Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 19:34

கௌரிவரப்பிரத மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!
கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!
தாலங் கணக்கீரிடர் காக்க!


கௌரிவரப்பிரத மூர்த்தி!

 

தவமிருந்த மந்திரமலையின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் சிலகாலம் அம்மலையில் வாசம் செய்து வந்தார். அக்காலத்தே அசுரன் ஒருவன் பிரம்மனை நோக்கி உமையின் உடலினின்று தோன்றும் பெண்ணினால் அன்றி வேறு ஒருவராலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என வேண்டி அருள் பெற்றான். வரம் பெற்ற அகந்தையில் அனைவரையும் துன்புறுத்திய அசுரன் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் பிரம்மனிடம் முறையிட, பிரம்மன் சிவபெருமானிடம் அசுரனை ஒழிக்க வேண்டினான்.
சிவபெருமான் உமையை நோக்கி காளி வருக என்றார். உடனே கரிய நிறம் கொண்டவளாக தேவி வந்து, இறைவா இந்நிறத்தில் என்னை அழைத்தது ஏனோ என்றார். விருப்பமில்லா மனைவி மகளிரில் பதருக்குச் சமம், என் நிறத்தை மாற்றி என்னை கௌரியாக மாற்ற விழிகளில் நீர் சிந்தி சிவனிடம் வேண்ட, பெண்ணே! அனைத்து உயிர்களையும் காத்தலே நமது கடமை! ஆதலால் ஒரு காரியம் கருதியே கரிய நிறமுள்ளவளாக அழைத்துள்ளோம். கலங்க வேண்டாம், பின்னாளில் இதனை அறிவாய் என மலர்ந்தருளினார்.
கரிய நிறத்துடன் இமயமலைச் சாரலில் லிங்கமைத்து பூசித்து வரும்போது பிரமன் தேவர்களுடன் வந்து தேவி தமது திருமேனியிலிருந்து ஒரு பெண்ணை தோற்றுவித்து எங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்க வேண்டும் என்றார்.
கரிய காளி தன் கரிய நிறத்தை விலக்க அது துர்க்கையானது. பிரம்மன் அளித்த சிம்ம ஊர்தியில் ஏறிச் சென்று அசுரனை வதம் செய்தார். மந்தார மலையை அடைந்து சிவபெருமானை வணங்கி தனது கருமை நிறத்தால் எய்திய காளி என்ற பெயர் நீங்கவும், பொன்னிறத்துடன் கௌரி என்ற பெயர் நிலைக்கும்படியும் வேண்டிப் பெற்றார். இந்தக் கோலவடிவமே கௌரிவரப்பிரத மூர்த்தி.
தேவர்களுக்கு துன்பம் இழைத்த அரக்கனை அழிக்க காளி வருக என்ற சிவன் கருமை நிறம் நீக்கி துர்க்கா தேவியாகி அரக்கனை அழித்து மீண்டும் சிவனை அடைந்து பொன்னிறமான கௌரியாக அருள் புரிந்த வடிவம். கௌரிவரப்பிரத மூர்த்தி.

#####

Read 5025 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:51
Login to post comments