Print this page
ஞாயிற்றுக்கிழமை, 12 November 2017 20:23

தண்டம் சமர்ப்பித்தல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆதியாம் தேவே போற்றி ஆகம முடியே போற்றி
இந்தொழிற் சடையாய் போற்றி இலங்குமோர் கொம்பாய் போற்றி
இருள்கடி சுடரே போற்றி இதயத்துள் இனிப்பாய் போற்றி
இடரெல்லாம் களைவாய் போற்றி இளயானை முகத்தாய் போற்றி

தண்டம் சமர்ப்பித்தல்! 

தண்டம் என்றால் கோல் அல்லது கழி எனலாம். கையில் பிடித்திருக்கின்ற கோலை விட்டு விட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். ஒன்றுக்கும் உதவாத பொருளையும் தண்டம் என்பர். ஒரு உடலில் உள்ள ஆத்மா நீங்கிவிட்டால் அது வெறும் பிண்டம். அது தண்டம். இந்த தண்டத்தை தூக்கிப் பிடித்து ஆட்டுகின்ற சக்தி இறைவன் அளித்தது ஆகும். நாம் தூக்கி நடத்துகின்றோம் என்ற அகந்தையை விட்டு விட்டதற்கு அடையாளமாக ஈசன்முன் சரீரத்தை கீழே போடவேண்டும் என்பதையே தண்டம் சமர்ப்பித்தல் ஆகும். இந்த உடம்பை பாதுகாக்கும் பொறுப்பை பூரணமாக உன்னிடம் போட்டேன் என்பதற்கு அடையாளம்தான் சரீரத்தை தரையில் போடுவதாகும். அதாவது அஷ்டாங்கமும் நிலத்தில் படுமாறு வழிபடுதல்.

&&&&&

Read 12367 times Last modified on திங்கட்கிழமை, 27 November 2017 11:21
Login to post comments