ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை பிரம்மன்
வழிபடவேண்டிய பைரவர் தலம் பிரம்மசிரகண்டீஸ்வரர்-கண்டியூர்,
வழிபடவேண்டிய தெய்வம் பாண்டவதூதர்- காஞ்சி
பலன்கள் நல்ல நண்பர் அமைவர்.எல்லா நிலைகளிலும் அவரின் உதவி கிட்டும்
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் பக்தவச்சலப் பெருமாள்-திருக்கண்ணமங்கை, ஜம்பைநாதர்-ஜம்பை-விழுப்புரம், ஜம்புநாதர்-கழுகுமலை, ஜம்புகேஸ்வரர்-செம்பாக்கம், ஜம்புகேஸ்வரர்-கொரட்டூர், ஜம்புநாதர்-நெல்லிச்சேரி, ராஜகோபாலசுவாமி-மன்னார்குடி, வேணுகோபாலன்-பெருமாள்அகரம்(கொரடாச்சேரி), ரங்கநாத பெருமாள்-திருவரங்கம் (திருக்கோவிலூர்), கிருஷ்ணன்-திருக்கண்ணபுரம், கிருஷ்ணன்- திருக்கண்ணங்குடி.,பாண்டவதூதர்-காஞ்சிபுரம்.
வழிபடவேண்டிய கிரகம் சந்திரன்
நட்சத்திரத்திற்குரிய மரம் நாவல்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளங்கள் செய்யூரில்- கட்கதாரி
வழிபட வேண்டிய சித்தர்கள் ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
வழிபடவேண்டிய நாயன்மார்கள் நந்தணார், திருநாளைப் போவார், நேச நாயனார், மங்கையர்கரசி நாயனார்.
$$$$$