Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:55

அதோ முக தரிசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

அதோ முக தரிசனம்!

520. எம் தலைவா இறைவா! இது முறையோ! என்ற வானவர்கள் அசுரனின் வலிமையைச் சொல்லி முறையிட்டனர். அழகிய பவழம்போல் மேனி உடைய ஆற்முகனே! நீ போய் தேவர்களின் பகைவனான அசுரர்களை கொன்றுவா என்றருளிய் இறைவனான சிவன்.

521 .வெண்ணிற தலை மாலையை அணிந்திருக்கும் சிவனுக்கு அண்டங்களையும் எட்டுத் திக்குகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அதோ முகத்தின் கழுத்து கருத்த நிறமுடையதாய் இருப்பதை அறிவார் எவருமில்லை.. நஞ்சை உண்டதனால் கருப்பானது என்று சொல்பவர் அறிவற்றவர்.

522 .கரிய நிறமான கழுத்தை உடைய சிவன் கடல் சூழ்ந்த உலகில் பொய் உரைத்து மகிழும் உயிர்கள் உண்மையான தத்துவத்தை பற்றிப் பேசுவார்களானால் தேவர்களும் தொழும் தகுதியை அவர்களுக்குத் தருவான். உலகைப் படைத்தவன் பொய்யும் உண்மையும் அறிவான்.

523. மூலாதாரத்தில் விளங்கும் உருத்திரன் சுழுமுனை வழியாக மேலே எழுந்து சிரசில் உள்ள செவ்வொளியுடன் கலந்து சிவன் என விளங்கும். மற்ற புவனங்களில் இயல்பை மாற்றி வலம் வந்து வெற்றி பெற்று மேல் எழுந்து நிற்பது சிவனின் அதோமுகம் ஆகும்.


524. அதோமுகம் என்பது கீழ் உள்ள பிரணவம் என்று பழைமையாக அண்டத்தில் உள்ளது. நுண்ணுடலில் எல்லா இடத்திற்கும் செல்லும் ஆற்றல் உடையது. ஓம் எனும் பிரணவ வடிவமாய் ஒளியுடைய பராசகதியுடன் கூடிய இறைவன் அதோ முகமாகவும் ஊழியைச் செய்பவனாகவும் விளங்குகின்றான்.

525. பெரிய மலரான கவிழ்ந்த முகமுடைய அதோமுகத்தின் விந்தை என்ன வென்றால், சிரசில் கவிழ்ந்துள்ள சகஸ்ரதளத்திலிருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து செல்லும் நாடித் தொகுதிகளில் உள்ள அழிவற்ற சக்திகளுடன் அதோமுகமாக சிவனும் திகழ்கின்றான்.

#####

Read 1845 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:21
Login to post comments