gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 12 April 2019 12:42

சிவ திருவிளையாடல்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

சிவ திருவிளையாடல்கள்!

சிவன் என்றால் மங்கலமானவன், இன்பம் தருபவன் என்று பொருள். மங்கலமான சிவன் மக்களுக்கு மங்கலங்கள் தருபவனாகவும் பேரின்ப பேறான வீடு பேற்றை, முக்தியை அளிப்பவனாகவும் விளங்குகின்றான். ஒரு நகரத்தை அடைய பல வழிகள் இருப்பது போல பேரின்பமாகிய வீடு பேற்றை அடைவதற்கு பல வழிகள் உள்ளன. மக்கள் மனம் விரும்பும் தெய்வத்தை வணங்கி முற்றிலும் சரண் அடைந்து வீடுபேற்றை அடைய முயலுகின்றனர். ஆனால் தன்னை வணங்கும் அடியவர்களுடன் நெருங்கி விளையாட விருப்புவன் சிவன். அடியவர்களை நெருங்கி விளையாடி சோதித்து காட்சி கொடுத்து பேரின்ப பேறாகிய வீடுபேற்றை அளித்தவன் சிசபெருமான். அப்படி அடியவர்களுடன் சிவன் நெருங்கிய திருவிளயாடல்களை திருவிளையாடல் புராணம் என்பர். அவை அறுபத்திநான்கு எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த திருவிளையாடல்கள் மனித சமுதாயத்தின்மேல் இறைவனுக்கிருந்த அன்பை புலப்படுத்துவனவாய் இருக்கின்றது. உலகத்து உயிர்களுக்குள் நிறைந்துள்ள ஆன்மாக்கள் இறைவனிடம் இருந்து வந்தவை என்பதும் அவை பிறவிப்பயனால் வினைகளைப் பெற்று பின் வினை நீங்கி இறைவனைச் சென்று சேரும் என்பதை இந்த திருவிளையாடல்கள் உணர்த்துகின்றன. குருஸ்ரீ பகோரா

அந்த அறுபத்தி நான்கு திரு விளையாடல்கள் :.

1.குருவை இழந்த இந்திரன் சாபத்தை போக்கியது.

2.வெள்ளை யானைக்கு துர்வாச முனிவரால் வந்த சாபம் தீர்த்தது.

3.கடம்ப வனத்தை அழித்து நாடாக்கியது.

4.மலயத்துவச பாண்டியனுக்கு உமாதேவி மகளாய் பிறந்தது.

5.சிவபெருமான் சோமசுந்தரராய் வந்து தடாதகைப் பிராட்டியரை மணம் செய்து கொண்டது.

6.பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களுக்கு வெள்ளி அம்பலத்துள் திருக்கூத்து தரிசனம் காட்டி அருளியது.

7.தடாதகை பிராட்டியார் பொருட்டு குடையாளாகிய குண்டோதரனுக்கு அன்னமிட்டது.

8.குண்டோதரன் பொருட்டு வைகையையும் அன்னக் குழியையும் வருவித்தது.

9.தடாதகை பிராட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சனமாலை நீராட ஏழு கடல்களை அழைத்தது.

10.காஞ்சனமாலை நீராட சொர்க்கத்திலிருந்த மலையத்துவச பாண்டியரை வரவழைத்தது.

11.தடாதகை பிராட்டியரிடம் உக்கிரகுமாரன் மகனாகப் பிறந்தது.

12.உக்கிரகுமாரனுக்கு வேல், வளை, செண்டளித்தது.

13.கடல் வற்ற வேல் எறிந்தது

14.உக்கிரகுமருடன் போர் புரிந்த இந்திரன் முடிமேல் வேல் எறிந்தது.

15.மேருமலையிலிருந்த செல்வத்தை எடுக்க முற்பட்டபோது அதற்கு ஒப்புக்கொள்ளாத மேருவை செண்டால் எறிந்தது.

16.வேத்ததிற்கு பொருளறியாத ரிஷிகளுக்கு பொருள் கூரி விளக்கியது.

17.பாண்டிய மன்னனின் மகனின் கீரிடத்திற்காக இரத்தினம் விற்றது.

18.மதுரை மீது வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது.

19.வருணன் விட்ட மழையைத் தடுத்து நான் மாடல் கூடலாக்கியது.

20.எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளி சித்துக்கள் செய்தது.

21.பாண்டியனுக்காக கல்யானையை கரும்பு திண்ண வைத்தது.

22.மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையைக் கொன்றது.

23.கௌரியம்மையின் பொருட்டு விருத்த குமாரர் பாலரானது.

24.பாண்டியன் பொருட்டு கால் மாறி ஆடியது,

25.கொலைக்கஞ்சிய வேடன் பொருட்டு, பழிக்கஞ்சி, வேண்டிய பாண்டியனுக்காக வணிகன் திருமணத்தில் சாட்சி காட்டியது.

26.தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனது மிகப்பெரிய பாவத்தைப் போக்கியது.

27.வாட்படை ஆசிரியரின் மனைவியை வலிமையின் காறணமாக காதலித்த மாணவனின் கையை வெட்டியது.

28.சமணர் மதுரை மீது ஏவிய நாகத்தை அழித்தது.

29.சமணர் அனுப்பிய பசுவை நந்தி தேவரை அனுப்பிக் கொன்றது.

30.சவுந்தர சாமாந்தன் எனும் சேனாதிபதியின் பொருட்டு போர்ச் சேவகராய் மெய்க் காட்டியது,

31.பாண்டியனுக்கு உலவாக்கிழி அருவியது.

32.மதுரை வீதியில் இருந்த ரிஷி பத்தினிகள் பொருட்டு வளையல் விற்றது.

33.இயக்கியர்களுக்கு அட்டமாசித்தி வழங்கியது.

34.சோழன் பொருட்டு மீன்முத்திரை பொறித்திருந்த கதவை திறக்கச் செய்து தரிசனம் தந்தது. அவன் சென்றபின் மீண்டும் இரிஷப முத்திரைப் பொறித்தது.

35.பாண்டியன் படைகளுக்கு தண்ணீர் பந்தல் வைத்தது.

36.பொன்னையாள் பொருட்டு இரசவாதஞ் செய்தது.

37.மதுரை மீது படை எடுத்து வந்த சோழனை மடுவில் ஆழ்த்தியது.

38.வேளாளராகிய அடியவர் பொருட்டு உலவா நெற்கோட்டை அருளியது.

39.தாயத்தார் வழ்க்கு தொடுக்க மருங்கிய வணிகன் மருகன் பொருட்டு மாமனாக வந்து வழக்கு தீர்த்தருளியது.

40.வருண தேவர் பொருட்டு சிவலோகம் காட்டியது.

41.இசைவல்ல பாணபத்திரர் பகைவனை விறகு விற்பவராய் வந்து இசைபாடி ஓடச் செய்தது.

42.பாணபத்திரர் பொருட்டு சேரமானபெருமான் நாயண்மார்க்கு திருமுகம் தந்தருளியது.

43.பாணபத்திரர் மழையால் வருந்தாது பாட பலகையிட்டது.

44.ஈழதேசத்துப் பாண்வல்லாளை பாணபத்திரர் மனைவி வெல்ல அருள் செய்தது.

45.தாயிழந்த பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்தது.

46.பன்றிக் குட்டிகளைப் பாண்டியர்க்கு மந்திரியர் ஆக்கியது.

47.கரிக்குருவிக்கு உபதேசம் செய்தது.

48.நாரைக்கு முக்தி கொடுத்தது.

49.பிரளயத்தால் அழிந்த மதுரை மாநகரின் எல்லையை அரவங்கணத்தால்-(பாம்பு) வளைத்து அறிவித்தது.

50.பாண்டியன் பொருட்டு படைத்துணை சென்று சுந்தரப் பேரம் செய்தது.

51.பாண்டியன் பொருட்டு தருமிக்கு ஐயந்தீர்க்கும் கவிதந்து கிழியறுத்துக் கொடுப்பித்தது.

52.தருமிக்கு தந்த கவிக்கு குற்றம் கூரிய நக்கீரரைப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்திப் பின் கரை ஏற்றியது.

53.நக்கீரருக்கு இலக்கணம் உரைத்தது.

54.நக்கீரர் முதலிய புலவர் பொருட்டு சங்கப் பலகை தந்தது.

55.சங்கத்தார் கலகத்தை மூங்கைப்பிள்ளையாய் தீர்த்தது.

56.பாண்டியருடன் கோபித்து நீங்கிய இடைக்காடர் பிணக்கு தீர்த்தது.

57.பரதவர் குலத்துப் பெண் பொருட்டு வலை வீசீ அவளை மணந்தது.

58.வாதாவூரடிகளுக்கு-மாணிக்கவாசகருக்கு உபதேசித்தது.

59.அரசனுக்கஞ்சிய வாதாவூராருக்காக நரிகளை பரிகளாக்கியது.

60.பாண்டியனுக்களித்த பரிசுகளை நரிகளாக்கியது.

61.வாதாவூரடிகள் பொருட்டு வைகையில் வெள்ளம் வரச்செய்து அதை அடைக்க ஏவிய வந்திக்காக கூலி ஆளாய்ச் சென்று பிட்டுக்கு மண் சுமந்தது.

62.திருஞான சம்பந்த சுவாமிகளால் கூன்பாண்டியன் கரத்தையும் கூனையும் நீக்குவித்தது.

63.சம்பந்த சுவாமிகளின் வாதத்தில் தோற்ற சமணர் கழுவேறியது.

64.வாணிகப் பொண்ணுக்குச் சாட்சியாக வன்னி மரமும் கிணறும் லிங்கமும் வரச் செய்தது.

#####

Read 11426 times Last modified on வியாழக்கிழமை, 29 December 2022 11:10
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27080254
All
27080254
Your IP: 3.145.15.205
2024-04-25 22:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg