Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:55

கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம்) போக உத்தமம். எந்த காலத்தில் தியானம் செய்ய பலன் தரும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம்) போக உத்தமம். எந்த காலத்தில் தியானம் செய்ய பலன் தரும்! 

கோவிலுக்கு போக இந்த நேரத்தில் பலன் உண்டு என்றில்லை. எல்லா காலங்களிலும் வழிபாடு செய்யலாம். 
குறிப்பாக பக்தர்கள் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது .வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது என்ற பழக்கம் சிறப்பு.
திங்களில் வரும் அம்மாவசை ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகள் மாறும்.
செவ்வாய் கிழமை எமகண்ட நேரத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து விடு பட முடியும் .
புதன் கிழமை சிவ பெருமானை முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில் உத்யோகம் வளர்ச்சி உயர் பதவி கிடைக்கும் .
வியாழன் இரவு கடைசி தரிசனம் (பள்ளியறைக்கு பெருமானை அனுப்புதல்) செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும் .
வெள்ளியும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
சனி கிழமை ராகு காலத்தில் கர்மங்கள் களைந்து விடும்.
ஞாயிறு அன்று ராகு காலத்தில் எதிரிகள் விலகி தைரியம் ஏற்படும்

&&&&&

Read 9317 times
Login to post comments