாய் போற்றி!
பேறுகள் யாவும் தருவாய் போற்றி!


பைரவ மூர்த்தி!

 

கரிய மேகம் போன்ற பெரிய உடலும், சுருண்டு நெரிந்து செந்நிறம் வாய்ந்த தலை மயிரும், யானைத்துதிக்கை போன்ற கரங்களும், தீயைச் சொரியும் செவ்விய கண்களும் பிறைச் சந்திரன் போன்ற வக்கிர தந்தங்களும் கண்டோர் கண்கள் கூசத்தக்க காட்சியும் உள்ள அசுரன் அந்தகன் சிவபெருமானை வணங்கி பஞ்சாக்கினியில் பலகாலம் தவம் செய்து, அரி, அயன் முதலிய அமர்களால் ஆவிசோராமையும், அகற்றவொண்ணாத ஆற்றலும் வேண்டும் என வேண்டிப் பெற்றான்.
வரம் பெற்ற ஆணவத்தில் அந்தகாசுரன் தேவர்களுடன் போரிட்டு வென்று தேவர்கள் அனைவரும் பெண்களைப் போல் கண்களில் மையிட்டு சேலையுடுத்தி தொலை தூரத்தில் வசிக்கவும் ஆடவர் உருவில் யாரும் கண்ணில் தென்படக்கூடாது என ஆணையிட்டான். அப்போதும் அந்தகாசுரனின் துன்பங்கள் தொடர, தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். நீங்கள் அனைவரும் பெண் வேடத்துடனே பார்வதியின் கணங்களுடன் மந்தரமலையில் வசித்துவர ஆலோசனை கூரினார். இது தெரிய வந்த அந்தகாசுரன் படைகளுடன் வர தேவர்கள் அனைவரும் மந்தர மலையிலிருந்து கயிலை அடைந்தனர். அங்கும் அந்தகாசுரன் தொடர்ந்துவர பைரவக் கடவுளைத் தோற்றுவித்து அந்தகாசுரனை அழிக்கும் வழிமுறையை தெரிவித்து அனுப்பினார் சிவபெருமான். கடுமையான போர் நடந்து அந்தகாசுரன் படைகள் தோற்று ஓடியது. ஆயுதங்கள் அனைத்தும் நாசமாயின.
அசுரர்களின் குரு வெள்ளியாகிய சுக்கிரன் அமுத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து அந்தகாசுரனின் படையில் இறந்தவர்களை உயிர் எழுப்ப மீண்டும் போர் நடக்க தகவல் அறிந்த சிவபெருமான் சுக்கிரனை விழுங்கிவிட்டார். அப்போது பைரவர் அசுரனின் படைகளை அடியோடு அழித்தார். அந்தகாசுரனின் தலையை தன் முத்தலை வேலின்ல் குத்தி மேலே தூக்கியெடுத்து சிவபெருமானின் சன்னதி அடைந்தார். அந்தகாசுரனைன் அகந்தை நீங்க அவன் விரும்பியபடி அவனை பூதகணங்களுக்குத் தலைவனாக்கினார். பின் ஒரு காலத்தில் சுக்கிரன் சுக்கிலத்துடன் வெளிவந்து சுக்கிரன் என்ற பெயருடன் இருந்தான்.
ஆலயங்களில் வடகிழக்கு மூலையில் திருமேனி வடிவத்தை ஆடையின்றி நாய் வாகனத்துடன் உக்கிர பார்வையுடன் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் டமருகம், பாசம், சூலம், கபாலம் கைகளில் கொண்டு காணலாம். இவரே ஊரினையும் திருக்கோவிலையும் பாதுகாப்பவர். பைரவ மூர்த்தங்கள் 64 என ஆகமங்கள் கூறினாலும் அவற்றில் சிறப்பானவை எட்டுத் திருமேனிகள். அவை அசிதாங்கன், குரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷணன், குரோதன், சம்மாரன் ஆகியன.
அஷ்டபைரவர்கள் அநேக வீரச்செயல்களை உலக நன்மைக்காகச் செய்தாலும் அதனால் பல உயிர்கள் துன்புற்றதால் அவர்களுக்கும் பாவங்கள் உண்டாயின. அது நீங்கும் பொருட்டு அவர்கள் காஞ்சி, காசி தலங்களில் லிங்கம் அமைத்து வழிபட அவ்விடங்கள் அஷ்ட பைரவேச்சரங்கள் என அழைக்கப்பட்டது. ஆசையை வென்று வாழ அருள் செய்வார்.
சூரியனாலயத்தில் உள்ள பைரவர் மார்த்தாண்ட பைரவர், முருகன் ஆலயத்தில் உள்ள பைரவர் குமார பைரவர், விநாயகர் ஆலய பைரவர் பிரமோத பைரவர், திருமால் தலங்களில் முகுந்த பைரவர் என்று அழைக்கப்படுவர். பைரவர் திகம்பராகத் திகழ்ந்தாலும் பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர் என்பதால் பண்டைக் காலத்தில் பொக்கிஷ சாலைகளில் பைரவரை நிறுவி சுவர்ணாகர்ஷ்ண பைரவர் என்று சிறப்பு பூசைகள் செய்தனர்.
இரணியாட்சன் மகன் அந்தகாசுரனை சங்கரித்து தேவர் துன்பம் அகற்ற எழுந்தருளிய பைரவ மூர்த்தம். காட்சி: காஞ்சி வைரவேச்சுவரம், அழிபடைதாங்கி (காஞ்சி), பிரான்மலை, வடுகன்பட்டி, திருப்பத்தூர், இராமேசுவரம். திருவொற்றியூர், வயிரவன்பட்டி, இலுப்பைக்குடி, நெடுமரம், காரையூர், திருமெய்ஞானபுரம், பெருச்சிக்கோவில், அழகாபுரி, வடுகூர், அம்பர், அம்பர்மாகாளம், காவேரிப்பாக்கம், சிதம்பரம், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வலம்புரி மண்டபத்தில் எட்டு பைரவர்கள் வழிபாடு. காசியில் அனுமன்காட்டில் குரு, துர்கா மந்திரில் சண்டன், விருத்த காளேசுவரர் ஆலயத்தில் அசிதாங்கன், பட்பைரவர் கோவிலில் கபாலன், காமாச்சாவில் வடுக (குரோதன்), தேவரா கிராமத்தில் உன்மத்தன், திரிலோன கஞ்ச்-ல் சம்மாரன், காசிபுராவில் பீஷணன் என எட்டு பைரவர் வழிபாடு. மெகபூப்நகர் (ஆந்திரா), ராமகிரி (நாகலாபுரம்-ஆந்திரா), சீதப்பெட்டா (கர்நாடகம்),

#####

Read 5086 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:20
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27046996
All
27046996
Your IP: 3.147.73.35
2024-04-20 08:14

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg