gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

அஷ்டாஷ்ட திரு உருவங்கள் (64)

வியாழக்கிழமை, 07 September 2017 19:27

நடராஜர்!

Written by

ஓம்நமசிவய!

மயூர விநாயகா போற்றி!
முக்கண் விநாயகா போற்றி!
முக்குருணி விநாயகா போற்றி!
முச்சந்தி விநாயகா போற்றி!

#####


நடராஜர்!

 

நடராஜர்

அம்பலத்தில் ஆடும் நடராஜரின் இயக்கத்தினால் உலகம் இயங்குகின்றது. ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் உயிர்களுக்கு அருள் செய்யவே! அந்த ஆட்டத்தை நிறுத்தினால் உலக இயக்கம் நின்று விடும் என்ற தத்துவத்தை விளக்க முன்னோர்கள் ‘உலகு அம்பல விதம்’ எனக் கூறியது மருவி ‘உலகம் பலவிதம் என்றானது.

உலகை இயக்கும் அந்த இறைவனை வழிபடும் முறை மூன்று வகைப்படும். புறத்தேயிருந்து வழிபடுவது அபரம் எனப்படும். தெய்வம் வேறு தான் வேறு என நினையாமல் வழிபடுவது பரம் எனப்படும். அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் வழிபடுவது பராபரம் எனப்படும்.

இந்த மெய்ப்பொருள் அறிவாகிய ஞானம் அபரஞானம் என்றும் பரஞானம் என்றும் இருவகைப்படும். அபரம்- ஆரம்ப படிநிலை. பரம்- முடிவான உயர்நிலை. மெய்ப்பொருளை ஒருவன் உண்மையாக உணர்ந்து அதனைக் கண்டு அதன் தன்மையில் தான் அழுந்தி நிற்றலேயாகும். அதாவது மெய்ப்பொருளை அனுபவமாக உணர்ந்து அதன் இன்பத்தில் திளைத்திருத்தலே ‘பரஞானம்’. அனுபவ ஞானம் எளிதில் எவருக்கும் முதலிலேயே வந்துவிடாது என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.

அபரஞானம், பரஞானம் இரண்டும் அஞ்ஞானத்தை போக்குபவையாயினும், அபரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குதல் என்பது ஒரு விளக்கு இருளைப் போக்குவது போன்றதாகும். அதேசமயம் பரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குவது என்பது சூரியன் இருளைப் போக்குவதற்கு ஒப்பானதாகும். எனவே அபர ஞானம் அஞ்ஞானத்தை முழுவதும் நீக்காமல் இருக்க, பரஞானமே அஞ்ஞானத்தை முற்றிலும் நீக்க வல்லது.

அந்த இறைவனை ஈசர், ஈஸ்வரன், ஈசானன் என்று சொல்வதுண்டு. ஈசர்- என்றால் ஆளுகின்றவர், ஈஸ்வரன்- என்றால் எல்லாம் உடையவன், ஈசானன்- என்றால் உலகங்களை உண்டாக்கி ஆளுபவன் என அர்த்தமாகும்.

ஈ என்றால் உச்சி என்பதாகும். அதாவது எல்லாவற்றிற்கும் உயரத்தில் இருப்பவன் மேலானவன். நம்மை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்துச் செல்பவன்.

சித்தர்களின் இஷ்ட தெய்வம் சிவனே! லிங்க வழிபாடு நடந்தாலும் ரூபமாக நோக்கின் நடராஜர் தோற்றமே புலனாகும். இந்த தோற்றம் உலகின் இயக்கத்தினை உணர்த்துவதாகும். நடராஜரின் ஒவ்வொரு நெளிவு சுளிவுக்குப் பின்னால் ஒரு பெரும் பொருள் இருக்கின்றது. அவரின் நாட்டியத்தின் முத்திரை ஒவ்வொன்றும் பூவுலகில் பலவித மாற்றங்களை குறிக்கும். அதில் வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு.

அமைதி, தவம், யோகம் என்று சதா காலமும் சிவனே என்றிருக்கும் ஈசன் பிரமாதமாக ஆடுவார் என்பதையும் முதன் முதலில் உணர்ந்தவர் திருமால். அந்த ஆடலை தன் அகத்திலே கண்டு ஆனந்தித்தபோது அதை உணர்ந்த ஆதிசேஷன் பதஞ்சலியாகப் பிறந்து திருநடனத்தை தில்லையில் கண்டார். அடுத்தடுத்து தேவர்களும் முனிவர்களும் மகேசனை வேண்டித் தவமிருந்து அந்த நடனத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

நடராஜர் உருவம் இருக்குமிடத்தில் இயகக்கதி சுறுசுறுப்பாக இருக்கும். சுறுசுறுப்பும் விறு விறுப்பும் இல்லாத மந்தகதியில் இயங்கும் ஓர் வீட்டினுள் நடராஜர் சிலாரூபம் நுழைந்தால் அந்த இல்லத்தில் ஒர் விசைப்பாடு தோன்றி பல் வினைகளாக செயலாக்கம் தொடங்கும்.

சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை தட்சிணாயணக் காலம் என்றும், வடதிசை நோக்கிய பயணமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலத்தை உத்ராயணக் காலமென்றும், என்பர். இந்த இரு காலங்களும் சேர்ந்த சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். தேவர்களின் ஒருதினப்பொழுதின் சந்தியாகாலமாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.

மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா காலத்தில்தான் விஷ்ணுவிற்கும், சிவனுக்கும் பள்ளி எழுச்சி நடைபெறும். அதையே நாம் திருப்பாவை, திருவெம்பாவை என பாடித் துதிக்கின்றோம்.
தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே

சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.

அதேபோன்று மார்கழியில் திருவாதிரை விழா நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்திலும், வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தில் திருவாரூரிலும் தரிசித்துள்ளனர்

நடராஜருக்கு சிதம்பரத்தில் வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம். 1.மாசிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி காலசந்தியில். 2.சித்திரை- திருவோண நடசத்திரம்- உச்சிக்காலம், 3.ஆனி- உத்திரம்- பிரதோஷகாலம்- ஆனித்திருமஞ்ஞனம், 4.ஆவணி மாதம் - சதுர்த்தசி திதி- சாயரட்சைகாலபூஜை, 5.புரட்டாசி- வளர்பிறை சதுர்தசி-அர்த்த ஜாமம், 6.மார்கழி- திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு,

நூற்றியெட்டு வகையான ஆடல்களை இறைவன் எம்பெருமான் ஆடியிருந்தாலும் மிகவும் போற்றப்படுவது எட்டு வகைத் தாண்டவ பேதங்கள், கர்ணங்கள் எனப்படும். தனது ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்கின்றார் எம்பிரான்.

ஏழு ஸ்வரங்களை ஒப்ப சிவ தாண்டவ தலங்கள்

1.-படைத்தல்-காளிகாதாண்டவம்-திருநெல்வேலி (258) அன்னை உமை காளியாகி கோபம் கொண்டபோது அவரது கோபத்தைத் தணித்து அவரும் தானும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்த ஆடிய தாண்டவம்- காளிகா தாண்டவம். வலக்கரங்கலில் உடுக்கை, மணி, அக்கினியும், இடக்கையில் அபய ஹஸ்தமும், கஜஹஸ்தமும் காட்டி எட்டு திருக்கரங்களுடன் காட்சி. இந்தவகை நடனம் திருநெல்வேலி தாமிரசபையிலும், திருவாலாங்காட்டிலும் காட்சி.
இந்த நடனக்கோல இறைவனைத் தரிசித்தால் கர்மவினைகள் நீங்கி வாழ்வில் இன்பம் மலரும், கடன் தொல்லைகள், தழ்வு மனப்பான்மை ஆகியன நீங்கும்

2.ரி-காத்தல்-கௌரிதாண்டவம்-திருப்புத்தூர் (250), தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் அந்த சிவனும், மோகினியாக வந்த பெருமாளும் ஆடிய நடனம். தன்னுடன் எப்போதும் இனைந்து ஆடும் சிவன் தனியாக ஆடிய நடனத்தைக்கான வேண்ட சிவன் கையில் பாம்புடன் ஆடியது கௌரி தாண்டவம் எனப்படும்.

3.க-காத்தல்செயல்-சந்தியாதாண்டவம்-திருஆல்வாய் (மதுரை) (245), தேவர்கள் அசுரர்கள் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உலக நன்மை கருதி ஈசன் அருந்தி செயலிழந்தபோது தேவர்கள் மனமுருகி வேண்ட கண்விழித்த சிவன் உயிர்கள் மகிழ்ச்சியடைய பிரதோஷ காலத்தில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம்.

4.ம-அழித்தல்-சங்கரதாண்டவம்-திருஆல்வாய் (மதுரை) (245),

5.ப-மறைத்தல்-திரிபுரதாண்டவம்-திருக்குற்றாலம் (257),

6.த-அருளல்-ஊர்த்துவதாண்டவம்-திருவாலங்காடு (15), தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கோபம்கொண்ட காளியை சமாதானம் செய்து மீண்டும் சிவகாமியாக மாற்ற காளியுடன் போட்டியிட்டு ஆடினார். இருவர் நடனமும் சமமான நிலையில் இருந்தது. அப்போது சிவன் தன் காதிலிருந்த காதணியை கீழெ விழச் செய்து அதை தன் காலால் எடுத்து நடனமாடியபடியே காதில் அணிந்து கொண்டார். அந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் எனப்படும்.
7.நி-ஐந்தொழில்-ஆனந்ததாண்டவம்-திருத்தில்லை (சிதம்பரம்) (55). பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இறைவன் ஆடிய திருநடனம் ஆனந்த தாண்டவம். ஐந்து தொழில்கள், ஐம்பூதங்கள், ஒருநாளின் ஐந்து பொழுதுகள் ஆகியவற்றை இது குறிக்கின்றது. தில்லைக்கூத்தர், அம்பலக்கூத்தர் எனப்பெயர்., தாண்டவங்கலில் மிகச் சிறந்தது இதுவே.
இந்த தோற்றத்தில் இறைவனைத் தரிசிக்க வாழ்வில் இன்பம் நிலைக்கும்

சப்த விடங்க தலங்கள்(ஏழூர்) -திருவாரூர்

1. வீதி விடங்கர்-அஜபா நடனம் (சுவாச ரூபம்) திருவாரூர் (204),-
2. -அவனி விடங்கர்- பிருங்க நடனம் (வண்டு நடனம்) திருக்குவளை (240),
3. - நாகவிடங்கர்- உன்மத்த நடனம் திருநள்ளாறு (169),
4. -சுந்தர விடங்கர்-பாராவார தாங்க நடனம் (கடல்அலை நடனம்) திருநாகை (199),
5. -ஆதிவிடங்கர்- குக்குட நடனம் (கோழி நடனம்) திருக்காறாயில் (236),
6. -நீல விடங்கர்- தாமரை நடனம் திருவாய்மூர் (241),
7. புவனி விடங்கர்-ஹம்சபாத நடனம்- திருமறைக்காடு (242).

பிரபஞ்ச அண்டை வெளித் தத்துவம் எங்கும் எப்படி ஒரே நேரத்தில் பரவி இருக்கின்றதோ அவ்வாறே காலமும் பரவி இருக்கின்றது. நடராஜர் கைகளில் உள்ள மழு காலத்தையும், உடுக்கை சர்பத்தையும் குறிக்கும். சிவநாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்திலிருந்துதான் பிரபஞ்சங்களில் உற்பத்தி நடக்கின்றன.

#####

வியாழக்கிழமை, 07 September 2017 19:11

சோமாஸ்கந்தர்!

Written by

ஓம்நமசிவய!

முத்து கணபதியே போற்றி!
முழுமுதற் கோமானே போற்றி!
மூலப் பொருளே போற்றி!
மூஷிக வாகனா போற்றி!


சோமாஸ்கந்தர்!

 உமை கந்தன் உடனாகிய சோமாஸ்கந்தர் வடிவம் நற்புத்திரப் பேறு மற்றும் சந்தான விருத்தி தரவல்லது. சிவ(சைவவழிபாடு), சக்தி(சாக்த வழிபாடு), முருக(கௌமார வழிபாடு) ஆகிய மூன்றும் சேர்ந்த வடிவம். இறைவனை இல்லறத்தானாக, இனிய கணவனாக, பாசம் மிக்கத் தந்தையாக தனயனுடன் ஒரே இருக்கையில் ஒருங்கிணைந்து காட்டும் திருவடிவம். சத்து, சித்து, ஆனந்தம் என்றால் சச்சிதானந்தம் என்பர். உண்மையாகிய சிவனும் அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது ஸ்கந்தன் என்ற இன்பம். அதாவது உண்மையும் அறிவாகிய நன்மையும் சேர்ந்தால் கிடைப்பது இன்பம் என்ற தத்துவத்தைச் சொல்லும் வடிவம்.
சுகாசன மூர்த்தி போன்றே சிவன் அமர்ந்து தேவியின் பக்கம் முகம் சிறிது சாய்ந்திருக்க அதே ஆசனத்தில் உமை வலப்பாதம் மடங்கியவாறும் இடப்பாதம் கீழே தொங்கவிட்டு இடக்கையில் வரதமுத்திரையும், வலக்கையில் குவளை மலரையும் வைத்திருப்பார். இருவருக்குமிடையே கந்தப் பெருமான் தேவியின் கழுத்தளவு உயரம் நின்றிருப்பார். அவரது இடக்கையில் கனியும் வலக்கையில் சுட்டும் குறிப்பும் வைத்திருப்பார்.
திருமால் இம்மூர்த்தியைத் தன் மார்பிலே வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபட்டு வந்துள்ளார். இந்திரன் அவுணர்களின் துன்பத்திலிருந்து மீள திருமாலிடம் இம்மூர்த்தியைப் பெற்று இந்திரலோகத்தில் வைத்து பூசித்து வந்தான். அசுரர்களை முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியோடு வென்றான். இம்மூர்த்தியைக் கண்ணுற்ற முசுகுந்த சக்ரவர்த்தி விரும்பிக் கேட்க இது விஷ்ணுவுடையது அவர் சம்மதமில்லாமல் நான் தரமுடியாது என இந்திரன் சொல்ல முசுகுந்த சக்ரவர்த்தி திருமாலிடம் கேட்டு அவர் சம்மதத்தைப் பெற்றான். இந்திரனுக்கு இம்மூர்த்தத்தை விட்டு பிரிய மனமில்லாததால் இதைபோன்றே ஆறு வடிவங்களைச் தேவ சிற்பி கொண்டு செய்து முசுகுந்தரிடம் காட்டி இதில் இது வேண்டுமோ அதை எடுத்துக் கொள் என்றான். இறையருளால் சரியான மூர்த்தத்தை கண்டு அதை எடுக்க இந்திரன் மற்ற ஆறு திரு வடிவங்களையும் அவரிடமே கொடுத்து பூவுலகில் நிறுவிப் பூசனை செய் என்றார்.
முசுகுந்தன் திருமால், இந்திரன் பூசித்த சோமாஸ்கந்த மூர்த்தியை திருவாரூரில் நிறுவி மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக் காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்தான். சோமாஸ்கந்த மூர்த்தியே இத்தலங்களில் தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார். இத்தலங்கள் சப்த விடத்தலங்கள் எனப்படும். இத்தலங்களில் சிவபெருமானின் பெயரும் அவர் ஆடிய நடனமும் வேறு வேறானவை.
திருவாரூர்- வீதி விடங்கர் அசபா நடனம்
திருநாகைக்காரோணம்- சுந்தர விடங்கர் பாராவார தரங்க நடனம்
திருநள்ளாறு- நக விடங்கர் உன்மத்த நடனம்
திருக்காறாயில்- ஆதி விடங்கர் குக்குட நடனம்
திருவாய்மூர்- நீல விடங்கர் கமல நடனம்
திருமறைக்காடு- புவனி விடங்கர் அம்ச நடனம்
திருக்கோளிலி- அவனி விடங்கர் பிரமா நடனம்
விடங்கர் என்றால் திருவீதியில் உலா வரும் திருமேனியாகும். டங்கம் என்றால் உளி என்று பொருள். விடங்கம் என்றால் உளி கொண்டு செதுக்கப்படாமல் தானே தோன்றியது எனப் பொருள் படும்.
துறவறத்தைவிட இல்லறத்திலிருந்தே வீடுபேறு அடையலாம் என விளக்கும் இந்த சோமாஸ்கந்த மூர்த்தம் மனையறம், மக்கட்பேறு என்ற இரு உயரிய கருத்துக்களைக் கொண்டது. சோமாஸ்கந்தரை வழிபடுவோர் கணவனும் மனைவியுமாய் இல்லறத்தில் இனையில்லா இன்பம் துய்த்து நல்ல மகப்பேறும் குல வளர்ச்சியும் பெற்று இம்மையில் சிறந்து வாழ்ந்து மறுமையில் வீடுபேறும் அடைவர். சோமாஸ்கந்தர் வடிவக் கோயில்கள்: திருக்கருகாவூர், வைத்தீஸ்வரகோவில், சிக்கல், காஞ்சிபுரம், திருக்கள்ளில் ஆகியன.

#####

ஓம்நமசிவய!

மகா கணபதி போற்றி!
மங்கள கணபதி போற்றி!
மந்திர விநாயகா போற்றி!
மணக்குள விநாயகா போற்றி!


கிராதகர்-கிராத மூர்த்தி-வேட்ருவர்!

 

துரியோதனால் வஞ்சிக்கப்பட்ட பாண்டவர்கள் நாடு நகரம் இழந்து கானகம் சென்றனர். அங்கு எழுந்தருளிய வியாச பகவான் தனக்கு ஏற்படும் பாதகங்களை எல்லாம் ஒருவன் சாதகமாக மாற்றிக் கொள்ளவேண்டும். அறிவாளிகள் சோர்வு கொள்ளாமல் செயலாற்றிக் கொண்டே இருப்பார்கள். கால வித்தியாசத்தால் மன்னாதி மன்னர்களும் துயரத்தை அடைந்திருக்கின்றார்கள். காலம் வரும்வரை பொருமை காத்தல் சிறப்பு என்று ஆறுதல் கூறி காட்டில் இருக்கும் காலத்தில் உங்களை நீங்கள் பலப் படுத்திக் கொள்ளவேண்டும். அர்ச்சுனா நீ சிவபெருமானைக் குறித்து தவம் செய்து பலம் வாய்ந்த அஸ்த்திரங்களைப் பெறுவாய் என ஆலோசனை கூறினார்.
வியாசமுனிவர் ஆலோசனைப்படி வெள்ளிமலையின் மேற்புறத்தே சிவனை நோக்கித் ஒற்றைக்காலில் நின்று கடுந்தவமிருந்தான் அர்ச்சுனன். அவன் தந்தை இந்திரன் ஊர்வசி, இரம்பை முதலிய ஆடலரசிகளை அனுப்பியும் அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க முடியவில்லை. நேரில் தோன்றிய இந்திரன் தன் மகனைப் பாராட்டி சிவபெருமான் வருவார் உனக்கு அருள் புரிவாரென்று ஆசிவழங்கினான்.
தோழியர்கள் வாயிலாக அர்ச்சுனன் தவத்தைக் கேட்ட உமை சிவனிடம் அர்ச்சுனனுக்கு அருள் புரிய வேண்டினாள். தவமியற்றும் அர்ச்சுனனைக் கொல்ல பங்காளி துரியோதனன் முகாசூரனை அனுப்பியுள்ளான். அவன் வந்து தொல்லை கொடுக்குமுன் யாம் அங்கிருப்போம் என்று நந்தி தேவரை அழைத்து யாம் பன்றி வேட்டைக்குச் செல்லவிருக்கின்றோம் நீங்கள் அதற்குத்தக்கவாறு உருமாருங்கள் என்றார். உமை வேட்டுவச்சியாகவும் முருகன் குழந்தையாகவும், வேதங்கள் வேட்டை நாய்களாகவும், பூதகணங்கள் வேடுவர்களாகவும் மாறிச் சென்றனர்.
முகாசூரன் உறுமல் கேட்ட அர்ச்சுனன் பன்றியின்மீது அம்பைத் தொடுக்க அது பன்றியின் முகத்தில் பாய்ந்து பின்புறமாக வெளியேறி அர்ச்சுனனிடம் வந்தது. அதேசமயம் அங்கு தோன்றிய சிவனும் பன்றிமேல் அம்புவிட அது பன்றியின் பின்புறம் புகுந்து முன்புறமாக வெளிவர பன்றி இறந்தது.
யார் பன்றியைக் கொன்றது என்பதில் வேடனுக்கும் அர்ச்சுனனுக்கும் வாக்கு வாதம் எழுந்து முற்றி சண்டையில் ஆரம்பித்தது. வேடன் அர்சுனனின் வில்லின் நாணை அறுக்க அர்ச்சுனன் அந்த வில்லால் வேடன் தலையில் அடிக்க அந்த அடி அனைத்து உலக உயிர்கள்மீதும் பட்டது. சிவபெருமான் சினங்கொண்டவர் போல் நடித்து மல்யுத்தம் செய்தார். சிறிது நேர விளையாட்டிற்குப்பின் தெவர்கள் சூழக்காட்சிதந்து முகாசூரனால் உனக்கு தீங்கு நேரக்கூடாது என வேடனாக வந்தேன் என்று அருள்புரிந்து அர்ச்சுனன் கேட்டபடி சக்திவாய்ந்த பாசுபத அஸ்த்திரத்தை அளித்து அதை உபயோக்கிக்கும் முறையைச் சொல்லி நடக்க இருக்கும்போரில் வேற்றி பெறுவாய் என ஆசி வழங்கினார். சிவனைக் கண்டு அவரைத் தொட்டு மல்யுத்தம் புரிந்த ஒரே மானிடன் அர்ச்சுனன். அவனின் சிறப்புப் பெயர் ‘சவ்வியாசி’- என்றால் இரு கரங்களாலும் அம்பு தொடுக்கும் வல்லமை பெற்றவன்
 இறைவன் நான்கு /இரு திருக்கரங்களுடன் வில்லையும் அம்பையும் கொண்டு காணலாம்.
அருச்சுனன் தவம் செய்கையில் அவனைக் கொல்ல துரியோதனன் அனுப்பிய முகாசூரனை கொல்ல வேட்டுருவம் கொண்ட சிவன் கிராதக மூர்த்தி எனப்பட்டார்.. காட்சி: பாசுபதம் பெற்ற முதன்மைத் தலம் திருவேட்களம், திருவேட்டக்குடி, கும்பேசுவரர் ஆலயம் (குடந்தை), திருவைகாவூர்

#####

ஓம்நமசிவய!

புண்ணியநாதா போற்றி!
பூத விநாயகா போற்றி!
பெருச்சாளி வாகனா போற்றி!
பொல்லாப் பிள்ளையே போற்றி!


.நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி/விஷபாகரண மூர்த்தி!

 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில் இருதரப்பிலும் பலர் மடிந்தனர். எனவே அவர்கள் இரு தரப்பினரும் பிரம்மனிடம் கலந்து ஆலோசித்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க முடிவெடுத்தனர். மந்தார மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடையும்போது அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கமும் தேவர்கள் பாம்பின் வால் பக்கமும் இருக்க மந்தாரமலை சிறிதும் அசையாமல் கடலினுள் மூழ்கத் தொடங்கியது. அனைவரும் திகைக்க திருமால் ஆமை வடிவமெடுத்து மந்தாரமலையின் அடிப்பாகம் சென்று அதைத் தாங்கிக் கொண்டார். மீண்டும் கடையத் தொடங்கினர்.
பலகாலம் கடைந்ததால் கயிறாக இருந்த வாசுகி வருத்தம் ஆற்றாது தன் வாயினால் நஞ்சைக் கக்கியது. அந்த நஞ்சு பரவ ஆரம்பித்ததும் உலகை இருள் சூழ்ந்தது. அந்த நஞ்சைக் கட்டுப்படுத்த திருமால் முன்னே செல்ல அவர் உடல் கருநீலமானது. அனைவரும் சிவனை தஞ்சமடைந்தனர். சிவன் சுந்தரரிடம் அந்த நஞ்சை திரட்டி வருமாறு பணித்து அதை கையில் வாங்க அது சிறுத்தது. அதை சிவன் தன் வாயில் போட அருகில் இருந்த உமை அவர் கண்டத்தைப் பிடிக்க அந்த நஞ்சு சிவபெருமானின் கண்டத்திலேயே நின்றது. கண்டம் நீலமாக சிவபெருமான், நீலகண்டர், மணிகண்டர், சீகண்டர் என்ற பெயரைப் பெற்றார். மீண்டும் பாற்கடல் கடைந்து அமிர்தம் கடைந்தெடுக்கப் பட்டது.
மூன்று கண்களுடன், சடாமகுடம் தரித்தவராய், கரங்களில் மான், மழு, ஒருகரத்தில் நஞ்சு, ஒரு கரம் அருள் குறிப்பு, பர்வை நஞ்சின் மீதிருக்க இடதுபுறம் பார்வதி அவரைத் தடுக்கும் வண்னம் நின்ற நிலையில் இருப்பார்கள்.
ஆணவம் நீங்கி அமைதி உண்டாக திருக்கடைக்கண் அருள்பவர். அனைத்து உயிர்களும் துன்பம் அடையாமல் இருக்க நஞ்சை உண்ட பெருமான் வடிவம் நீலகண்டர். காட்சி: கழுகுமலை வெட்டுவான் கோவில் விமானம், மதுரை நந்தி மண்டபத் தூண், சுருட்டப் பள்ளியில் பள்ளிகொண்டவராக காட்சி.

#####

ஓம்நமசிவய!

பிரசன்ன விநாயகா போற்றி!
பிரணவப் பொருளே போற்றி!
பிள்ளையாரே போற்றி!
பிறையெயிற்றோனே போற்றி


தட்சிணா மூர்த்தி-ஆலமர்செல்வர்/ தென்முகக் கடவுள்!

பிரம்மன் தன்னுடைய படைக்கும் தொழிலுக்கு உதவிசெய்ய சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரை தோற்றுவித்தார். அவர்கள் பிரம்மனுக்கு உதவி செய்யாமல் சிவனை நோக்கி தவம் செய்தனர். மகிழ்ந்த சிவனிடம் தங்களுக்கு மெய்ப் பொருளை உபதேசித்து ஞானம் பெற அருள்புரியக் கேட்க சிவனார் ஞான குருவாக- தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து குருவாகி அவர்கள் நால்வருக்கும் சொல்லாமல் சொல்லும் உபதேசம் உபதேசிக்கத் தொடங்கினார்.
சிவபெருமானின் யோக, போக, வேதத் திருவடிவங்களில் தென்முகக் கடவுள் யோக வடிவம். தட்சிணம் என்றால் தெற்கு, ஞானம், சாமர்த்தியம் எனப்படும். தெற்கு அழிவைக் குறிப்பது. வடக்கு அழியாத அமுத வாழ்வைக் குறிப்பது. ஆன்மா வடக்கு நோக்கி வழிபட ஏதுவாக இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள் புரிகின்றான். ஆனந்த வடிவமான ஆடல் வல்லானும் அமைதி வடிவான தென்முகக் கடவுளும் தெற்கு நோக்கியே அருள் புரிகின்றனர். நிழல் மரங்களில் ஆல் தலையானது. ஆலின் கீழ் இலிங்கம் நிறுவப்பட்டமையால் ஆலமர் கடவுள் / ஆலமர் செல்வர் என்றானார்.
தட்சினாமூர்த்தி ஆச்சாரியர்களுக்கெல்லாம் பரமாசாரியர். பொருளுக்கேற்ப கற்பிக்கும் முறை அமையும். மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத பரம் பொருளை மனதிற்கு கட்டுப்பட்ட வாக்கால் காட்ட முடியாது. அனுபூதி வடிவில் உள்ளத்திற்குச் சொல்லாமல் விளக்கம் தர இயலாது. எந்த செயலுமற்ற மௌனத்தைக் கடைபிடித்து ஆனந்தத்தை அனுபூதியாகத் தம் உணர்வினால் வெளிப்படுத்தி சலனமற்றுத் தம்மிடம் கலந்துள்ள சீடர்களின் உள்ளத்தில் அவ்வானந்தம் முழுவதும் பரவச் செய்து பேரின்ப நிலையை உணர்த்தும் பரம்பொருளின் வடிவமே தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி வடிவம். அறியச் சக்தி பெற்றவர் மட்டுமே அறியுமாறு போதித்த வடிவம். சிவத்திடம் சக்தி அடங்கிய வடிவம். ஞானமே வடிவான அருட்சக்தி நிறைந்து விளங்கும் சச்சிதானந்த வடிவம் தட்சிணாமூர்த்தி வடிவம். பேரானந்தத்தை வெளிப்படுத்தாமல் உள்ளடக்கிக் கொள்ள திறமை வேண்டும். அந்த திறமை சாமர்த்தியம் மிக்கவர் தட்சிணா மூர்த்தி.
திருமேனி பளிங்கு போன்ற தூய்மையை உணர்த்தும் வெண்ணிறம். அறியாமையைக் குறிக்கும் முயலகனை மிதித்திருக்கும் வலது பாதம் அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை. உயிர்களை உய்விக்க சிவஞானபோதமாகிய ஞானங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழும் சிவ ஞான போதமாகிய திருக்கரத்திலுள்ள நூல், 36 / 96 தத்துவங்களை உணர்த்த திருக்கரத்தில் உள்ள உருத்திராக்க மாலையினால் திருவைந்தெழுத்தை உருவேற்றி தியானைத்தலே ஞானம் பெறும் வழி, அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்கும் இடக்கையில் உள்ள ஆற்றல்மிக்க அமிர்த கலசம். ஞானத்தின் அடையாளமான சின் முத்திரை- பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டு விரல் தொடவும் ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் ஞானத்தின் அடையாளம், தீய சக்திகளை அடக்கியாளும் பேராற்றல் உணர்த்தும் புலித்தோலின் மீது அமர்தல், ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் புலனடக்கம் உடையவராய் ஐம்பொறிகளைக் கட்டுப் படுத்துவதே துறவியின் சிறப்பு என்பதை உணர்த்தும் நெற்றிக்கண், மாயை மற்றும் அதன் காரியமாகிய உலகத்தை உணர்த்தும் ஆலமரமும் அதன் நிழலும், பக்தர்கள் வடக்கு நோக்கி தியானிக்க வேண்டுமென்பதற்காக தென்முகம், குண்டலினி சக்தியை குறிக்கும் பாம்பை அணிந்திருப்பது, தருமத்தை குறிக்கும் வெள்விடை, அனைத்து உயிர்களுக்கும் தந்தை என்ற பசுபதி நிலைபாட்டை விளக்க சூழ்ந்திருக்கும் விலங்கினங்கள்.
தட்சிணாமூர்த்தியை வியாக்கிண தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணா மூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி என பலவகையாக சிறப்பாகக் குறிப்பர். ஆலமரத்தடியில் புலித்தோல் அல்லது வெள்ளைத் தாமரையில் அமர்ந்து, வலது கால் கீழே தொங்கிய நிலை, இடது கால் மடிந்தவாறும் நான்கு கைகளில் முன்னுள்ள ஒரு கையில் உருத்திராக்க மாலை, மற்றொருகையில் தீ அல்லது பாம்பு, உடல் வளைவின்றி நிமிர்ந்த நிலை, சடை மகுடம், அதில் எருக்கம்பூ, பாம்பு, சிறுமணி, கபாலம், பிறைச்சந்திரன், கங்கை அணிய, இடக்காதில் அங்க பத்திரமும் வலக்காதில் குண்டலமும், கழுத்தில் உருத்திராக்க மாலையுடன், வெண்ணிற மேனி கொண்டவர். பார்வை பாதம் நோக்கி இருக்கும்.
தன்பால் அன்பும் உலகத்தின்பால் உவப்பும் உண்டாக்குவார். ஞான யோக நெறியை சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்களுக்கு கற்பிக்கும் பாங்குடன் உலக மக்களுக்கு கற்பித்தருளும் வடிவம்-தட்சிணா மூர்த்தி-ஆலமர்செல்வர்/ தென்முகக் கடவுள்!. காட்சி சிறப்பு: திரு இரும்பூளை (ஆலங்குடி), பட்டமங்கலம்(திருப்புத்தூர்), திருச்சி மலைக்கோட்டை, திருவொற்றியூர்( சென்னை), வள்ளலார் கோவில் (மயிலாடுதுறை), திருவானைகா, திருநாவலூர், திரு முண்டீசுவரம், இலம்பையங்கோட்டூர், தியாகசமுத்திரம், திருநெடுங்களம், திருவிடைசுழி, திருவையாறு, திருப்புனவாயில், சிதம்பரம், காஞ்சி கயிலாசநாதர், அறப்பளீசுவரர் (கொல்லிமலை)

#####

வியாழக்கிழமை, 07 September 2017 18:48

வீரபத்திரர்!

Written by

ஓம்நமசிவய!

பாதாள விநாயகா போற்றி!
பார்வதி மைந்தா போற்றி!
பாலசந்திர விநாயகா போற்றி
பால விநாயகா போற்றி


வீரபத்திரர்!

காசிபர் முனிவருக்கு திதி, அதிதி மூலம் பிறந்தவர்கள் தேவர்கள் மற்றும் அசுரர்கள். இருதரப்பினரும் சகோதர்களாக இல்லாமல் தீராப்பகைக் கொண்டு போர் புரிந்து வந்தனர். இந்திரன் அசுரர்களை வெற்றி கொண்டு போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் வீரமார்த்தாண்டன் என்ற அசுரனே தேவர்களை வெல்லக் கூடியவன் என்று அவனை அழைத்து பிரமதேவனை நோக்கித் தவமிருக்கச் செய்தார். வீரமார்த்தாண்டன் தவமிருந்து மூன்று உலகங்களிலும் தன்னை வெல்ல யாருமில்லாதபடி அரசாள வரம் வேண்டிப் பெற்றான்.
வரம் பெற்றதும் அகந்தை கொண்டு தேவர்கள் மீது போர்தொடுத்து வெற்றி பெற்று இந்திரனை துரத்திவிட்டு தேவருலகத்தை தானே ஆட்சி செய்தான். தேவமாதர்கள், எண்திசைக் காவலர்கள் ஆகியோரைத் துன்புறுத்தி, பசுக்களைக் கொன்று, முனிவர்கள் செய்யும் வேள்விகளைச் சிதைத்தான். தேவர்கள் வீரமர்த்தாண்டனை எப்படி ஒழிப்பது என ஆலோசனை நடத்த, அதை அறிந்த வீரமார்த்தாண்டன் அவர்களைக் கொல்லத் துரத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தார்கள்.
பெருமான் வீரபத்திரரை அழைத்து வீரமார்த்தாண்டனை அழிக்க கட்டளையிட வீரபத்திரர் படையுடன் சென்று அவனை கொன்றார். இந்திராதி தேவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அசுரர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களைத் தீர்த்து அசுரர் தலைவன் வீரமார்த்தாண்டனை அழிப்பதற்கு சிவன் அம்சமாக உருவானவர்- வீரபத்திர மூர்ர்த்தி..

#####

ஓம்நமசிவய!

பக்தி விநாயகா போற்றி!
பஞ்சபூத விநாயகா போற்றி!
பாகீரத விநாயகா போற்றி!
பாசாங்குச விநாயகா போற்றி!


கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி!

நான்முகனிடமிருந்து இறப்பில்லா ஆயுளும், வல்லமையும், வெற்றியும் அடைய தவமிருந்து சிவபிரானைத் தவிர என்ற நிபந்தனையுடன் வரம் பெற்றான். யானை வடிவு கொண்ட கயாசூரன் பிரம்மனிடம் வரம்பெற்ற கர்வத்தால் எல்லோரிடமும் போர் தொடுத்து துன்புறுத்தத் தொடங்கினான். இந்திரனின் ஊர்தி ஐராவதத்தின் வாலைப் பிடித்து சுழற்றி அடித்தான். அக்கினி, யமன், நிருதி ஆகிய எண்திசைக் காவலர்களை வென்றான். பின் தன் குலத்தினரையும் துன்புறுத்த தொடங்கினான். அருந்தவத்தோர் காசி சென்று இறைவனிடம் கயாசூரனைப் பற்றிக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டினர்.
அருதவத்தோர் காசி சென்றதை அறிந்து காசிக்கு வந்த கயாசூரன் நான்முகனின் எச்சரிக்கையை மறந்து சிவனின் இருப்பிடத்திற்கு வந்தான். பேரிரைச்சலுடன் பெருமானை எதிர்த்தான். சிவன் தன் காலால் அவனை உதைத்துத் தள்ளி விழியால் தீப்பொறி கக்கி யானை உடல் கொண்ட கயாசூரனது தோலை உரித்தார்.
யானை வடிவங்கொண்ட கயாசூரனை அழித்த வடிவம்-கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி!. நிகழ்வு நடந்த தலம்.:காசி (கீர்த்திவாசேசுவரர்)

#####

வியாழக்கிழமை, 07 September 2017 11:45

திரிபுராந்தகர்!

Written by

ஓம்நமசிவய!

நர்த்தன விநாயகா போற்றி!
நவசக்தி விநாயகா போற்றி!
நித்திய கணபதியே போற்றி!
பஞ்சமுக விநாயகா போற்றி!


திரிபுராந்தகர்!


வரங்களால் பலம் பெற்ற வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை அமைத்து அக்கோட்டைகளுடன் எவ்விடத்தும் செல்லும் ஆற்றல் பெற்று உலகிற்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தனர். விண்ணோர்கள் ஒன்று கூடியும் அவர்களை அழிக்க முடியவில்லையாதலால் சிவனிடம் வேண்டினர். சிவன் அக்கோட்டைகளை தகர்த்தெறிய திருவுளம் கொண்டார் எல்லா கடவுளும் தங்களின் ஆற்றலில் பாதியை சிவனுக்கு அளிக்க முன்வந்தனர்.
அனைவரும் சேர்ந்து உருவாக்கிய தேரில் பூமி தட்டானது. சூரிய சந்திரர்கள் சக்கரங்களாயினர். வேதங்கள் குதிரைகளாயின. மேருமலை வில்லானது. வாசுகி நாணாகியது. திருமால் அம்பானார். அக்னியே அதன் முனை. இமயன் அதன் இறகு. நான்முகன் தேரோட்டியானார். போருக்குப் புறப்பட்ட பெருமான் தேரில் ஏறி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கினார். பெருமானுடைய வலக்கால் சிறிது முன்னேயும், இடக்கால் சற்று வளைந்து பின்னேயும் அம்பெய்ய அமைந்த நிலை. நான்கு கரங்களில் வலக்கரங்களில் சிம்மகர்ணமுத்திரையில் அம்பு பூட்டிய வில்லின் நாணைப் பற்றியிருக்கும், இடக்கரங்களில் ஒன்று வில்லைப் பற்றியிருக்கும், மற்றொரு வலக்கரம் டங்கத்தையும், இடக்கரம் மானையும் பற்றியிருக்கும். சடாமகுடம் அணிந்து இடப்பக்கம் உமையுடன் இருப்பார். திரிபுரம் எரித்தபோது ஆடிய ஆடல் கொடுகொட்டி பாண்டரங்கம் எனப்படும்.
தூலம், சூக்குமம், காரணம் என்ற மூவகை உடல்களையும் அவற்றிற்கு காரணமாய் அமைந்த ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் அழித்து இறைவன் நமக்கு அருள் செய்யும் திறத்தினையே அறிவுறுத்தும் வடிவம். மாறுபட்ட ஆன்மாக்களை வசப்படுத்தும் முக்குணங்களை மாற்றுவார். முப்புரங்களை எரித்து சாம்பலாக்கிய திரிபுராந்தகர் வடிவம். நிகழ்வு நடந்த தலம்: திருவதிகை. காட்சி: திருவிற்கோலம், திருச்செங்காட்டங்குடி. காஞ்சி கயிலாசநாதர்,

#####

ஓம்நமசிவய!

தும்பிக்கை நாதா போற்றி!
துளைக்கர விநாயகா போற்றி!
தேசிய விநாயகா போற்றி!
தொப்பக் கணபதியே போற்றி!


சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!


இறை அருள் இருந்தால்தான் இன்பமாக வாழலாம். அகந்தை தலை தூக்கினால் அல்லல்கள் ஏற்படும். இறையருளால்தான் இடர் நீங்கப் பெறும். இந்திரன் தானே பெரியவன் என்ற ஆணவத்தோடு கயிலை சென்றான். இந்திரன் ஆணவத்துடன் வருவதை அறிந்த சிவன் தானே வயிற்காப்போனாய் நின்றார். இந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் இருக்க கோபங்கொண்டு தன் வஜ்ராயுதத்தால் அக்காவலனை அடிக்க வஜ்ராயுதம் பொடிப் பொடியானது கண்டு அதிர்ச்சியடைந்தவன் முன் சிவன் தோன்ற தன்னை மன்னிக்க வேண்டினான். அவனை மன்னித்து தன்னிடம் தோன்றிய கோபக் கனலைக் கடலில் எறிந்தார்.
கடலில் விழுந்த கோபக் கனல் ஒரு குழந்தையாக மாறி நீரால் வளர்க்கப் பட்டமையால் அதற்கு சலந்திரன் என பிரம்மன் பெயரிட்டார். வாலிபப் பருவம் அடைந்தபின் அசுரத் தச்சன் மாயனால் சாலந்தரம் என்ற நகரை உருவாக்கி காலநேமி என்பவரின் மகள் பிருந்தையை மணம் செய்துகொண்டு வாழ்ந்தான். தேவர்கள் அனைவரையும் போரிட்டு வென்றான். திருமால் பல காலம் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் அவனைப் பாராட்டியதைக் கண்ட இந்திரன் மிகவும் பயந்து கயிலையில் தங்கியிருந்தான். இதை அறிந்த சலந்திரன் கயிலைக்குப் புறப்பட்டான்.
தேவேந்திரன் சிவபெருமானை சரன் அடைந்தான். பெருமான் ஒரு வயோதிகர் உருவெடுத்து ஊன்றிய தடியுடன் கையில் கமண்டலமும் கொண்டு தேவேந்திரனை பின்வரச் சொல்லி தான் முன் நடந்தார். வழியில் சலந்தரனைக் கண்டவர் நீ யார் எனக்கேட்டார். நான் கடல் அரசனின் மகன். என்பெயர் சலந்திரன், நான் சிவபெருமானிடம் போர் புரியச் செல்கின்றேன் என்றான். பெரியவர் சிவனுடன் சண்டை செய்தால் நொடிப்பொழுதில் மரணமடைவாய் .உடனே இங்கிருந்து போய்விடு என்றார். ஒரு நொடிப்பொழுது தங்கியிருந்து என் ஆற்றலைக் காணுங்கள் என்றான் சலந்திரன்.
நான் உன் வல்லமையைக் காணத்தான் வந்தேன். என்று கூறி தன் காலால் ஒரு சக்கரத்தை வரைந்து இந்த வளையத்தை உன் தலைமேல் தூக்கிவைக்க முடியுமா? எனக் கேட்டார். என்ன முயற்சி செய்தும் சலந்திரனால் முடியவில்லை. தன் முழு ஆற்றலையும் உபயோகப்படுத்தி அந்த சக்கரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி தலைமேல் வைத்ததும் அது அவனை இரு கூறாக்கியது. அசுரப்படையை தீயினால் சாம்பலாக்கினார்.
பின் இரு கரங்களில் மழு, மான், முன் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் கத்தரி முத்திரையுடன் இருப்பார். கோபக்கனலை அழித்து மனம் அமைதிபெறச் செய்வார். தன் கோபக்கனலில் உருவான சலந்திரன் தேவர்களுக்கு தீரா துயர் விளைவித்ததால் தன் பாதத்தினால் நிலத்தில் சக்கரம்கீறி அதனைக் கொண்டு சலந்திரனை அழித்த வடிவம்*சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!. நிகழ்வு நிகழ்ந்த தலம்: திருவிற்குடி

#####

ஓம்நமசிவய!

திரிமுக விநாயகா போற்றி!
துங்கக் கரிமுகனே போற்றி!
துண்டி விநாயகா போற்றி!
துன்முக விநாயகா போற்றி!


காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!


இறப்பு பற்றிய எண்ணமே மனிதனை தத்துவ நெறிக்கு அழைத்துச் செல்லும். தோற்றம் உண்டேல் மரணம் உண்டு என்பது வெள்ளிடைமலை. காலகால மூர்த்தி காலனிடமிருந்து நம்மைக் காப்பவர்.
மணல்மேடு என்ற ஊரில் கவுசிக முனிவரின் மகன் மிருகண்டு முனிவர் தம் மனைவியருடன் வாழ்ந்து வந்தார். மகப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம் புரிய குறைந்த அறிவும் நீண்ட ஆயுளும் கொண்ட மகன் வேண்டுமா அல்லது நல்லறிவும் நற்குணங்களும் கொண்ட பதினாறு வயதுவரை வாழும் மகன் வேண்டுமா என இறைவன் கேட்க நிறைந்த அறிவுள்ள மகனே வேண்டும் எனக் கேட்க மார்க்கண்டேயன் பிறந்தான். தனக்கு பதினாறு வயது நிரம்பும் அளவில் தன் ஆயுளைப் பற்றிய குறையை அறிகின்றான்.
பெற்றோர் அனுமதியுடன் திருக்கடவூருக்கு வந்து அமிர்தகடேசரை வழிபட்டு வர, குறித்த பதினாறு வயது நிரம்பியதும் உயிரைக் கவர காலன் வர மார்க்கண்டேயன் அச்சம் கொண்டு திருமேனியைக் கட்டிப்பிடிக்க லிங்கத்துடன் பாசக்கயிறை வீசிய காலனை தனது இடது காலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக வாழ அருள் புரிந்தார்.
மூன்று திருக்கண்களுடன் நான்கு கரங்கலுடன் கூரிய பற்களுடன் திகழ்வார். வலபக்க ஒரு கரத்தில் சூலம் காதுவரை உயர்ந்தும், மற்றொரு கரத்தில் பரசு / அருட் குறிப்பும், இடப்பக்க முன் கரத்தில் சூசி குறிப்புடன், பின்கரம் விசுமய முத்திரையுடன்- வியப்பினை உணர்த்தும் குறிப்புடன் இருக்கும். வலது கால் தாமரையிலும், இடது கால் எமனுடைய தலையிலும் இருக்கும்.
துன்பங்கள் அனைத்தையும் துடைத்து அபயம் அருளுபவர், மார்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த வடிவம்-காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!. வீரட்டம் புரிந்த நிகச்சியான இது நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். காட்சி: பட்டீசுவரம், திருச்செங்காட்டாங்குடி. மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880286
All
26880286
Your IP: 44.222.149.13
2024-03-19 13:53

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg