Print this page
ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 19:45

சிவன் ஏன் அபிஷேகத்தை விரும்புகின்றார்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

சிவன் ஏன் அபிஷேகத்தை விரும்புகின்றார்!

சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரம் மிகவும் வெம்மை உடையது. அவரது கண்டத்தில் உள்ள ஆலகால விஷத்தின் வெம்மை அவ்வப்போது தாக்கும். மாயனத்தில் உள்ள சுடலைச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்வதால் அதன் வெப்பமும் சேர்ந்த நிலையில் குளிர்ந்த அபிஷேகம் சிவனுக்கு பிரியமானதாகும். வில்வமும் குளிர்சியை உண்டு பண்ணும் என்பதலே வில்வத்தால் அர்சிக்கப்படுகிறது.
மாலை நேரம் வெம்மை தகித்தபின் எங்கும் குளுமை பரவத் தொடங்கும் நேரம் அந்தச் சமயத்தில் குளிர்ச்சியை உண்டு பண்ணும் வில்வம் கலந்த தீர்த்தம் அல்லது வில்வத்தை உட்கொள்வது குளுமையால் பரவும் தொற்றுக் கிருமிகளிடமிருந்து உயிர்களைக் காத்துக் கொள்ள உதவும் என்பதே சிவ விருப்பம். இதை அறிந்தே நம் முன்னோர்கள் வில்வதீர்த்தம் அல்லது வில்வத்தை சிவ வழிபாட்டில் இணைத்து உயிர்கள் வளமாக வாழ வழி செய்திருக்கின்றனர்.

&&&&&

Read 10564 times
Login to post comments