ஓம்நமசிவய!
ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#####
திரோபவம்—மறைப்பு!
431. உயிருக்கு உயிராக இருப்பவனை உடலில் சோதியாக கலந்தவனை உள்ளத்திலிருந்து ஓரடிகூட நீங்கா ஒருவனை ம்னத்தின் உள்ளே இருப்பினும் மலங்களின் மறைப்பால் எத்தகைய தன்மையன் இறைவன் என ஆரியாது. இருப்பர்.
432. துன்பந் தரும் பாசத் தொடர்பை உயிர்களுக்கு அளித்தாலும் இறைவன் இன்பம் அடைய பிறயவியைத் தந்துள்ளான். உயிர்க்கு எலும்பும் தோலும் தசையும் தந்த இறைவன் முத்தி அடையவும் செய்துள்ளான்.
433. உருத்திரன் திருமால் பிரமன் அகிய மூவரும் இறைவன் அமைத்துக் கொடுத்த இயந்திரமான உடலில் இறைவன் மறைவாக அமைத்த தன்மைகளை அறிய மாட்டார்கள்.
434. .கண்ணால் பர்க்கும் ஒளியாய் இருந்து அருள் செய்பவன் இறைவன். ஆணாய் பெண்ணாய் அலியாய் விளாங்கும் சிவனை உண்பதற்கு பயன் படும் நாவின் வழி மனத்தைச் செலுத்தி வான் மண்டலத்தில் இயற்கையாக உண்டாகும் தடாகத்தில் உடன் உறைந்து பொருந்தாமலிருப்பர்.
435. தெளிவு பொருந்திய உயிர்களுக்கும் தேவர்களுக்கும் இன்பத்தை அளிக்கும் இயல்புடைய சிவனும் சிறிய ஒளியை உடைய வான்மதியும் இருள் கெடும்படியான நிறைந்த இருளில் இருக்கும் ஜீவன்களில் மறைப்பை செய்து கொண்டிருப்பான்.
436. மறைப்புச் சக்தியைத் தரும் தத்துவங்கள் ஓசை முதலிய தன்மாத்திரைகள் கூறப்படும் ஆசைகள் ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டு இருக்கும் பலவகை வடிவங்கள் ஆகிய எல்லாவற்றிற்கும் தானாய் மறைக்கின்ற இறைவனே மறையும் சக்தியை ஆருள் செய்கின்ரான்.
437. அடியேன் பெருமானை உள்ளத்தில் உணர்ந்து வழிபட்டேன். அப்போதே அவன் காட்சி தந்து அருளை அளிப்பான். அதனால் மகிழ்வுடன் அன்பு வெளிப்பட அப்பெருமானை வெளியில் வழிபட்டாலும் அது அவனுக்கு விருப்பைத் தரும்.
438. எல்லாவற்றையும் தானாக மறைத்து நிற்பவன் மகேசுவரன். கீழ்முகமாக செய்லபடும் அவன் உருத்திரன் திருமால் மற்றும் நன்மையைச் செய்யும் சுவாதிட்டான கமல மலரில் உள்ள பிரமன் ஆகிய மூவருடன் சேர்ந்து விளங்குவான்.
439. ஒடுங்கிய பாச நிலையில் உத்தம சிவன் எனும் பெருங்கரையில் ஜீவன்கள் இருந்து ஆன்ம அனுபவத்தை விரும்பி பிறவியை நாடாத நிலையில் வான் கங்கையைப் பொருந்தினால் அவரின் மாசு நீங்கப் பெறும்.
440. ஒர் மண்ணில் பல் கலங்கள் உருவாகும். அதே போல் உடலின் பேதங்களெல்லாம் உடலில் உள்ளே உள்ளவனே காரணமாகும். கண் என்ற பொறி பார்வையில் பல பொருள்களைக் கண்டாலும் தன்னை அறியாமல் செயல் படுவதைப்போல் இறைவன் எல்லா உயிர்களின் வேறுபாட்டிற்கும் காரணமாக இருந்தாலும் உயிர்களின் காட்சிக்கு புலப்பட மாட்டான்.
#####