Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:28

லிங்கோத்பவக்காலம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

லிங்கோத்பவக்காலம்!
எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் லிங்கோத் பவ காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்து பிறவா பயனை அடைய முயற்சிப்பது. அந்நேரம் சிவபெருமான் அருவுருவமாக இருந்து பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.. திரியோதசியும் சதுர்தசியும் சந்திக்கும் காலம் லிங்கோத்பவ காலம். அதாவுது 13 நாள் முடிந்து 14 வது நாள் தொடங்கும் காலம். இந்த இரு வேளையும் சந்திக்கும் காலம் தமிழில் சதுர்தசி என்பதை சிவராத்திரி (இரவு) என்பார். இது ஒவ்வொரு வளர்பிறை தேய்பிறை அன்றும் வரும். லிங்கோத்பவ காலம் எப்பொழுது தோன்றும் என்று எந்த பஞ்சாங்கத்திலும் குறிப்பிடுவது இல்லை. நாம் கவனித்து அந்த வேளையில் லிங்க தரிசனம் செய்தால் சிவபெருமானை அடைய வாய்ப்பு பிரகாசம். மகா சிவராத்திரி மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் எனப்படும். மாசி மதம் மஹா சிவ ராத்திரி இரவு முழுவதும் உயிர்கள் அனைத்தும் கண்விழித்து பெருமானை வழிபட்டால் சிவனிடத்தில் செல்லலாம் என்று வேதங்கள் சொல்கின்றது. லிங்கோத்பவ வேலையில் லிங்க தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் நம்முடைய மனதால் எண்ணத்தால் நாவால் அஷ்ட சிம்மாசன நாமம் சொல்லலாம்..
ஸ்ரீ பவாய நம
ஸ்ரீ சர்வாய நம
ஸ்ரீ ருத்ராய நம
ஸ்ரீ பசுபதே நம
ஸ்ரீ உக்ராய நம
ஸ்ரீ மகாதேவாய நம
ஸ்ரீ பீமாய நம
ஸ்ரீ ஈசானாய நம
இந்த நாமங்களைச் சொல்ல முடியாவிட்டால் 
நமசிவய நம
மசிவயந நம
சிவயநம நம
வயநமசி நம
யநமசிவ நம
என்று சொல்ல சொல்ல சிவ கதியினை அடையலாம்.

&&&&&

Read 8955 times
Login to post comments