ஓம்நமசிவய!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை குபேரன்
வழிபடவேண்டிய பைரவர் தலம் அஷ்டபுஜபைரவர்-கொக்கராயன்பேட்டை,தஞ்சை
வழிபடவேண்டிய தெய்வம் திருஆனேஸ்வரர்-காமாட்சி. ரங்கநாதபுரம். திருக்காட்டுப்பள்ளி அருகில்
பலன்கள் ஆயுட்காலத்தில் நல்வாழ்க்கை வழிபாடு.
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் பிரம்மபுரீஸ்வரர்-திருக்குவளை (எட்டுக்குடி)
வழிபடவேண்டிய கிரகம் குரு(வியாழன்)
நட்சத்திரத்திற்குரிய மரம் மருதம்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- கோரரூப
வழிபட வேண்டிய சித்தர்கள் பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி.– திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் –திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம், ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் –பந்தனம்திட்டா.
பூரட்டாதி 4 (மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.
$$$$$