ஓம்நமசிவய!
கணபதி என்வினை களைவாய் ஜயஜய
ஙப்போல் மழுவொன்றேந்தியோய் ஜயஜய
சங்கரன் மகனே சதுரா ஜயஜய
ஞய நம்பினர்பாலாடியே ஜயஜய
இடம்படு விக்கின விநாயகா ஜயஜய
தட்ச யக்ஞஹத மூர்த்தி!
பிரமன் மகன் தக்கன் கடுந்தவம் செய்து சிவனே தனக்கு மருமகனாக வர வேண்டும் எனவரம் பெற்றான். தனக்குப் பிறந்த மகளை தாட்சாயணி எனப் பெயரிட்டு வளர்த்து சிவனுக்கு மணமுடித்து தந்தான். சிவன் தனக்கு மருமகன் ஆகி விட்டபடியால் எல்லோரும் தனக்கு கட்டுப் பட்டவர்களாக இருப்பர் என எண்ணியிருந்தான். இதை அறிந்த சிவன் தட்சாயணியை அழைத்துக் கொண்டு கயிலை சென்றுவிட்டார். மாமனார் என்ற மரியாதை இல்லாமல் சிவன் நடந்து கொண்டதாக கருதி சிவனை இகழந்து பேசத் தொடங்கினான். தேவர்கள் அவனுக்கு அறிவுறை கூறி கயிலை சென்று சிவனை தரிசனம் செய்யச் சொன்னார்கள். அதை ஏற்று கயிலை சென்ற தக்கனை நந்தியெம்பெருமான், முன்பு சிவனை இகழ்ந்ததால் உள்ளே சொல்ல அனுமதி மறுத்துவிட்டார். சிவனைக் காணமல் திரும்பிய தக்கனுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாக மீண்டும் சிவனை பழித்து பேச ஆரம்பித்தான்.
பிரமதேவன் யாகம் ஒன்று நடத்த சிவபெருமானை அழைக்க அவர் அந்த யாகத்தில் கலந்து கொள்ள நந்தி தேவரை அனுப்பிவைத்தார். யாகம் நடக்க ஆரம்பிக்கும்போது அங்கிருந்த தக்கன் நந்திதேவர் வருவதைப் பார்த்ததும் கோபம் கொண்டான். தந்தை பிரமன் சிவனை அழைக்க அவருக்குப் பதிலாக நந்தி தேவரை அனுப்பியது அறிந்து கோபவயப்பட்டவன், பிரமனை நோக்கி நீ என் தந்தையாக இருப்பதால் உன் தலையை வெட்டாமல் விடுகின்றேன். சிவன் அவிர் பாகம் பெற தகுதியற்றவன். திருமாலே அதற்கு உரியவர் என கூறியதைக் கேட்ட நந்திதேவர் சினம் கொண்டு, மூடா! ஈசனை நிந்திக்கின்றாய். என் இறைவனை இகழ்ந்த நின் தலையொழிக சிவநிந்தனை செய்த உன்னோடு சேர்ந்த தேவர்கள் தீயோன் சூரபன்மனால் துன்புறுக எனச் சாபமிட்டு வெளியேறினார். பயந்த பிரமன் யாகத்தை நிறுத்தி விட்டான்.
இதனைக் கண்ட தக்கன் தானே ஒரு யாகத்தை ஆரம்பித்தான். அனைத்து தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பி சிவனை மட்டும் அழையாமல் விட்டான். அறிவுரை கூறவந்த தாட்சாயணியையும் அவமதிக்க சிவன் தக்கன் வேள்வியை அழிக்க வீரபத்திரரை தோற்றுவித்தார். வீரபத்திரர் யாகத்தை அழித்து அங்கிருந்த தேவர்களையெல்லாம் தண்டித்தார். மனம் வருந்திய பிரம்மன் தங்களையும் தக்கனையும் மன்னிக்க வேண்ட குறை உடலோடு ஆட்டின் தலை பொருத்தப்பட்டு தக்கன் உயிர்ப்பிக்கப் பட்டான். உயிர்தெழுந்த தக்கன் பெருமானைப் பணிந்தான்.
வீரபத்திரர் மூன்று கண்கள், நான்கு கைகள், அக்னிச்சடை, கோரைப்பற்கள், மணி, கபாலம், தேள்மாலை, நாக பூனூல், குறுகிய கால்சட்டை, பாதுகையுடன் இருக்கும் இவர் முகம் சினத்துடன் இருக்கும் கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு ஆகியன வத்திருப்பார். வீரபத்திரர் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், சப்த மாதர்களுடன் வீரபத்திரர் என மூன்று வடிவமுடையவர்.
தன்னைப் பகைத்த தக்கனது யாகத்தை சங்கரிக்க எழுந்தருளிய வடிவமே தக்கவேள்வி தகர்த்த கோலம் தட்ச யக்ஞஹத மூர்த்தி. நிகழ்வு நடந்த தலம்: திருப்பறியலூர். காட்சி: தென்காசி-விசுவநாதர், கோவை-பட்டீசுவரர், திருநெல்வேலி –கிருஷ்ணாபுரம், மதுரை, மயிலாப்பூர், அனுமந்தபுரம், திருவண்னாமலை, பெரும்பேறுகண்டிகை, திருக்கடவூர், செம்பியமங்கலம், கும்பகோணம்-மகாமக பெரியமடம், தாராசுரம் சிதம்பரம் ஆகிய தலங்கள்.
#####