ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.
திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு
வழிபடவேண்டிய பைரவர் தலம் மாரிதாண்டபைரவர்-வைரவன்பட்டி
வழிபடவேண்டிய தெய்வம் பிரசன்ன வெங்கடேச பெருமாள்-திருபாற்கடல்-காவேரிபாக்கம்-4
பலன்கள் காதுகேளாதோர் வழிபாடு சிறப்பு
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மகாலிங்கேஸ்வரர்-திருவிடைமருதூர், நீலகண்டேஸ்வரர்-திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டினம்), மாசிலாமணிநாதர்-திருமுல்லைவாயில் (ஆவடி), பிரசன்னவெங்கடேச பெருமாள்-திருபாற்கடல் (காவேரிப்பாக்கம்)
வழிபடவேண்டிய கிரகம் சந்திரன்
நட்சத்திரத்திற்குரிய மரம் பராய்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- கதாபரணி
வழிபட வேண்டிய சித்தர்கள் திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர்,, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம். ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.
$$$$$