ஓம்நமசிவய!
கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
#####
கல்வி!
290. உடல் தோன்றிய குறிப்பை அறிந்தேன். உயிர் அந்த உடலுடன் பொருந்திய காரணத்தை அறிந்தேன். அதனால் தேவர்களின் தலைவன் தடையின்றி என் உள்ளத்து நிறைந்தனன். உவர்ப்பு சுவை ஏற்படுத்தா கல்வி கற்றேன் நான்.
291. கல்வியைக் கற்றவர் எண்ணிப் பார்க்கும் காலத்து அவர்களது கருத்தில் ஞானக்கண் புலனாகி உண்மையைச் சிந்தித்து தான் கண்டவற்றை மற்றவற்கு சொல்லும்போது ஒரு கல்தூண் போன்று சலனமின்றி இருந்து உணர்த்தி அவருக்கும் ஞானக்கண் உண்டாகுமாறு செய்வர்.
292. உடலில் உயிர் உள்ளபோதே உடல் தன்மை நிலையானது இல்லை என்பதை அறிந்து உயிருக்கு உறுதி தரும் இறை ஞானத்தை பெற முயற்சி செய்யுங்கள். அவ் உடலின் பாவங்கள் எல்லாம் விலகும். குற்றம் இல்லா சொற்களைச் சொல்லி இறைவனை துதியுங்கள். எதையும் ஒப்பிட்டுச் சொல்ல இயலாத பேரொளியாக சிவன் தோன்றுவான்.
293. உலகியல் கல்வியைக் கற்றவர் உண்மையான கல்வி அறிவின்று பிரணவத்தினின்று மாறுபட்ட வழியில் செல்வர். உலகியல் பற்றினால் குண்டலியின் ஆற்றலை பெருக்காமல் வீணாக்குவர். இரவு பகல் என்று நினையாமல் இறைவனை வழிபடுங்கள். இரசவாதத்தால் செய்த பொன்போன்று குண்டலினி ஆற்றலால் அழியாத உடல் அமையும்.
294. இறைவனை வழிபடுபவர்க்கு தூய சோதி துணையாகும். நல்ல சொற்கள் துணையாக அமையும். சுக்கிலம் கெடாமல் தூய்மையுடன் உடலுக்கு துணையாகி ஒளியாகி நிற்கும். பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் வீடுபேற்றை அளிக்க வல்லது.
295. சுழுமுனை நாடியில் சென்று சிரசின் உச்சியில் பிரமராந்திரம் சொல்ல முடியாதவர்கள் காமத்தின் வயப்பட்டு சிவயோகப் பயன் கிட்டாமல் போய்விடும். முதுகுத்தண்டில் பயணித்து உச்சிக்கு சென்றவரிடம் ஐம்பொறிகள் ஒன்றும் செய்ய முடியாதவை ஆகிவிடும். உண்மைதனை அறியாமல் கீழ் தத்துவங்களை பற்றி மயங்கி அழிகின்றனர்.
296. சுழுமுனை நாடியில் செல்வார்க்கு இறைவன் நாத தத்துவத்தில் வெளிப்பட்டு தூய ஒளியை சிவன் வீசிக்கொண்டிருப்பான். அப்படி சந்திர மண்டலம் சென்றவர்க்கு மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூல் ஏணியைப் போன்றதாகும்
297. பிறவி நோய்க்கு மருந்தாய் இருந்த நூலேணியைப் பற்றியவர் ஞானத்தைப் பெற்றவர் அப்படி பற்றாதவர் முன்னமே கழிக்கப்பட துணையாகும். பெருமை மிக்க இறைவன் சிந்தையின் பழைய நிலையை அழிக்கக்கூடிய துணை ஆவான். தேவ வடிவத்துடன் ஏழு உலகங்களுக்கும் செல்ல வழித்துணயாவான்.
298. கடவுளை வழிபட பற்றுக் கோடாய் பற்ற சிவபெருமானை வழிபடுங்கள். அப்பெருமானின் அருள் எல்லாவற்றையும் இனிதாக முடிக்கும். உபாயத்தில் வல்லவர்கள் ஒளியுடைய தேவர்கள் அனுபவக் கல்வியுடையோரைவிட பேரின்பம் அடைபவர் இல்லை.
299. பரந்த கடலை உரிமையாக உடையவன். உயர்ந்த மலையை உடையவன். ஐம்பெரும் பூதங்களையும் தன் திருமேனியாகக் கொண்டவன். பூதங்கள் அழிந்து மாறுபடும் ஊழி தோறும் ஒளிவடிவான காளையின் மீது விளங்கும் தேவர்களின் தலைவன் தன்னை நினைந்து தமக்குரிய இடத்தை அமைத்துக் கொண்டவர் உள்ளத்தில் ஒளியாய் விளங்குபவன் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
#####