Print this page
சனிக்கிழமை, 27 July 2019 09:01

"இந்திரனும், மறைக் கடவுள்களும்" !

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#*#*#*#*#

6. "இந்திரனும், மறைக் கடவுள்களும்" !

20 வகையான மறைக் கடவுள்களும் (இந்திரனுடன் சேர்த்து), செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளும் கூறப்படுகின்றது

இரண்டு, இரண்டாக கடவுள்களை பிரித்து, 21 "மறைக் கடவுள்களை" போற்றும் இந்தப்பகுதியில், முதலில் முழு முதற்கடவுளும், பின் ஒவ்வொரு 'மறைக் கடவுளும்' 'இந்திரனை சேர்த்து போற்றப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் இரண்டு கடவுள்களை சேர்த்தற்கு காரணம், நாம் செய்யும் வேள்வியில் அவர்களை எழுந்தருளச்செய்தலும், பின் ஒருங்கே கிடைக்கும் நற்பேறுகளுமேயாகும. சமக அறிமுகத்தில் அக்னி தேவனும், விஷ்ணுவும் பாடப்பட்டுள்ளனர். ஏன் இந்திரனை ஒவ்வொரு கடவுள்களுக்கும் பின்னால் சேற்கப்பட்டுள்ளது? சமகம் 6வது பிரிவை 'அர்தேந்த்ரம்' என்று 'ப்ராஹ்மணம்' குறிப்பிடுகிறது, அதாவது 'பாதி' இந்திரன் என்று, ஏனென்றால், பிற்பகுதியில், ஒவ்வொரு கடவுள்கூட இந்திரன் சேர்க்கப்படுகிறான். இதற்குக் காரணம், நாம் அர்ப்பணிக்கும் பொருட்களில் முக்கால் பங்கு இந்திரனால் பெறப்படுகிறது. இந்திரன் 'கடவுள்களின் அரசன்', அதனால் ஒவ்வொரு அர்பணிப்பிலும், பாதி பகுதியை அவன் பெறுகிறான். 'கடவுள்களுக்கு, இந்திரனைச் சேர்த்து, வழிபடும் இப்பகுதியை 'அர்தேந்த்ரம்' என்று குறிப்பிடுவது சிறந்தது.

சமஸ்கிருதம்::
:
அக்னிச்சம இந்த்ரச்ச மே ஸோமச்ச ம இந்த்ரச்ச மே சவிதா ச ம இந்த்ரச்ச மே சரஸ்வதீச ம இந்த்ரச்ச மே பூஷா ச ம இந்த்ரச்ச மே ப்ருஹசஸ்பதிச்ச ம இந்த்ரச்ச மே மித்ரச்ச ம இந்த்ரச்ச மே வருணச்ச ம இந்த்ரச்ச மே த்வஷ்டா ச ம இந்த்ரச்ச மே தாதா ச ம இந்த்ரச்ச மே விஷ்ணுச்ச ச ம இந்த்ரச்ச மேச்விநௌ ச ம இந்த்ரச்ச மே மருதச்ச ம ச ம இந்த்ரச்ச மே விச்வே ச மே தேவா இந்த்ரச்ச மே ப்ருதிவீ ச ம இந்த்ரச்ச மேந்தரிக்ஷஞ்ச ம இந்த்ரச்ச மே த்யௌச்ச ம இந்த்ரச்ச மே திசச்ச ச ம இந்த்ரச்ச மே மூர்த்தா ச ம இந்த்ரச்ச மே ப்ர்ஜாபதிச்ச ம இந்த்ரச்ச மே
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

இரட்டை கடவுள்கள் எனக்கு கருணைகாட்டட்டும், அக்னியும், இந்திரனும்; ஸோமனும், இந்திரனும்; மேலும் சவிதாவும் இந்திரனும்; சரஸ்வதியும், இந்திரனும்; பூஷாவும் இந்திரனும், ப்ருஹஸ்பதியும் இந்திரனும்; மித்ரனும், இந்திரனும்; வருணனும், இந்திரனும்; மேலும் த்வஷ்டாவும், இந்திரனும்; விஷ்ணுவும், இந்திரனும்; இரட்டையர்களான அஷ்வினிகளும், இந்திரனும்; மருத்துகளும், இந்திரனும்; விஷ்வ டேவர்களும், இந்திரனும்; நிலமும், இந்திரனும்; சொர்க்கத்திற்கும் - நிலத்திற்கும் - இந்திரனுக்கும் உள்ள இடைவெளியும், இந்திரனும்; வாணவருலகமும், நான்கு திசைகளும், இந்திரனும்; மேல்திக்கும், இந்திரனும்; ப்ரஜாபதியும், இந்திரனும் எனக்கு கருணை மழை பொழியட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

Read 3475 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:21
Login to post comments