Print this page
ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 20:14

வேதங்களில் சொல்லப்பட்ட தவங்கள் !

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமாய் எழுந்தாய் போற்றி அறிவாக மலர்ந்தாய் போற்றி
அகிலத்தின் புகலே போற்றி அறுகினை உவப்பாய் போற்றி
அறுமுகன் அண்ணா போற்றி அமுதமே அனையாய் போற்றி
அரசடி அமர்வாய் போற்றி அன்பர்கள் அகத்தாய் போற்றி

வேதங்களில் சொல்லப்பட்ட தவங்கள் !

1.மானத தவம்- மனதில் செய்யப்பட்ட பெரும் தவம் மானத தவமாகும் தவம் செய்வதில் விருப்பம் கொண்டு சிரத்தையாகச் செய்தல், உண்மையை பேசுதல், மௌனமாக மஹேஸ்வரனை தியானித்தல், ஐம்பொறிகளை அடக்குதல் ஆகும்.
2.வாசிக தவம்- இது வாக்கால் செய்யப்படும் தவம் வாசிகம். ஐந்தெழுத்தை ஜபிப்பது, ஈசானம், பஞ்ச பிரம்ம உருத்திர மந்திரங்கள், உபநிஷதப் பகுதிகளை ஓதுதல், ஸ்தோத்திரப்பாடல்களைப் பாடுதல், தர்மங்களைச் செய்தல் ஆகியனவாகும்.
3.காயிக தவம்-இது உடலால் செய்யப்படுபவை. சிவபெருமானைப் பூஜித்தல், திருக்கோவில் வலம் வருதல், அண்ணல் முன்பு அடி தொழுதல், திருப்பதிகள் தோறும் சென்று தரிசித்தல், திருப்பணி புரிதல், உடல் வருந்த புனித நதிகளில் நீராடுதல் ஆகியவையாம்.
எல்லாவற்றிலும் சிறப்பானது காயிக தவம். சிவ தீர்த்தங்களுக்குச் சென்று நீராடுவது சிறந்தது. அதைவிட சிறந்தது கங்கையில் நீராடுவதும் மற்ற நதிகளில் நீராடுவதும் ஆகும். நதிகள் எல்லாம் கடலில் சங்கமிப்பதால் கடலில் நீராடுவது எல்லாவற்றையும்விட சிறப்பு. அப்படி கடலில் நீராடும்போது கணவனுடைய கை, மகனுடைய கை அல்லது பசுங்கன்றின் வால் என்ற ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொண்டு நீராடுவதே சரியான முறை.

&&&&&

Read 11458 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 09:31
Login to post comments