ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
ஆலயங்கள் உடல் அமைப்பில்!
சிவ சின்னங்கள். திருநீறு, ருத்திராட்சம், பஞ்சாட்சாரம். வில்வம், லிங்கம், என்பதை அனைவரும் அறிவீர். திருநீறு, ருத்திரம் அணிந்து பஞ்சாட்சாரம் ஓதி, வில்வம் சார்த்தி, ஸ்தூல / மானஸ மலர்களால் லிங்கவடிவ பெருமானை வழிபடல் வேண்டும்.
கோவிலின் அமைப்பு இறைவன் சயனித்து இருக்கும் நிலையை வைத்து கட்டப்படுவதாகும். ஒவ்வொரு பகுதியையும் அது இறைவனின் பகுதியாக நினைந்து முன்னோர்கள் வகுத்தபடி வழிபடுதல் சிறப்பு. ராஜகோபுரம்- பாதம், பலிபீடம்- முழங்கால், கொடிமரம்- இனக்குறி, மண்டபம்- வயிறு, உதரம், பிரகாரம்- கைகள், கருவரை- திருமுகம்,கழுத்து, விமானம்-சிகரம்,தலை, கலசம்-சிகை. என உடல் அமைப்பில் இறை ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளது
1.மூலாதாரம்-32முதுகுதண்டு-கொடிமரம்-32வளயங்கள்,
2.தொப்புள்ஸ்தானம்-நந்திபிரதிஷ்டை-எண்ணங்களை அடக்கி மனதை தூய்மைப் படுத்த சிந்தனை,
3.இதயம்-பலிபீடம்-காமம், பொறாமை, ஆணவம் நீங்க,
4.பிரம்மகபாலம்-கர்ப்பகிரகம்-மூலஸ்தானம்,
5.புருவமத்தி-லிங்கம்-ஆண்மஒளி,
6.1000இதழ்கொண்டமூளை-1000கால்மண்டபம்,
7.மூளையின்நீர்நிலை-தீர்த்தம்,
8.தலை-கர்பகிரகம்,
9.முகம்-அர்த்தமண்டபம்,
10.கழுத்து-அந்தராணமண்டபம்,
11.மார்பு-மகாமண்டபம்,
12.வயிறு-மணிமண்டபம்,
13.தோள்கள்-உள்சுற்று,
14.கைகள்-வெளிசுற்று,
15.ஆன்மா-மூர்த்தங்கள்,
16.கண்-கருவறைத்தூண்,
17.விலாஎழும்புகள்-சுவர்கற்கள்,
18.எழும்புகள்-தூண்கள்.
&&&&&