ஓம்நமசிவய!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
&&&&&
தசமி திதி!
திதிக்குரிய விநாயகர்- க்ஷிப்ர கணபதி. பால் ஆகாரம் சாப்பிடவும்- பிரம்மாவல் தோற்றுவிக்கபட்ட பத்து தேவியர்களை தயிர் மட்டும் உண்டு பூஜை செய்வது சிறப்பு. பத்து தேவியர்களும் பத்து திசைகளை குறிப்பது ஆகும். அவர்களுக்கு 1. பூர்வா-இந்திரன், 2. பச்சிமா-வருணன், 3. உத்திரம்-குபேரன், 4. தக்ஷிணம்-யமன், 5. ஊர்த்தும்-சுவாயம்பு, 6.அத்வம்- சேஷநாகம், 7. ஆக்னேயம்-அக்னி, 8. நைருதி-நிருதி, 9. ஈசானம்- சங்கரன், 10. வாயவ்யம்- வாயு என பத்து தேவர்களை பிரம்மா மணம் செய்து வைத்தார்.
சுக்லபட்ச பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. அசுரர்களை வதம் செய்வதற்காக பகல் நேரத்தில் அவர்களுடன் போரிடும் அம்பிகை ஒய்வெடுக்கும் இரவு நேரத்தில் அம்பிகையை உற்சாகமூட்டும் விதமாகத் துதித்து போற்றிடும் தினங்களே நவராத்திரி. நவம் –புதுமையான, ராத்ரம்- மங்களம். வாழ்வில் பழைய வினைகளைப் போக்கி தற்போதைய செயல்களுக்கு ஏற்ப மங்களமான நன்மைகளைப் பெறுவதற்காக அம்பிகையை வழிபடும் அந்த இரவுகளே நவராத்திரி. தன்னை வணங்கிடும் பக்தர்களின் மனதில் இருந்து தாமஸ குணத்தினால் ஏற்படும் தீவினைகளை நீக்கும் நாட்கள் நவராத்திரி. நவராத்திரியில் வரும் தசமியே விஜயதசமி. மகிசாசூரனை வதம் செய்த இந்நாள் விஜயதசமி. இந்நாளில் தொடங்கும் எல்லா நல்ல காரியங்களும் வெற்றியுடன் முடியும்.
$$$$$