gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 09 September 2017 10:21

பிரார்த்தனா மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென் திசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!


பிரார்த்தனா மூர்த்தி!



தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவஞானிகள், தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத் தரும் என்றும் அவரின் பத்தினியர் தாமே கற்பில் சிறந்தவர்கள், தங்களின் கற்பின் ஆற்றலால் எதையும் சாதிக்க முடியும் என்று அகந்தை கொண்டிருந்தனர். இவர்களின் ஆணவத்தை அழிக்க எண்ணிய பெருமான் பிச்சை உகக்கும் பெம்மனாகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் மோகினியைக் கண்டதும் காமம் மேலிட, ஒழுக்கத்தையும் தவத்தையும் விடுத்து மோகினியிடம் சல்லாப வார்த்தைகளைப் பேசி மயங்கினர்.
ஒரு ஆடவன் அழகாக இருக்கின்றான் என ஒரு பெண் நினைத்தாலே அப்பெண் தன் கற்பினை இழந்ததற்குச் சமம் என்ற சூழலில் ஆடையின்றி பேரெழில் கொண்ட திருமேனியுடன் வந்த பெருமானின் அழகில் மயங்கி தத்தம் இல்லங்கள் விட்டு அவர் பின்னே சென்றனர். ஊர் எல்லையைக் கடந்ததும் அங்கே தன் கணவர்கள் மோகினியின் அழகில் மயங்கி இருப்பதைக் கண்டனர்.
தங்களது தவமும் யாகமும் ஒழுக்கமும் தமது மனைவியரின் கற்பு நெறியும் கெடக் காரணமாய் இருந்த திகம்பரன் மீது கோபங்கொண்டு அவனை அழிக்க அபிசார வேள்வி செய்து அதில் தோன்றிய நெருப்பு, புலி, மான், மழு, பாம்பு ஆகியவற்றையும் முயலகனையும் திகம்பரன்மீது ஏவபாம்புகள் அணிகலன்களாயின. புலியின் தோல் ஆடையானது. முயலகனை கால் கீழ் அழுத்தி நடனம் புரிந்தார். முனிவர்களுக்கு ஞானம் அளித்து கயிலை அடைந்தார்.
உமாதேவி தாம் சக்தியாய் இருக்கையில் இறைவன் மாலாகிய மோகினியை உடன் அழைத்துச் சென்றும், தான் உடன் இல்லாத சமயத்தில் தாருகாவனத்தில் நடனம் செய்தது கண்டும் ஊடல் கொண்டார். அதைப் போக்க நினைத்த பெருமான், உமையே எனது ஒரு சக்தியே நீயாகவும், திருமாலாகவும், காளியாகவும், துர்கையாகவும் இருக்கின்றது என்பதை நீ அறிவாய். மனைவியாக இருக்கும்போது நீயாகவும், ஆணுருவாகையில் திருமாலாகவும், கோபம் அடையும்போது காளியாகவும், போர் முனையில் துர்க்கையாகவும் விளங்குகின்றீர்கள். இதற்காக கோபமும் ஊடலும் கொள்ள வேண்டாம் என்றார். உமையின் ஊடலைத் தணித்த வடிவம். பிரார்த்தனா மூர்த்தி,
உடனே உமை அத்திருநடனத்தை தரிசிக்க விரும்பினார். அப்போது சிவன் ஆடிய தாண்டவமே கௌரி தாண்டவம் எனப்படும்.
உமையின் ஊடலைத் தணித்த வடிவம். தன்னை விடுத்து மோகினி உருகொண்ட கண்ணனுடன் தருகாவனம் சென்றது கண்டு ஊடல் கொண்ட சக்தியை துதித்து போற்றிய வடிவம், உண்மையை உணர்ந்து இறைவி இறைவனை பிரார்த்தனை செய்த வடிவம் இரண்டும் கலந்த வடிவம் பிரார்த்தனா மூர்த்தி.

#####

Read 6493 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:58
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879190
All
26879190
Your IP: 44.213.99.37
2024-03-19 08:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg