gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 30 April 2020 10:32

அருச்சணை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#####

அருச்சணை!

1003. இயந்திரத்தில் மந்திர வடிவில் எழுந்தருளச் செய்து தாமரை, நீலம், செங்கழுநீர், கருநெய்தல், மணம்கமிழும் பாக்குப்பூ, மகிழம்பூ, மாதவி, மந்தாரம், புன்னை, மல்லிகைப்பூ, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய மலர்களைச் சாத்துக.

1004. புனுகு, காந்தாரி சாந்துடன் சந்தனம், மணம் கமிழ் குங்குமம், பச்சைக் கற்பூரம், வயிரம்பொருந்திய அகில் இவகளுடன் அளவாய் பனிநீர் சேர்த்து குழைத்து பூசவேண்டிய இடங்களில் பூசி வழிபடுவாய்.

1005. அமுதத்தைப் படைத்து பொன்னொளி தரும் விளக்கு ஏற்றி திக்குப்பந்தனம் செய்து தூப தீபம் காட்டி வணங்குவர் இன்மைப் பேறும் மறுமை பேறும் எய்துவர்,

1006. இப்படி வழிபட்டால் தாமே பேறுகள் வந்து அடையும். இந்த வழிபாட்டால் இந்திர்ச் செல்வத்தைப் பெறலாம். எண் சித்திகளும் உண்டாகும். மறுமையில் வீடு பேறும் வந்தடையும்.

1007. இந்த வழிபாடு தானே வந்து அணையும் அயலார் மனைவியை விரும்பாதவராய் ஐம்பொறிகளை அடக்கி வென்றவர் ஆக்கும். இவர் படைத்த நிவேதனம் இடைவிடா யோகம் பொருந்திய பஞ்சாங்க வணக்க்ம் செபம் என்பவை பொருந்தும். மனம் பிராணனோடு நிலைபெறும்.

1008. இறைவன் அடிமை ஆனவர் எவ்வகை செயலாலும் வழிபடமாட்டார். எட்டுக் கன்மச் செய்கையில் இல்லாத அவர் கிரியை வழி உபாசனையை விரும்புவார். சிவயோகியர் இறையை வழிபட்டு அவரிடம் அடைக்கலமாவதால் கிரியையான வழிபாட்டை விரும்பாமல் சிவனிடம் அன்பு கொண்டு அருள்வழி நிற்பர்.

1009. சிவயோகம் என்பது அறிவு ஒன்றால் அடையக் கூடியது என்பதைக் கிரியை வழி நிற்பவர் உணர்வது இல்லை. அவர்கள் கருத்து எல்லாம் வெளியேயுள்ள மூர்த்தி, பூசைத் திரவியம், மந்திரம், செபம் ஆகியவற்றில்தான் அலையும். நியதிகுட்பட்ட உடலில் ஒரு நெறி ம்னதில் கண்டால் ஒளி பொருந்திய மணிக்குள்ளே இருக்கும் ஒளிபோல் இறைவனைக் காணலாம்.

1010. இருளும் ஒளியும் போல் இராண்டு இயல்பினை உடையது மனம். வெளியாகிய ஒளியைச் சார்ந்து அருளையும் மயக்கமாகிய இருளைச் சார்ந்து அறியாமையையும் பொருந்தும் மயக்கத்திலிருந்து மீளாமல் அறிவு மயங்கிவிடும். அம்மயக்கத்தை விட்டவர் சிவனடியவர் ஆவார்.

1011. தானே சிவன், அவனே சிவன் என இரண்டு தன்மையாகத் தன்னைக் கண்பவன் சிவத்திடம் பக்தி கொண்டு தன் அறிவை சிவ அறிவில் ஒன்று படுத்தினால் நாலம் அறிவான சாயுச்சிய்ம் அடையலாம். இந்த சித்தியைப் பெற்ற சிவஞானியர் தம்மைச் சிவம் நடத்தும் என்று தாம் ஒன்றையும் எண்ணாதவராக இருப்பர்.

1012. கொப்பூழுக்கு கீழ் உள்ள சுவாதிட்டானத்தில் இருக்கும் அனையா தீ அக்னிக் கலை. இந்த தீயை சிவாக்கினியாக்கி சிவத்தியானம் செய்தால் சீவர்களை விட்டு அகலாத குண்டலினி சக்தி கண்டத்தில் விளங்கும். அழகிய ஒளியுடன் கூடிய ந காரம் சுவாதிட்டானத்தினின்/று நெற்றியை இடமாககொண்டு இருக்கும். இங்கிருந்து விந்து நாதம் தோன்றி மேலே செல்லும்.

1013. ஆன்மாக்கள் நம என்ற எழுத்துக்களால் குறிபிடும் மறைப்புச் சக்தியான திரோதனத்தையும் மலத்தையும் இருப்பிடமாகக் கொண்டு இயங்கும். அவை பசுத் தன்மை உடையவை. அப்பசுத் தன்மையை மாற்ற சிவத்தைச் சார்ந்து சிவத்தை சிந்திக்க ந, ம உடன் கூடிய பசு சிவத்தின் இருப்பிடமாகும். ந, ம தன்மை கெட நமசிவய, சிவயநம என்று செபித்தால் உண்மைப் பொருள் அகப்படாது. உண்மைப் பொருளான சிவத்துடன் பிரணவத்தின் சாமாதி அடைதலே உண்மை வீடு அகும்.

1014. உடல் தான் அன்று என உணர்ந்த நாளில் சீவனின் அண்டத்தில் சிவஒளி ஒளிரும். அக்காலத்தில் அது சந்திரக்கலையாய் இருக்கும். ஒளிவரும்போது பிரிவுற்று இருந்த சீவனின் நிலை சிவத்துடன் ஒன்றி சீவ ஒளி சிவ ஒளியுடன் கலந்து விளங்கும்.

#####

Read 1575 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26936337
All
26936337
Your IP: 44.200.40.97
2024-03-29 06:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg