ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை பிரகஸ்பதி
வழிபடவேண்டிய பைரவர் தலம் ஆசினபைரவர்-ஸ்ரீவாஞ்சியம்
வழிபடவேண்டிய தெய்வம் அட்சயபுரீஸ்வரர்-அபிவிருத்திநாயகி-விளங்குளம் பேராவூரணிஅருகில்.
பலன்கள் அன்னதானம்-சனிகிரகபலன்கள் நன்மை.திருமண பிராப்தி.
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் சாரநாதப் பெருமாள்-திருச்சேறை, அரிசிலிநாதர்-ஒலிந்தியாப்பட்டு, பசுபதீஸ்வரர்-ஆவூர்(குடந்தை), உமாமகேஸ்வரர்-கோனேரிராஜபுரம், பருத்தியப்பர்-பரிதிநியமம், திருமேனிநாதர்-திருச்சுழி, பரமசுவாமி-அழகர்கோவில்.
வழிபடவேண்டிய கிரகம் சனி
நட்சத்திரத்திற்குரிய மரம் அரசு
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- விசால நேத்ர
வழிபட வேண்டிய சித்தர்கள் பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
வழிபடவேண்டிய நாயன்மார்கள் நமிநந்தி நாயனார் , சக்தி நாயனார், முனையடுவார் நாயனார், செருத்துணை நாயனார், சேக்கிழார்
$$$$$