ஓம்நமசிவய!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
&&&&&
துவாதசி திதி!
திதிக்குரிய விநாயகர்- லக்ஷ்மி கணபதி, லட்சுமி விஷ்ணுவின் பத்தினியான நாள். கீரை ஆகாரம் சாப்பிடவும்.
ஏகாதசி, துவாதசி இரண்டும் சிறப்பான நாட்கள். ஏகாதசி நாள் விரதம் இருந்து துவாதசியன்று அகத்தி, நெல்லி சேர்த்த உணவு உண்பது சிறப்பு. இது துவாதசி பாரணை எனப்படும். விஷ்ணு நெல்லி மரமாக உருவெடுத்தபோது அவருடன் எப்போதும் வாசம் செய்யும் லட்சுமி அந்தமரத்தில் நெல்லிக்கனியாக இருந்ததால் ஏகதாசி விரதம் இருந்த மறுநாள் துவாதசியன்று நெல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். ஏகாதசி மரணம் துவாதசி தகனம் என்பது பழமொழி. வாயுவின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீநாராயணன் விஷ்ணு வாக ஆன நாள்-
$$$$$