gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 08 September 2017 18:35

அகோர அத்திர மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐயா கணபதி நம்பியே ஜயஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜயஜய
ஓங்கிய ஆனைக் கன்றே ஜயஜய
ஒளவிய மில்லா அருளே ஜயஜய
அக்கரவஸ்த்து ஆனவா ஜயஜய


அகோர அத்திர மூர்த்தி!

 

சிவன் அருளால் பலவரங்கள் மூலம் உயர்ந்த பேரினையடைந்த சத்ததந்து தான் அடைந்த சிறப்புக்கு சிவனே காரணம் என்பதை மறந்து தனக்கு ஒருவரும் நிகரில்லை என்ற ஆணவத்துடன் ஓர் வேள்வி நடத்த முற்பட்டான். அவ்வேள்விக்கு பிரமன் முதலிய தேவர்களை அழைத்து சிவனை அழைக்காமல் யாகத்தை ஆரம்பிக்க சொன்னான். அங்கிருந்த திருமால் சிவனை வணங்கி நற்பேறுகளைப் பெற்ற நீ அவரில்லாமல் யாகத்தை நடத்துவது சரியன்று என்றார். அங்கிருந்த பிரமன் உள்பட ஏனைய தேவர்களும் அவனுக்கு அக்கருத்தையே வலியுறுத்தின போதிலும் சத்ததந்து அதை ஏற்கவில்லை. கோபங்கொண்ட அவனை சமாதானப்படுத்த பிரம்மன் யாகத்தை வேறுவழியில்லாமல் தொடங்கினான்.
நாரதர் திருக்கயிலைச் சென்று மகதி யாழ் மூலம் சாம வேதத்தை மீட்டினார். பின்னர் சிவபெருமானிடம் சத்ததந்து யாகம் பற்றி கூற பெருமான் மண்டலத்தை தேராகவும், உலகைச் சக்கரமாகவும், அக்னியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும் அமைத்து குமரனை அத்தேரை ஓட்டப்பணித்து வீரபத்திரரிடம் அக்கொடியவனை அழித்துவர ஆணயிட்டர்.
வீரபத்திரன் அகோர வடிவமெடுத்து பூத சேனைகள் புடைசூழ முருகன் தேரோட்ட யாகசாலையை அடைந்து இந்திரன் நான்முகன் சூரியன் ஆகியோரைத் தண்டித்து வருண அத்திரத்தால் யாகத்தை அழித்தார். எதிர்த்து போர் செய்யவந்த சத்ததந்துவை அகோர அஸ்த்திரத்தை ஏவிக் கொன்றார். சத்ததந்துவின் மனைவி கயிலை சென்று மாங்கல்ய பிச்சை கேட்க சிவன் அனைவரையும் மன்னித்து அவரவர்தம் பதவியில் இருக்க அருள் செய்தார்.
சிவனை அழைக்காமல் யாகம் நடத்திய சத்ததந்துவை வீரபத்திரர் மூலம் அகோர அஸ்த்திரத்தை ஏவி கொன்ற வடிவம் அகோர அத்திர மூர்த்தி

#####

Read 7032 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:26
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27037927
All
27037927
Your IP: 18.191.216.163
2024-04-19 03:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg