ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#####
நடுவு நிலைமை!
320. உச்சியின் நடுவில் உள்ள சகஸ்ரதளத்தில் விளங்கும் ஒளியை அடையாதவர்க்கு ஞானம் கிட்டாது. அங்கு நிற்பவர்க்கு நரகம் கிட்டாது. அவ்வாறு நின்றவர் நல்ல தேவரும் ஆவார். நடுவு நின்ற அடியார் வழி நானும் சென்றேன்.
321. காக்கின்ற இயல்புடைய கரிய நிறமுடைய திருமாலும் நடுவில் நின்றான். படைக்கும் தன்மையுடன் மறைகளை ஓதும் நான்முகனும் நடுவில் நின்றான். சிவ ஞானியர்களும் நடுவில் நின்றனர். இம்முறையால் நடுவு நின்றோர் நல்ல நம்பனாகி சிவபெருமானாய் திகழ்வார்.
322. நடுவு நிற்பவர் சிவ நினைவு உடையவர் ஆவார். நடுவு நின்றபின் தேவருமாவார். சிவ உலகம் தூய மாயையிடத்தில் உள்ளது, சிவனாகிய பெரு வாழ்வும் அடைவாருடன் கூடி நாணும் நின்றேன்.
திருச்சிற்றம்பலம்
####