Print this page
சனிக்கிழமை, 27 July 2019 09:13

"எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் "வாழ்த்தும், வேண்டுதலும்"!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#*#*#*#*

 

11. "எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் "வாழ்த்தும், வேண்டுதலும்"!

41 பொருட்களும், இயற்கையின் கொடையை இறைவனின் அன்பின் வடிவமாய்ப் பாவித்து வேண்டப்படுகின்றன 

 

இப்பகுதியை "வாழ்த்தும் பிரிவு" என்று கொள்ளலாம். 41 பொருட்களில், ஒன்றிலிருந்து 17 வரையுள்ள ஒற்றைப்படை எண்களும், 18 முதல் 29 வரை உள்ள இரட்டைப்படை எண்களும், மேலும் முதல் பிரிவில் உணவுப்பண்டங்களின் கோரிக்கையை அடுத்து, அதே சுழற்சியில் வரிசையாக மீண்டும் கோரப்படுகின்றது. ஏன் எண்கள் கேட்கப்படுகின்றது? ஒற்றைப்படை எண்கள் கடவுள்களுக்கு உகந்தது (காயத்ரி மந்த்ரம் 33 வார்த்தைகளைக் கொண்டது); இரட்டைப்படை எண்கள் மனிதனுக்கு உகந்தது (மனிதனுக்கு ஜகதி அளவை 48 வார்த்தைகளைக் கொண்டது). ஆனால், இங்கு முன்மாதிரி சுருக்கமாக முடிக்காமல், விரிவாக வைக்கப்படுவதோடுமட்டுமல்லாமல், தூண்டித்துருவி அதன் அடிப்படைக் காரணங்களை ஆராய்கின்றது. எனக்கு உணவுப்பண்டங்களும் அதன் சாகுபடியும், மீண்டும், மீண்டும் வளரும் பயிர்களும், வருணக்கடவுளின் கருணையினால் பெய்யும் மழையும், அம்மழையினால் ஏற்படும் செழிப்பும், அர்ப்பணிக்கப்படும் பொருட்களைக் கொண்டு கதிரவன் எப்படி கருணையினால் முகில்களாக மாற்றி மழை பெய்யச்செய்கிறானோ அந்த ஒளியின் செயலும், மேலுலகவீதியில் உலாவும் கதிரவனின் அழகும், காலத்தினூடேயும், வானத்தினூடேயும் உலாவும் முழுமுதல் இறையும் (பரப்ப்ரம்மமும்) அவன் கருணையும், யார் கடைசியாக பிறப்பானோ, எல்லோரும் இறந்த பின்னும் உயுரோடு இருப்பானோ அந்த 'முழுமுதல் இறையின் அன்பும், நம்மைக் காப்பவனும், உள்ளேயும், வெளியேயும் எல்லாமாகவும் இருந்து 'முழுநிறைவாக எவன் ஒளிர்கிறானோ அவனுடைய அன்பும் என் மீது கொட்டப்படட்டும் - என்று வேண்டப்படுகிறது. சுருக்கமாக, நம்மைக் கட்டுப்படுத்தி வாழ்வின் மயக்கத்திலிருந்து கரைசேர்ப்பவனும், எல்லாவித துரும்பிலும், செயலிலும், உலகிலும் இருப்பவனும், நினைத்துப் பார்க்கமுடியாத உருவத்தை உடையவனுமாகிய அந்த 'முழுமுதல் கடவுளின்' அன்பைக் கோருகின்றது.

சமஸ்கிருதம்::

ஏகா ச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம ஏகாதச ச மே த்ரயோத ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே நவதச ச ம ஏகவிக்கும்சதிச்ச மே த்ரயோவிக்கும்சதிச் ச மே பஞ்சவிக்கும் சதிச்ச மே ஸப்தவிகும்சதிச்ச மே நவவிக்கும்சதிச்ச ம ஏகத்ரிக்கும்சச்ச மே த்ரயஸ்த்ரிக்கும்சச்சமே சதஸ்ரச்ச மேSஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விக்கும்சதிச்ச மே சதுர்விக்கும்சதிச்ச மேSஷ்டா விக்கும்சதிச்ச மே த்வாத்ரிக்கும்சச்ச மே ஷ்ட்த்ரிக்கும்சச்ச மே சத்வாரிக்க்கும்சச்ச மே சதுச்சத்வாரிசச்ச மேSஷ்டா சத்வாரிக்கும்சச்ச மே சதுச்ச த்வாரிக்கும்சச்ச மேSஷ்டாசத்வாரிக்கும்சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சாபிஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்தா சவ்யச்னியச்சாந்த்யாயனஷ்ச பௌவனஷ்சபுவனஷ்சாதிபஷ்ச ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!


ஒன்றாயுள்ள தத்துவமும் ஒற்றைப்படை எண்களான மூன்றாயுள்ளதும், ஐந்தாயுள்ளதும், ஏழும், ஒன்பதும், பதினொன்றும், பதின்மூன்றும் பதினைந்தும், பதினேழும், பத்தொன்பதும் இருபத்தொன்றும், இருபத்து மூன்றும், இருபத்தைந்தும், இருபத்தேழும், இருபத்தொன்பதும், முப்பத்தொன்றும், முப்பத்து மூன்றும் மற்றும் இரட்டைப்படை எண்களான நான்கும், எட்டும், பன்னிரெண்டும், பதினாறும், இருபதும், இருபத்து நான்கும், இருபத்தெட்டும் முப்பத்திரண்டும் முப்பத்தாறும் நாற்பதும், நாற்பத்து நாலும், நாற்பத் தெட்டும், உணவும், அதன் உற்பத்தியும் அதன் படிப்படியான வளர்ச்சியும், அதனை ருசித்து, ரசித்து சுவைக்கும் கொடுப்பிணையும், மற்றும் எல்லவிதமான உற்பத்திக்கு முதன்மையானவனும், தவிர்க்க முடியாதவனுமான கதிரவனும், மேலுலகமும்; அதன் தலைவரும், யார் வானம், காலம், செயல் இம்மூன்றையும் கடந்து ஒளிர்கிறானோ அந்த 'முழுமுதற் கடவுளின்' அன்பும், மற்றும், யார் எல்லாப் பொருட்களுக்கு பின்னால் கடைசியாக பிறக்கிறானோ, யார் எல்லாப் பொருள்கள் அழிந்தபின்னும் சலனமில்லமால் நிற்கிறானோ "அவனுடைய கருணையும்", யார் இந்த நிலத்தில் நிலமாகவே ஊடுருவி நின்று தாங்குகிறானோ, யார் எல்லாவிதமான அசையும், அசையாப் பொருட்களில் ஊடுருவி, மனமாகவும், திறனாகவும், செயலாகவும், சிந்தனையாகவும், காத்து வழிநடத்தும் ஆசானாகவும் அழிந்தும் அழியாமல் நிற்கிறானோ அந்த 'முழுமுதல் இறையான ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்குக் கிடைக்கட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

Read 3562 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:26
Login to post comments