gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சபைகள்! (18)

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

#####

லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை

காமேஸ்வரி-காமேஸ்வரர் -மாயையின் மூன்று குணங்களில் சுத்த சத்வ குணத்தில் பிரம்மத்தின் சம்பந்தமாக இருப்பது வித்தை எனப்படும். ஸ்ரீவித்யை என்றால் பரம மங்களம். அது மோக்ஷத்தை அருளவல்ல பிரும்ம வித்யா ஸ்வரூபினியான சித் சக்தியாகும். மின்னல் கொடிபோல் பிரகாசித்து விளங்கும் அந்த சித் சக்தியே சிந்தையும், மொழியும் செல்லாத நிலைமையான ஸ்ரீவித்தையாகும். பரப்பிரும்ம ஸ்வரூபத்திற்கு அபிமானதாய், சுத்தமான சைதன்ய வடிவினதாய் உள்ள சக்தியே சித் சக்தி.

ஸ்வரூபம்தான் பிரபஞ்ச ஆதாரம். மாயையின் முக்குணங்களில் பிரதிபலித்து வடிவமாகத் தோன்றுவது சித்சக்தியே. சக்தியின் கருணையால் பிறப்பது அருள். சிவமே அன்பு. அன்பு இன்றி அருள் சுரக்காது. அருள் இன்றி அன்பு பயன்படாது. அருளினால் இம்மை, மறுமை இருபயனும் விளையும், நிர்க்குண உபாசனையால்- போதனையால் மறுமைப் பயன் வேண்டுவோர் இகசுகம் வேண்டார். தாய் தன் சேய்க்கு வேண்டியதைக் கருணை மூலமாக அளிப்பாள். ஆகவே சித் சக்தியே ஸ்ரீவித்தை. வித்யை என்றால் அவித்யை ஒழிக்கும் சாமர்த்திய சக்தி உடையது.

சக்தி உபாசனையை ஸ்ரீவித்யை என்றும் சகுணம் என்றும் சொல்வர். இதனால் இகத்திலும் பரத்திலும் பயன்கள் உண்டு. சிவ உபாசனையை பிரும்ம வித்தை என்றும் நிர்க்குணம் என்றும் சொல்வர். இதனால் ஜீவன் முக்தனாய் மறுபிறவியற்று சச்சிதானந்தாமாய் விளங்கலாம். அன்பே சிவம் என்று சொல்வர். சிவத்தை எளிதில் அறிய முடியாது. ஆனால் அன்பை நம்மால் அறிய முடியும். ஆகவே அன்பினால் சிவத்தை அடைய முடியும். அந்த அன்பே சித்சக்தி. சித்சக்தியாகிய தாயின் கருணை நமக்கு ஏற்படாவிட்டால் நம்மால் இந்தப் பிறவிப் பெருங்கடலை கடக்க முடியாது. எல்லா வித்தைகளுக்கும் லட்சியமாய், ஆண் பெண் அலி என்ற லிங்க வேறுபாடு இல்லாததாயும் பிறவிப் பெருங்கடலில் துன்பத்தில் உழல்பவர்களுக்கு தாரகம்- படகு போன்று காப்பாற்றுவதால் அப்பரம் பொருள் சக்தி-பராசக்தி எனப்படும். அவள் ஒருவளே பிரும்ம ரூபத்தில் சிருஷ்டிப்பவளாகவும், விஷ்ணு ரூபத்தில் உலகை காப்பவளாகவும், ருத்ர ரூபத்தில் சம்ஹரிப்பவளாகவும் இருக்கின்றாள்.

வித்தில்லாமல் பயிர் இல்லை. வித்தாய் விளங்கும் சிவத்தினுள் சக்தி அடங்கியுள்ளது. விதை முளைத்தெழும்போது சக்தி சிவத்தை வளர்க்கும். இறுதியில் வளர்ந்த சக்தி அடங்கும் இடம் சிவன் என்ற வித்தே என்பதே தத்துவம்.

பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருமூர்த்திகளுக்குமேல் ஈஸ்வர ஸ்வரூபமாகிய மகேசுவரன் சதாசிவன், அவர்களுக்குமேல் காமேசுவர் காமேஸ்வரியாக சிவசக்தி ஐக்ய நிலை. ஈஸ்வரனிடத்தில் முதலில் தோன்றியது சக்தி தத்துவம். பின் திரிமூர்த்தி மற்றும் மூன்று சக்திகள் தத்துவம். அதிலிருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுகிறது.

லலிதாபரமேஸ்வரி-ஈஸ்வரன், திரிபுரசுந்தரி-திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி-இராஜராஜேஸ்வரர். . எல்லாம் காமேசுவர்- காமேஸ்வரியே!

தேவியின் அங்க தேவதை- பாலா, உபாங்கதேவதை- அன்னபுரணா, பாசத்திலிருந்து தோன்றிய ப்ரித்தியங்க தேவதை- அச்வாரூபா, இடது- இலட்சுமி, வலது- சரஸ்வதி, அருகில் புத்தியிலிருந்து தோன்றிய ராஜமாதங்கி-சியாமளாதேவி-மந்திரிணீ, அஹங்காரத்தினின்று தோன்றிய வராஹி-தண்டினீ, சண்டி, வைஷ்ணவி,

யோகினிகள் -ஒவ்வொரு திதிக்கும் உரியவள் அம்பிகையின் அம்சமான ஒரு தேவி. இத்தேவிகள் மகாநித்யையுடன் 16 பேர். 1.காமேஸ்வரி, 2.பசுமாலினி, 3.நித்யக்லின்னா, 4.பேருண்டா, 5.வந்ஹிவாஸினி, 6.மஹாவஜ்ரேஸ்வரி, 7.சிவதூதீ, 8.த்வரிதா, 9.குலஸூந்தரி, 10.நித்யா, 11.நீலபதாகா, 12.விஜயா, 13.ஸர்வமங்களா, 14.ஜ்வாலாமாலினி, 15. சித்ரா இந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய் விளங்கும் மஹாநித்யாதேவி- நித்யாகாமேச்வரி. இந்தச் சக்திகளுக்கு பொதுவாக யோகினிகள் எனப்பெயர். அம்பிகையின் அங்கதேவதை களான இவர்கள் ஸ்ரீ சக்கரத்தின் நடுவிலுள்ள முக்கோணத்தைச் சுற்றி இருப்பார்கள். அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு திதி என்று தனது அங்கமான பதினைந்து நித்யாக்களைப் பூஜிப்பதால் தேவி பரம சந்தோஷமடைகின்றாள். இது திதி நித்யா பூஜை எனப்படும். இதில் சுக்லபக்ஷம், கிருக்ஷ்ண பக்ஷம் என்ற இரு பக்ஷங்களிலும் நடுநாயகமாக வீற்றிருப்பவள் த்வரிதா என்கிற நித்யாதேவி. இவளுடைய திதி தினம் அஷ்டமி. இருவிதச் சக்திகளுடன் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்பவளும் இவளே சிற்றின்பத்தில் ஆழ்த்துபவளும் இவளே. அதனால் இவள் திதியில் தேவ காரியங்கள் மட்டுமே செய்யப்படும்.

பிரதிபத (எ) பிரதமை திதி –காமேஸ்வரி— நெய் நிவேதித்து பூஜை -பிணி நீக்கம்,
துவிதை திதி –பசுமாலினி- சர்க்கரை நிவேதித்து பூஜை –ஆயுள் பெருக்கம்,
த்ரிதியை திதி –நித்யக்லின்னா- பால் நிவேதித்து பூஜை –சகல துக்க நீக்கம்
சதுர்த்தி திதி –பேருண்டா- பக்ஷணம் நிவேதித்து பூஜை –விக்ன நிவர்த்தி
பஞ்சமி திதி –வந்ஹிவாஸினி- வாழைப்பழம் நிவேதித்து பூஜை –புத்தி சூட்சுமம்
சஷ்டி திதி –மஹாவஜ்ரேஸ்வரி- தேன் நிவேதித்து பூஜை –உடல் ஒளி
சப்தமி திதி -சிவதூதீ- வெல்லம் நிவேதித்து பூஜை –சேக நிவர்த்தி
அஷ்டமி திதி -த்வரிதா- தேங்காய் நிவேதித்து பூஜை – தாப நிவர்த்தி
நவமி திதி –குலஸூந்தரி-- நெற்பொறி -நிவேதித்து பூஜை – இவ்வுலகச் சுகம்
தசமி திதி –நித்யா- கறுப்பு எள் நிவேதித்து பூஜை - யமலோக பய நிவர்த்தி
ஏகாதசி திதி –நீலபதாகா- தயிர் நிவேதித்து பூஜை –தேவி ஆதிக்கம்
துவாதசி திதி –விஜயா- அவல் நிவேதித்து பூஜை –தேவியிடம் ஆனந்தம்
த்ரையோதசி திதி –ஸர்வமங்களா- கடலை நிவேதித்து பூஜை –சந்த்தி விருத்தி
சதுர்த்தசி திதி –ஜ்வாலாமாலினி- சத்துமா நிவேதித்து பூஜை –சிவன் அருளுக்குப் பிரியமாகும் தன்மை
பௌர்ணமி திதி/ அமாவாசை திதி சித்ரா--பாயாசம் நிவேதித்து பூஜை –பிதுர்களை கரையேற்றுதல்
இந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய்- காரியத்திற்கு காரணமாய் விளங்கும் மஹாநித்யாதேவி- நித்யாகாமேச்வரி.

அந்தந்த நட்சத்திரன்று லலிதாபரமேஸ்வரி-ஈஸ்வரன், திரிபுரசுந்தரி-திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி-இராஜராஜேஸ்வரர் –க்கு பூஜைக்குரிய நிவேதனப் பொருள்.

அஸ்வினி-நெய், பரணி-எள், கார்த்திகை-சர்க்கரை, ரோகிணி-தயிர், மிருகஷீரிடம்-பால், திருவாதிரை-கிலாடம், புனர்பூசம்-தயிரேடு, பூசம்-மோதகம், ஆயில்யம்-பேணி, மகம்- கிருத மண்டகம் (நெய்த்திரட்சி, நெய்ப்பாலேடு), பூரம்-கம்சாரம் (நீர்சாரம்), உத்திரம்-வடபத்திரம், ஹஸ்தம்-கிருதபூரம் (நெய்வெல்லம்ஹல்வா), சித்திரை-வடை, சுவாதி- கோகரசகம் (தாமரை ரசகம்), விசாகம்-பூர்ணயம், அனுஷம்-மதுசூரணம் (வள்ளிக் கிழங்கு), கேட்டை-வெல்லம், மூலம்-அவல், பூராடம்-திராக்ஷை, உத்திராடம்-கர்ச்சூரி (பேரிச்சம்), திருவோணம்-ராசகம், அவிட்டம்-அப்பம், சதயம்-நவதீதம் (வெண்ணெய்), பூரட்டாதி-பயிறு, உத்திரட்டாதி-மோதகம், ரேவதி-மாதுளம் பழம்.

ஸ்ரீமேரு சக்கரம் அமைப்பு!

கீழே சதுரமான ஒரு மூன்று அடுக்கு மேடை மேலே செல்ல செல்ல குருகும்.
நான்கு முனைகளிலும் முறையே சூரியன், சந்திரன், முக்கோணம், சதுரம்..
அதன் மேலே 3 வட்ட வடிவமான மேடை மேலே போகப் போகப் குருகிக்கொண்டே செல்லும்.
அதற்கு மேலே 16 இதழ் தாமரை.
அதற்கு மேலே 8 இதழ் தாமரை.
அதற்கு மேலே 14 முக்கோணம்
அதற்கு மேலே 10 முக்கோணம்
அதன் மேலே 10 முக்கோணம்
அதன் மேலே 8 முக்கோணம்
அனைத்துக்கும் மேலே உச்சியில் ஒற்றை முக்கோணம்.
அதன் நடுவில் ஒரு வட்டம் அதில் உருண்டையான பிந்து வடிவம் (அம்பாள்).
உச்சியிலிருந்து பார்த்தால் 43 முக்கோணம் தெரியும்.
ஸ்ரீ மேருவை செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் உருவாக்குவது வழக்கம்.
சாக்த வழிபாட்டிற்கு ஸ்ரீவித்யா வழிபாடு என்பர்,

ஸ்ரீசக்ரம் சர்வரோகஹர ஸ்ரீசக்ரத்தின் முக்கோணத்தில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌளினி ஆகிய லலிதா சகஸ்கர நாமத்தை இயற்றிய எட்டு தேவதைகள் உறைவதால்-சகஸ்ரநாம அர்ச்சனைகளை இந்த ஸ்ரீ எந்திரத்திற்கு செய்ய காமாட்சி அருள்புரிந்ததால் கர்ப்பகிரஹத்தை முக்கோணவடிவில் அமைத்து மேலும் உக்கிரகமாக இருந்ததால் எட்டு திக்குகளிலும் இருந்த காளியை ஆகர்ஷித்து ஸ்தம்பனம் செய்து ஸ்ரீசக்ர சுற்றில் அடைத்ததால் அன்னை சாந்த சொரூபியாகி அருள். தேவியின் விருப்பப்படி தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றின் கோடியில் உள்ள மோட்சத்திற்கு அழைத்து செல்வதாலும், கோடி விருப்பங்களை- கோடி காமங்களை நிறைவேற்ற ஸ்ரீசக்ர பதக்கம் அருளி ஈசன் அருள்.

பார்வதி தேவியின் நவ பெயர்கள். 1.ஷைலபுத்ரி, 2.பிரம்மசாரினி, 3.சந்திரகாந்தா, 4.குஷ்மாந்தா, 5.ஸ்கண்டமாதா, 6.காத்யாயினி, 7.காளாராத்ரி, 8.மகாகௌரி, 9.சித்தாத்ரி.

பராசக்தியின் பத்து (தசமகா) வடிவங்கள்- வித்தைகள் சித்தவித்தைகள் மகாவித்தைகள் எனப்பட்டாலும் துரியமானதும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டதுமான தேவியின் ஆனந்த வடிவமே மஹாவித்தை எனப்படும். அந்த ஈசுவர சக்தி தேவியிடமிருந்து தோன்றியவர்களே தசமஹாவித்தை. எண் திசைகள் மற்றும் நிலம், வானம் எனப் பத்து திக்குகளில் தோன்றிய இந்த தசமஹா வித்தைகளே விஷ்ணுவின் தசாவதார காரியங்களை நிறைவேற உதவியுள்ளார்கள்.

தசமஹாவித்தைகள்!


1.தாரா!
2.கமலாத்மிகா!
3.சின்னமஸ்தா!
4.காளி!
5.திரிபுர சுந்தரி!
6.மாதங்கி!
7.பகாளாமுகி!
8.புவனேஸ்வரி!
9.திரிபுரபைரவி!
10.தூமாவதி!

இந்த தசமஹாவித்யா எனப்படும் பத்துவிதமான சொரூபங்களில்

மாதங்கி, புவனேஸ்வரி, திரிபுரசுந்தரி, மஹாலட்சுமி என்ற நான்கு சொரூபங்களும் சத்வ குணத்தைச் சார்ந்த சொரூபங்கள்.
மாகாளி, தாரா, பைரவி, சின்னமஸ்தா ஆகிய நான்கு சொரூபங்களும் ராஜச குணம் சார்ந்தவர்கள்.
தூமாவதி தாமஸ குணம் சார்ந்த சொரூபம்.
ஸ்ரீபகளாமுகி தேவி சத்வ ,ராஜச, தாமஸ என்ற மூன்று குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவள். இதன் காரணமாக சர்வ வல்லமை பெற்றதனால் திடீரென்று கோபம் / மகிழ்ச்சி அடையக்கூடும்.


#####

வியாழக்கிழமை, 07 June 2018 19:33

நவகிரகங்கள்! சூரிய சபா!

Written by

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

$$$$$

நவகிரகங்கள்! சூரிய சபா!

கிரகங்களின் நிலைகளால் உலக உயிர்களுக்கு அவ்வப்போது வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளவே நவகிரகங்களின் வழிபாட்டை முன்னோர்கள் நெறிமுறைப் படுத்தியுள்ளனர். உயிர்கள் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களை உயிர்கள் அடைகின்றன. துன்பங்களின் பாதிப்பை நீக்க / குறைக்கவே கிரஹ வழிபாடு செய்கின்றோம். நவகிரகங்கள்: கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டு இயங்குவதால் சூரிய சபா.

காலத்திற்குத் துணைபோவதுதான் கிரகங்களின் செயல்பாடுகள். உயிர்களின் கர்ம வினைக்கு ஏற்ப கோள்கள் பலன்களைத் தருகின்றன. அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல்நலம், நீண்ட ஆயுள், நாட்டில் பசுமைக்கு நல்ல மழை என்ற அனைத்தையும் இவைகளே கொடுப்பதால் இவைகளைத் திருப்தி படுத்த வேள்விகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

வருங்காலம் தெரியா நவக்கிரகங்கள்- ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தை பொருட்டு அதன் பலனாக மனிதர்களுக்கு காலம் நேரம் கணித்து இன்னது நடந்தது. இது நடக்கும் எனக்கூறுவது ஜோதிடக்கலை. இக்கலைக்கு முக்கியமாக கிரகங்களின் நிலையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எல்லோருக்கும் நிலையைக் கணிக்க உதவும் அந்த கிரகங்களுக்கு தங்களின் நிலை தெரியாத ஓர் காலம் வந்தது.

வருங்காலம் பற்றி சொல்ல ஏதுமில்லை என்ற கால மகரிஷியிடம் உங்கள் எதிர்காலம் பற்றித் தெரியுமா எனக்கேட்க அதிர்ந்தவர் வந்திருப்பது காலதேவன் என்பதை உணர்ந்து தன் எதிர்காலம் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார். எதிர்கால பாதிப்புகளை அகற்ற நவக்கிரக நாயகர்களை வணங்க அவர்கள் அவருக்கு அதைப் போக்க அருள் புரிந்தனர் ஒன்பது பேரும்.. காலவமுனிவருக்கு தொழுநோயிலிருந்து காப்பாற்ற வரம் அளித்தனர்.

ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் காலத்திலேயே ஆத்மாக்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க வேண்டும் என்பது நியதி. அந்த நியதி மீறிய நவக்கிரகங்களை பிரம்மா சபித்தார். காலமகரிஷியின் தொழுநோய் நீங்க வரமளித்தவர்கள் அந்தக் காலம் முழுவதும் அதேநோயால் துன்புறுக என்ற சாபமடைந்த நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்க திருமங்களக்குடி சுற்றியுள்ள ஒன்பது தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்த்தத்தில் திங்கள் கிழமை காலையில் குளித்து எருக்க இலையில் தயிர் சாதம் உண்டு மற்ற நாளில் விரதமும் இருந்து பிராணநாதரை வணங்கி வழிபட்டு வர தொழுநோய் தோஷம் நீக்கியது,

தங்களுக்குத் தெரியாமல் வீடு- இடம் மாறிய நவகிரகங்கள்! -தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஊரில் பிறந்த இடைக்காடர். ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தார். அவைகளை மேய விட்டு சிந்தனைவயப்பட்டு மரத்தடியில் அமர்ந்து அமைதியாய் இருப்பார். ஒருநாள் இவ்வாறு அமர்ந்திருக்கையில் வான்வழி சென்ற சித்தர் ஒருவர் கீழிறங்கி நீர் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாய் என வினவினார்.

சுயநினைவிற்கு வந்தவர் அவருக்கு பால் கொடுத்து தாகம் தீர்க்க, மனம் மகிழ்ந்த சித்தர் இவருக்கு வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் முதலியன உபதேசித்து மறைந்தார். அன்று முதல் இடைக்காட்டுச் சித்தர் ஆனார். அந்த திறமைகளால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குபின் ஏற்படும் பஞ்சத்தை அறிந்தார்.

முன்னெச்சரிக்கையாக எக்காலமும் கிடைக்கும் எருக்க இலைகளைத் திண்ண ஆடு மாடுகளுக்கு பழக்கினார். கெடாமல் இருக்கக்கூடிய குருவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். எதிர்பார்த்தபடி பஞ்சம் வந்தது. புல்பூண்டுகளும் அழிந்தன. எருக்க இலைகளைத் தின்றதால் ஏற்படும் அரிப்பை போக்க ஆடுகள்சுவரில் உடம்பைத் தேய்க்கும்போது சுவரிலிருந்து உதிரும் குருவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு உயிர் வாழ்ந்தார். பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிய இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் உயுருடன் இருப்பதைக் கண்ட நவகிரகங்கள் இவரைப் பார்க்க வந்தனர்.

அவர்களை வரவேற்று வரகு சாதத்தையும் ஆட்டுப்பாலையும் கொடுத்தார். பாலில் சமைத்த உணவை உண்டு அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். நவகிரகங்கள் மயங்கி படுத்திருப்பதைக் கண்ட இடைக்காடர் தன் சோதிட அறிவிற்கேற்றவாறு மழை வருவதற்கான முறையில் கிரகங்களை இடம் மாற்றிப் படுக்கவைத்தார். கிரக நிலைகள் மாறியதால் வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிறைந்தன.

மழையின் குழுமை நவகிரங்களை எழுப்பியது. நாட்டின் பஞ்சத்தைப் போக்கிய சித்தரின் திறமையை பாராட்டினார்கள். மேலும் வரங்கள் கொடுத்து அவரை ஆசிர்வதித்தனர். பல ஆண்டுகள் வாழ்ந்து திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்

சூரியன் உருவத்தை செம்பிலும்-எருக்கு சமித்துடன், சந்திரனை ஸ்படிகத்திலும்-பலாசமித்துடன், அங்காரகன் எனும் செவ்வாய் உருவத்தை சிவப்பு நிறத்திலும்-கருங்காலி சமித்துடன், புதன் உருவத்தை சந்தன மரத்திலும்-நாயுருவி சமித்துடன், வியாழன் என்ற பிரகஸ்பதியை தங்கத்திலும்-அரசு சமித்துடன், சுக்கிரனை வெள்ளியிலும்-அத்தி சமித்துடன், சனி-வன்னிசமித்துடன், ராகு-அருகம்புல்லுடன், கேது-தர்ப்பையுடன் சனி, ராகு, கேது உருவங்களை ஈயத்திலும் வடித்து ஆராதனை செய்ய வேண்டும். இந்த சமித்துகளை தேன், நெய், தயிரில் தேய்த்து கோளுக்கான மந்திரங்களுடன் ஹோமகுண்டங்களில் பய பக்தியுடன் சேர்த்து முடிவில் அந்தணர்களுக்கு உணவளித்து தானங்கள் செய்தால் கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.

சந்தனக் குழம்பில் அந்தந்த உருவங்களை வரைந்தும் வழிபடலாம்.

நைசர்க்க பலம்!- நவகிரக சனியைவிட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சூரியனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட இராகுவும் கேதுவும் பலம் பொருந்தியவர்கள் இந்த ராகு கேது மற்ற கிரகங்களைவிட பலம் பொருந்தியவர்கள். அதை நைசர்க்க பலம் -என்பர்.

நவக்கிரக பிரதிஷ்டை 1.வைதீகப் பிரதிஷ்டை, 2.ஆகமப்பிரதிஷ்டை, 3.சமப் பிரதிஷ்டை என 3 வகைப்படும்.

1.வைதீகப் பிரதிஷ்டை,
சூரியன் - கிழக்கு
சுக்கிரன், புதன் - கிழக்கு
சந்திரன், சனி - மேற்கு
செவ்வாய், ராகு, கேது - தெற்கு
குரு - வடக்கு

2.ஆகமப்பிரதிஷ்டை-
1.அந்தர் மண்டலம்- எல்லா கிரகங்களும் சூரியனைப் பார்த்து இருப்பர்.
சூரியன், செவ்வாய், சந்திரன், கேது – மேற்கு
குரு, சனி, ராகு - கிழக்கு
சுக்கிரன் - தெற்கு
புதன் - வடக்கு

2.பஹிர் மண்டலம்- எல்லா கிரகங்களும் வெளிப்புறம் பார்த்து இருப்பர்.
சூரியன், குரு, சனி, ராகு - மேற்கு
கேது, செவ்வாய், சந்திரன் - கிழக்கு
புதன் - தெற்கு
சுக்கிரன் - வடக்கு

3.சமப் பிரதிஷ்டை-எல்லா கிரகங்களும் ஒரே வரிசையாக மேற்கு பார்த்து இருப்பர்.

நவக்கிர ஸ்லோகம்
”ஓம் ஸ்ரீ ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய ச
குரு சுக்ர சனியச்ச
ராகுவே கேதுவே நம”

$$$$$

நவகிரகங்கள்!

1.சூரியன் எனும் மார்த்தாண்டன்
2.சந்திரன்
3.அங்காரகன் எனும் செவ்வாய்
4.சந்திரனின் மகன் புதன்
5.பிரகஸ்பதி என்ற தேவ குரு வியாழன்
6.சுக்கிரன் என்ற அசுர குரு வெள்ளி 
7.சூரியனின் மகன் சனி
8.நிழற் கிரகம்  ராகு
9.நிழற் கிரகம் கேது

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 11:43

விநாயகர் சபை!

Written by

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் 
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

$$$$$

விநாயகர் சபை!

விநாயகர் தோற்றம்! கிருதயுகத்தில் மனிதர்கள் சத்யம், தர்மம் அடிப்படையில் வாழ்ந்ததால் தங்களின் முயற்சியாலே வெற்றிக்கனியைப் பறிப்பதால், அவர்களுக்குத் தேவையான எல்லாம் கிடைப்பதால், இறையருள் என்ற எண்ணம் தோன்றவில்லை. காலப்போக்கில் நம்பிக்கை மாறி அகம்பாவமாகவும், ஆணவம்மாறி வெறியாக மாறி மமதை உண்டாகி தெய்வ நம்பிக்கை குறைந்தது. மக்களின் மனோபாவம் மாறியதால் பிரம்மா வருந்தி சிவனிடம் சொன்னார். அவர் கணேசரை உருவாக்க திட்டமிட்டார்.

நான்கு யுகத்திலும் பிள்ளையார்!

 கிருதயுகத்தில் காஸ்யப முனிவருக்கும் அதீதிக்கும் மகோத்சுடர் என்ற மகனாகப் பிறந்து பிள்ளையார் தர்மத்தை நிலை நாட்டினார். அன்னை பார்வதிதேவி அளித்த சிம்ம வாகனத்தின் மீது ஆரோகணித்தே அசுரர்களை அழித்தார். ஹேரம்பகணபதி எனும் திருநாமத்தில் ஐந்து முகங்களுடன் பல தலங்களில் இன்றும் சிம்மத்தின் மீது அமர்ந்தே காட்சி அளிகின்றார். இதே கிருதயுகத்தில் கமலாசுரன் என்ற அசுரனை அழிக்க மல்லானர் என்ற பெயருடன் போருக்குப் புறப்படும்போது யாகம் வளர்க்க அதில் தோன்றிய மயிலை வாகனமாக கொண்டார். காட்சி- திருவானைக்கா- அகிலாண்டேஸ்வரி ஆலயம், புதுச்சேரி –மணக்குள விநாயகர் ஆலயம். சிவபெருமானும் தன் காளை வாகனத்தை தந்தருளியுள்ளார். காட்சி-நெல்லை காந்திமதியம்மன் ஆலய விநாயர் சன்னதி, சுசீந்திரம் தனுமாலயன் விநாயகர் சன்னதியில் காணலாம்.

திரேதயுகத்தில் சிவன் -பார்வதியின் மகனாகப் பிறந்து மயூரர் எனப்பட்டார்.

பிள்ளையார் அபூர்வமாக யானை வாகனத்துடன் திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரை அரசாள்வார் விநாயகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி ஆலய கல்யாண விநாயகர் ஆகிய தலங்களில் காட்சி அளிக்கின்றார்- நண்டு வாகன விநாயகராக கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோவிலில் காட்சி அளிக்கின்றார்.

துவாபரயுகத்தில் பராசர மகரிஷி-வத்ஸ்லாவுக்கு மகனாகப் பிறந்து கஜானான் எனப்பட்டார், கிரௌஞ்சன் என்ற அசுரன் சௌபரி முனிவரின் மனைவி மீது ஆசை கொண்டு பார்க்க இதை அறிந்த முனிவர் அவனை மூஞ்சுறுவாக சபித்தார். அப்போதும் அவன் அனைவரையும் துன்புறுத்த மூஞ்சுறுவை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்

கலியுகத்தில் சிவன் பர்வதியிக்கு மகனாகப் பிறந்து விநாயகர் என்று அழைக்கப்பட்டார். வாகனம்-குதிரை என்றிருந்தாலும் அரிதாகவே சென்னப்ப நாயக்கன்பாளையம் (கடலூர்வட்டம்), மலையாண்டவர் விநாயகர் ஆலயம், கோவை குருபதேசிகவுண்டார் விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் குதிரை வாகனத்துடன் காட்சி அளிக்கின்றார். மற்றபடி கலியில் மூஞ்சுறு வாகனத்துடன்தான் காணப்படுகின்றார். சென்னை தியாகநாய நகரில் உள்ள அகத்தியர் கோவிலின் தூணில் பிள்ளையார், சிம்மம், மயில், குதிரை, மூஷிகம் ஆகிய வாகனங்களுடன் காட்சி.

பர்வதராஜனும் அவன் மனைவி மேனையும் உமையே தங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்ட ஈசன் அருள் புரிய இமவானின் புதல்வியாக உமை அவதாரம் செய்ய பார்வத குமாரி எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஈசனை மணாளனாக நினைத்து தவமிருக்க இமயமலைச் சாரலில் பர்ணசாலை அமைத்து தவம் புரிந்து வந்தார்.

சிவபெருமான் மூப்பு முதிர்ந்த முதியவராகத் தோற்றம் கொண்டு திருவெண்ணீர் பூசி ருத்திராஷமாலை அணிந்து கையில் தண்டமும் கமண்டலமும் ஏந்தி பர்வதகுமாரி தவச்சாலைமுன் நின்றார். அந்தணரின் முகப் பொலிவைக் கண்ட பர்வதகுமாரி வந்திருப்பது யார் என அறிந்து நிலத்தில் விழுந்து வணங்கி பர்ணசாலைக்குள் அழைத்து உபசரித்தாள். பர்வத ராஜனின் பெண்ணே உன் தவம் பவித்திரமானது. நீ உன் திரு மாளிகைக்குச் செல். யாம் அங்கு வந்து உன்னை பாணிக்கிரஹணம் செய்து கொள்வோம் என்றார்.

சிவன் காசியில் சப்த ரிஷிகளை நினைக்க தோன்றியவர்களிடம் ரிஷிகளே யாம் பர்வத ராஜனின் குமாரியை திருமணம் முடிக்க விருப்பம் கொண்டபடியால் எனக்காக தாங்கள் பெண்கேட்டு முகூர்த்த நாளை குறித்துவர அனுப்பினார். ரிஷிகள் நாள் குறித்து வந்ததும் பிரம்மன், விஷ்ணு, யஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், சித்தர்கள், குபேரன், காலன், சூரியன், சந்திரன், சாரணர், கிம்புருடர், அசுரர், கருடர், கின்னரர், சாக்கியர், மருத்துவர், சப்த மாதர்கள் அனைவருக்கும் நாரத மகரிஷி அழைப்பு விடுக்க அனைவரும் திருமணத்தைக் காண திரண்டனர்.

திருமணத்தன்று அனைவரும் ஈசனின் வருகையை எதிர்பார்த்திருக்கும்போது பர்வத குமாரியின் மடியில் ஓர் குழந்தை தோன்ற அனைவரும் மருகினர். தேவேந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அந்த மாயக் குழந்தையை வெட்டச் சென்றான். அதைப் பார்த்து குழந்தை சிரிக்க இந்திரன் கை அப்படியே நின்றது. எல்லோரும் சிலையாக நின்றனர். சூழ்நிலையை சட்டென்று புரிந்த நான்முகன் குழந்தையின் அருகில் சென்று அதன் பிஞ்சுக் கால்களை தன் தலையில் தாங்கி ஈசனே உன் உருவத்தை அனைவரும் கண்டிட காட்சிதரும்படி வேண்ட சிவனார் தன் உருவத்துடன் வெளிப்பட்டார். திருமால் ஈசனுக்கு கங்கா ஜலத்தை அபிஷேகித்து பாத பூஜை செய்து பர்வத ராஜனின் பர்வதகுமாரியான எனது சகோதரி பார்வதியை உமக்கு பணிக்கிரஹணம் செய்து தருகின்றேன் என்றார். மாங்கல்ய தாரணம் ஆனது. அக்னி ஹோமகுண்டத்தில் தோன்றி வணங்க அனைவரும் வணங்கி அருள் பெற்றனர்.

தேவேந்திரன் சிவனாரை வணங்கி அசுரர்கள் இந்திரப்பதவியை அடைய வேள்விகளைத் தொடங்க இருப்பதாகவும் அவர்களால் தமக்கும் தேவர்களுக்கும் தொடர்ந்து இன்னல் ஏற்படுவதால் அவர்கள் செயலை தடைசெய்ய ஓர் புத்திரன் அருள வேண்டும் என விண்ணப்பித்தான்..

திருக்கயிலையில் உள்ள பூஞ்சோலையின் சித்திரமண்டபத்தில் ஓம் எனும் பிரணவ மந்திரம் எழுதப்பட்டிருக்கின்றது. அங்கு வந்த சிவனுக்கு பிரம்மனின் வேண்டுகோள் நினைவுக்குவர அத்துடன் அசுரர்களை சம்ஹாரிக்க ஒர் புதல்வனைத் தோற்றுவிக்கும் எண்ணம் இருக்க தானும் பார்வதியும் யாணை வடிவமெடுத்து ஒங்கார பிரணவ மந்திரத்தை பார்க்க பிரணவ வடிவு கொண்ட பிள்ளையார் தோற்றம் உண்டானது என்கின்றது வேதம். அந்த நாளே ஆவணிமாத வளர்பிறை சதுர்த்திஇந்த நாளை நாம் விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடுகிறோம்.

இன்னொரு நிகழ்வு சொல்லப்படுகின்றது. ஒரு சமயம் பார்வதி தன்னிடம் இருந்த மணம் மிகுந்த குளியல் பொடிகளை தன் வியர்வையுடன் கலந்து விளயாட்டாக ஒர் பொம்மை செய்ய அதன் அழகில் கவர்ந்து அதை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டபோது அவருக்கு ஓர் குழந்தையை நினைவூட்டி மார்பில் பால் சுரந்தது. அதனால் அந்தப் பொம்மைக்கு உயிரூட்டி அக்குழந்தையை சிவனிடம் தர நினைத்தாள். அப்போது தான் குளித்துவிட்டு வரும் வரை வாயிலில் காவல் காக்கவும் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் அச்சிறுவனுக்கு கட்டளை யிட்டாள். அப்போது அங்கு வந்த சிவனை யாரென்று அறியாமல் அச்சிறுவன் தடுக்க கோபம் கொண்ட சிவன் அச்சிறுவனின் தலையை வெட்டினார். நீராடிவந்த பார்வதி சிறுவனின் நிலைதனைக் கண்டு மிகுந்த துயரம் கொள்ளவே சிவன் பிரம்மனிடம் வடபுலம் நோக்கிச் சென்று முதலில் அகப்படும் ஓர் தலையைக் கொண்டுவர பணித்தார். பிரம்மா ஐராவதத்தின் மகனைக் கண்டு அவன் தலையை வெட்ட அவன் முரண்டு பண்ண ஓர்கொம்பு ஒடிந்த நிலையில் யானைத் தலையைக் கொண்டுவந்து கொடுக்க சிவன் அந்தச் சிறுவன் உடலில் பொருத்தி உயிர் கொடுத்தார். அந்த நாள் ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தி.

யானை முகத்தைப் பெற்றதானால் கஜானனன் எனப்பெயர் பெற்றார். நாயகன் இன்றி இவன் தோன்றியதால் வி+நாயகன் எனப் பெயர் பெற்றார். வி-இல்லை, நாயகன் இல்லாமல் பிறந்தவர். கணங்களுக்கு தலைவன் கணபதி. இதில் -ஞானத்தையும், -மோட்சத்தையும், பதி-ஞான மார்க்கத்தையும் குறிப்பதாகும்.

விக்னங்களைத் தீர்க்கும் கணேசர் தலை வெட்டப்பட்டதற்கு ஓர் சாபம் உண்டு. மாலி, கமலி இருவரும் சிவ பக்தர்கள். இவர்கள் தவறு செய்ததால் சூரியன் அவர்களை தாக்க வரும்போது சிவன் தன் பக்தர்களைக் காக்க சூலத்தல் சூரியனை தலையில் அடிக்க உலகம் இருண்டது. சூரியனின் தந்தை கோபம் கொண்டு தன் மகன் சூரியனை சூலத்தால் தாக்கியதுபோல் சிவபாலன் தலை சூலத்தால் தாக்கப்படட்டும் என சாபமிட்டார். அதன் பலாபலனே சிவனே தன் சூலாயுதத்தால் விநாயகர் தலையை வெட்டியது.

இந்த நிகழ்வின் பின்னனி என்னவென்றால் முன்பு சிவன் அசுரன் ஒருவனுக்கு ஓர் வரம் அளித்துள்ளார். அதன்படி அந்த அசுரனை வதைக்க தாயின் கருவில் பிறக்காத மனித உருவம் இல்லாதவனால் மரணம் என்றபடி அப்படி ஓர் ஜனனம் தோன்ற ஏற்பட்ட நிகழ்வே வி+நாயகர் ஜனனம். மேலும் பிரம்மாவின் வேண்டுகோளின்படி மக்களிடம் இறை நம்பிக்கையை வளர்க்க ஒருவர் தேவைப்பட்டது. அதுவே விநாயகர் ஜனனத்திற்கான காரணம்.

விக்னங்களை களைபவர் விநாயகர்! கணேசரை ஒதுக்கிவிட்டு செய்யும் எந்த காரியமும் வெற்றியை நெருங்கும் தருணத்தில் தடைகள் ஏற்பட்டு முற்றிலும் எதிர்பார விளைவுகளைக் கொடுக்கும்.

வாழ்க்கையில் ஆண் பெண் இணைப்பு அவசியம் ஆணின்றி பெண்ணில்லை. பெண் இன்றி ஆண் இல்லை. இதனை உணர்த்தும் விநாயகர் மூர்த்தத்தில் தந்தமுள்ள பகுதி ஆண் கூறு தந்தமில்லாத பகுதி பெண் கூறு.

அஃறினை உயர்தினை ஒருமைப்பாட்டை சொல்லும் விதமாக உயிர்களிடம் அன்பு காட்டப்படவேண்டும் என்பதை உணர்த்தும் யானைமுகம், மனித உடல்.

புலால் மறுத்தலின் அவசியத்துடன் சைவத்தின் மேன்மையை யானை முகம் குறிப்பால் உணர்த்தும். சக்தி மிகக்கொண்ட யானை உண்பது தாவர உணவு மட்டுமே.

கணபதியின் ஐங்கரங்கள் சிருஷ்டி-பற்றுள்ளதை பிறப்பித்து பிணைத்து நிற்பது- படைத்தலைக் குறிக்கும் பாசம் தாங்கிய கை,
ஸ்திதி-காத்தல்- விணை சூழ்ந்து மாறி மாறி வரும் பிறவியின் இன்ப துன்பங்களிருந்து விடுபட அஞ்சேல் எனப் பாதுகாப்பு அளிக்கும் கை,
சம்காரம்-அழித்தலைக் குறிக்கும் அங்குசம் தாங்கிய கை,
திரோதானம்-மறைத்தலைச் செய்யும் கை தும்பிக்கை,
அருளல்-அபயம் அளித்த உயிர்கட்கு அருளல் மேதகம் ஏந்திய கை
ஆகிய ஐந்தும் சிவனின் ஐந்தொழில்களும் உலக மக்கள் நலன்கருதி குறைவின்றி நடைபெறவேண்டும் என்பதைக் குறிக்கும்.

கணபதியின் ஸ்வரூபம் ஞானமயமானது. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பிரணவ மூர்த்தம். ஒடிந்த கொம்பு அபர ஞானத்தையும், ஒடியாத கொம்பு பரஞானத்தையும் குறிப்பதாகும்.

விலங்கு, மனிதர், பூதர், தேவர் ஆகிய இவர்கள் இணைந்த திருவுருத்தைக் கொண்டவர் பிள்ளையார். மேனியில் சிவ தத்துவங்களே அடங்கியுள்ளது.

வயிறு தன்னிடம் வரும் உணவைச் செரிக்க வைத்து அதில் உள்ள சத்துக்களை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் ரத்தத்தில் கலக்க வைத்து உடல் முழுவதற்கும் பயன்பட வைக்கின்றது. விநாயகரின் வயிற்றை பேழை வயிறு என்பர். அண்டப் பொருள்கள் அனைத்தும் அதில் அடக்கம். அது பக்தர்களின் பாவங்கள் அனைத்தையும் ஜீரணிக்கும் பெருவயிறு ஆகும். மனிதர்கள் எல்லோரும் இதைப்போலவே தன்னுடையது என்ற சுயமில்லாமல் எதையும் பிறருக்கு தந்து உதவ வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

அவரின் காதுகள் பெரியது. அது நிறைய கேட்க வேண்டும். கேள்வி அறிவு நிறைய வேண்டும் என்பதையும், வாயை மறைக்கும் துதிக்கை குறைவாக பேச வேண்டும், பெரியோரிடம் பேசும்போது கையால் வாயைப் பொத்தி பணிவுடன் கேட்க வேண்டும், பேசுவதில் கவனம் கொள்ளல் வேண்டும் என்பதையும் உணர்த்தும். அவரின் சிறிய கண்கள் எதையும் கூர்ந்து நோக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.

விநாயகருக்கு சுமுகன் என இன்னொரு பெயரும் உண்டு. சுமுகன் என்றால் நல்ல முகத்தை உடையவன் என்பதாகும். அதாவது விருப்பு, வெறுப்பு இல்லாத சமதத்துவத்தில் நிலைபெற்று பேரருள் ததும்பும் ஆனந்தமயமான முகத்தைக் கொண்டவர் விநாயகப் பெருமான்.

விநாயகருக்கு நைவேத்தியமாக நாம் படைப்பது அப்பம் அவல், பொரி கனிகள் ஆகியவையாகும். இது நம் நம்பிக்கை. இறைவனுக்குத் தேவை என எதுவுமில்லை. இவைகள் நாம் எவ்வாறு பக்குவப்படவேண்டும் என்பதையே குறிக்கும்.

ஒரு ஆன்மாவின் ஞான நிலையை சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ சித்தாந்தம் வரிசைப் படுத்தும். இதை எளிதில் புரிந்துகொள்ள ஒருவர் பூ, பிஞ்சு, காய், கனி என்ற நிலைகளைப் புரிந்துகொண்டால் போதும். பக்தி செய்வதில் பூவாகவும், பிஞ்சாகவும் சிலரும், பலர் காய் நிலையிலும், நின்று விடுகின்றனர். கனியாக எல்லோரும் ஆவதில்லை, அதனால் கனிவு இல்லை. வார்த்தையில் இனிமையில்லை. வார்த்தைகளும் செயலும் காயாகவே இருக்கின்றது. உயிர்கள் கனியாக முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்கு அடையாளமாகவே கனிகளைப் படைக்கும் முறையை பெரியோர்கள் உருவாக்கினர். மனித பிறப்பின் நோக்கம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பதே அல்ல. ஏதாவது ஒரு பிறவியில் இந்த உலக பந்தத்தை விட்டு இறைவனை அடைய வேண்டும். கனியால்தான் காம்பிலிருந்து விடுபடமுடியும். உயிர்களே நீங்களும் கனியாக மாற முயற்சியுங்கள்!

அப்ப மாவை கொதிக்கும் எண்ணெய்யில் இட்டால் அது சட சட சள சள என்று சப்தம் போட்டு ஆடி அடங்கும்-அதை அப்பம் என படைகின்றோம். வேகாத மாவுபோன்று பக்குவமடையாத நிலையில் உயிர்கள் நான், நீ எனது உனது என்ற பேதங்களுடன் இயங்குகின்றன. பக்குவமடைந்துவிட்டால் எல்லாம் ஒன்றே என்ற அமைதி நிலவும். இதை உணர்ந்து கொள்ளவே அப்பம் படைகின்றோம்.

அவலை இடிக்க இடிக்க மென்மையாகி மிருதுவாகி சுவை கொடுக்கும். அதுபோலவே வாழ்வில் எந்த அளவிற்கு சோதனைக்கு ஆளாக்கப்பட்டு அவைகளைச் சந்தித்து இறை அருளால் அதைச் சமாளிக்கின்றோமோ அந்த அளவிற்கு எல்ல சூழலிலும் எதையும் சமாளிக்க பக்குவப்படவேண்டும் என்பதை உணர்த்தவே அவலை படைக்கின்றோம்.

படைத்தலில் நெல்லாக இருக்கும் வரை நெல் முளைத்துக் கொண்டே மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும். அதை உமி நீக்கி பொரியாக மாற்றிவிட்டால் முளைத்தல் என்ற நிலை கிடையவே கிடையாது. விநாயகரின் அருளால் இந்த உண்மையை பொறியாக அறிந்த உயிர்க்கு பிறவியே கிடையாது என்பதை உணர்த்தவே பொரியை படைக்கின்றோம்.

ஒலிகளில் அகரமும், உகரமும் சேர்ந்து ஓங்காரமாகி உயர்வுதரும் ஒலியாக மாறுவதுபோல் புள்ளியும் கோடுகளும் சேர்ந்த வரிவடிவமே எழுத்துக்களின் அடிப்படை. புள்ளியை முதலில் வைத்து அதனுடன் சேர்ந்து கோடு நீட்டி எழுதத் தொடங்குவதே வழக்கமாக இருந்து வருகின்றது. இந்தத் தொடக்க வரிவடிவமே பிள்ளையார் சுழி. பிந்து புள்ளி சக்தி வடிவம். நாதம் கோடு சிவ வடிவம். சக்தியும் சிவமும் இணைந்த வடிவமே பிள்ளையார் சுழி. மேலும் புள்ளி ஆதார உயிர். கோடு இறைவன். உயிரும் இறையும் கலந்தால் பேரின்பம். அதலால் புள்ளியும் கோடும் இணைந்த பிள்ளையார் சுழி பேரின்ப பெருவாழ்வின் அடையாளச் சின்னம். நம்மை நல்வழிப் படுத்தும் வழிபாட்டிற்குரிய வரிவடிங்களே புள்ளியும் கோடும். அகரமான உயிர் உகரமான இறைவனுடன் கலந்து உகரமாகவே நின்று புலப்படுவதுபோல் புள்ளியானது கோட்டுடன் இணைந்து உகரமாக பிள்ளயார் சுழியில் இருப்பதால் வினை நீக்கி, வருமுன் காத்து இருக்க, எல்லம் நல்லவையாக நடந்து நிறைவாக அமைய தொடக்கமாக சுழி போடுகின்றோம். அதுவே பிள்ளையார் சுழி. எனவே பிள்ளையாரை வழிபட்டே எந்தச் செயலையும் தொடங்க வேண்டும்.

வாழ்க்கையில் உயிரானது ஒருபுறம் இறைவனது தொடர்பை நாடி திருவடிகளை சரணடைந்து பேரின்ப பெருவாழ்வை அடைய முயற்சிக்கும். மறு புறத்தில் உயிரினை ஈர்த்து மலங்கள் உலக வாழ்வியலில் ஈடுபடுத்துவதால் துன்பங்கள் ஏற்பட்டு குற்றங்கள் தொடர்ந்து வினைக்கு உரியதாகின்றது உயிர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அறிவை மயக்கி புத்தியைக் கலக்கி புலன் வழி செயல்பட வைக்கின்றது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட மாயையையிலிருந்து விலக அறிவு தெளிவாக இருக்க இறை சிந்தனை வேண்டும். எனவே துன்பங்கள் வருமுன் காக்க, செய்யும் செயல் அறிவுத் தெளிவுடன், சிந்தனைக் கூர்மையுடன் மலங்களாலும் அதன்வழிப் புலன்களாலும் மயக்கப்படாமல் இருக்க பிள்ளையாரை வணங்கி வழிபடுதல் சிறப்பு.

அருகு ஓரிடத்தில் முளைத்து ஆறு இடங்களில் வேரோடிக் கிளைக்கும் தன்மையுடையது. ‘அருகு போல் தழைத்து ஆல் போல் வளர்ந்து’ என்பது பழமொழி. இந்த அருகு மூலம் விநாயகரை அர்ச்சித்தால் மூலாதாரத்தின் அதிபதியாக இருக்கும் விநாயகர் மற்ற ஆறு ஆதாரங்களிலும் அருகுபோல் நம்மைப் பொருந்தச் செய்து அருள் புரிவார்.

விநாயகரின் சக்திகள்- சித்தி, புத்தி, வல்லபை. பிள்ளையாரின் பத்தினிகளாகக் கருதப்படும் இவர்கள் உண்மையில் பெண்களல்ல. பிள்ளையாரின் ஆற்றலே சக்தி, புத்தி, வல்லபை என உருவகப் படுதப்பட்டுள்ளது.

பிள்ளையாரின் பிள்ளைகளாகக் கருதப்படுபவர்கள், சுபன், லாபன் மற்றும் சந்தோஷி. விநாய்கரை வணங்கி அறிவும் ஆற்றலும் ஒருவன் பெற்றால் அதனால் சுபமும் லாபமும் ஏற்பட்டு சதோஷமடைவது இயல்புதானே!

பெருவயிறும் யானை முகமும் கொண்ட விநாயகருக்கு சிறிய மூஞ்சுறு எப்படி வாகனமாக இருக்க முடியும். எளிமையாக இருந்தால் எத்தகைய பெரும் பிரச்சனைகளையும் சமாளிக்கலாம் என்பதே இதன் தத்துவம்.

சௌபரி என்ற முனிவரின் மனைவி மனோமயை கிரௌஞ்சன் என்ற அசுரன் பலாத்காரம் செய்ய முயல அதைக் கண்ட முனிவர் சபிக்க முஞ்சுறு ஆனான். தொடர்ந்து அடாத செயல்கள் செய்த அந்த அசுரனை-முஞ்சுறுவை அடக்கி தன் வாகனமாக்கினார் விநாயகர். மூஞ்சுறு காமத்தின் குறியீடு. விநாயகர் ஞானத்தின் வடிவம். அதாவது ஞானத்தால் காமத்தை அடக்கமுடியும் என்ற தத்துவத்தை உணர்த்துகின்றது. விநாயகர் சிறிய மூஞ்சுறுவின்மேல் அமர்ந்திருப்பதின் உட்கருத்து இதுவேயாகும்.

விநாயகர் திருமணம்! பிரமச்சர்யம் என்னவாயிற்று! பிரிந்த சக்தி!
பிரம்மாவின் படைப்புத் தொழில் நலிவுபெற நாரதர் ஆலோசனைப்படி அவர் விநாயகரைத் தொழ அவர் தன் இரு சக்திகளை பிரமனுக்கு வழங்கி படைப்புத் தொழில் சிறக்கவும் செய்தார்.

மேலும், அந்த சக்திகள் அவருக்கு மகளாக சித்தி, புத்தி என இரட்டையராகவும் பிறந்து வளர்ந்தது. மணப்பருவத்தில் மாப்பிள்ளை தேடினார் பிரம்மா. நாரதர் ஆலோசனையைக் கேட்க அவர் தன் பங்கினை செயல் படுத்த நினைத்து இரட்டைப் பிறவிகளான இவர்களுக்கு ஒரே மாப்பிள்ளை சிறந்தது என அறிவுறுத்த பிரம்மா ஏற்றார். நாரதர் கயிலை சென்று விநாயகரை சந்தித்து சித்தி, புத்தியை மணக்க சம்மதம் கேட்க விநாயகர் தன் பிரமச்சார்யம் நீக்க ஒத்துக் கொண்டார். பிரம்மச்சாரி கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டது எப்படி! என்று நாரதர் மனங்குழம்பினார். சித்தி புத்தி இருவரிடமும் சென்று நீங்கள் இருவரும் ஒருவரைத்தான் மணக்க வேண்டும் என்று விதி இருக்கின்றது எனக்கூறியதும் இருவரும் சம்மதிக்க திருமணம் நடைபெற்றது.

பிரமனுக்கு சித்தி புத்தி சம்மதத்தில் சந்தேகமும், நாரதருக்கு விநாயகர் பிரமச்சாரியம் நீக்க ஒத்துக் கொண்டதில் குழப்பமும் நீடித்தது. இது பற்றி விநாயகரிடம் கேட்க என்னிடமிருந்த இரு சக்திகளே பிரமனின் படைப்புத் தொழிலுக்கு உதவியது. அதுவே மீண்டும் அவருக்கு மகளாய் பிறந்தது. என்னிடம் இருந்த இரு சக்திகள் மீண்டும் என்னையே வந்தடைந்து விட்டது. இதில் என்ன கல்யாணம்! என்ன பிரமச்சார்யம் நீக்கம்! என்றார் –வெய்யுலுகந்த விநாயகர்.உப்பூர் 

எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதி- சாமுத்திர்கா லட்சணம் யார் உருவாக்கியது! கார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.

சமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.

கார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.

கார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார்.

ஒருதந்தம்! ஜமத்கனி முனிவரின் மகனான பரசுராமர் தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீரிய மன்னரின் வாரிசுகள் அனைவரையும் கொன்றபின் தன் குருநாதரான சிவபிரானைப் பார்க்க வர அவரை விநயாகர் தடுக்க இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. என்ன வாயிருந்தாலும் உடனடியாக சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த பரசுராமர் விநாயகர் வழியை தன் தந்தத்தால் தடுக்க அதைத் தன் கோடாரியால் வெட்டினார். அதனால் விநாயகருக்கு ஒரு தந்தம் முறிந்த நிலை.

பிள்ளையாருக்கு ஏன் சிதறு தேங்காய்!
கஸ்யப முனிவர் தவத்தினை காலநேமி என்ற அசுரன் அழித்து தொந்தரவு செய்து வந்தான். அவர் விநாயகரை வேண்ட யாகத்தின்போது விநாயகரும் அவர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். அங்கு வந்த காலநேமி யாகத்தை தடுத்து நிறுத்த ஆரம்பிக்க கலசத்தின்மேல் இருந்த தேங்காயை எடுத்த விநாயகர் அவன் மேல் வீச அது அசுரனின் தலையை சிதறடித்தது. தேங்காய் சிதறியதுபோல் அசுரனின் தலையும் சிதறி முனிவர்களை பாதுகாத்தது. எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தால் அவர்களது துன்பங்கள் சிதறி விடும் என்று ஐதீகம்

கணேசரின் பூஜைக்கு துளசி சேர்ப்பதில்லை ஏன்! கங்கைக் கரையில் கணேசரைக் கண்டாள் துளசி. கணேசரின் அதிசயத் தோற்றம் அவளைக் கவர தர்மத்வஜனின் மகளான தான் அவரை மணக்க ஆசைப் படுவதாகக் கூறினாள். கணேசர் தனக்கு மணம் புரிய விருப்பமில்லை. விவாக பந்தத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. திருமணம் துயரத்தைத் தரும் எனக் கூறி மறுத்துவிட்டார். இதைக் கேட்ட துளசி திருமணம் இன்றியே இருக்கக் கடவீர் எனச் சாபமிட்டாள். கணேசரும் நீ ஓர் அரக்கன் கையில் சிக்கி பின் புதராக மண்டிக் கிடப்பாய் என்றார். வருத்தப்பட்ட துளசி மன்னிக்க வேண்ட, பூக்களுக்கொல்லாம் தலை சிறந்ததாக வைக்கப்படுவாய். கிருஷ்ணரின் பூஜையில் சேர்க்கப்படுவாய். ஆனால் என பூஜையில் சேர்க்கப்படமாட்டாய் என அருள் புரிந்தார் விநாயகர்.

உகந்த மலர்கள்: செம்பருத்தி, ரோஜா, தும்பை, மந்தாரை, அருகம்புல்.

வளர்பிறை சதுர்த்தி. ஆவணி வளர்பிறை சதுர்த்தி சாலச் சிறந்தது. இது பிள்ளையார் சதுர்த்தி ஆகும். அன்று விரதம் இருந்து துதிகளைப் படித்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அன்று இரவு சந்திரனை தரிசித்தால் வழிபாட்டின் பூரண பலன் கிட்டும், நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம்.

ஒவ்வொரு நாளும் அந்தந்த திதிகளின்படி வெவ்வேறு விநாயகர் வடிவினை வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.

ஒவ்வொரு உயிரின் உடலும் தான் பிறந்த திதியில் அந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபடின் சிறந்த பலன்களை அடைவர்.

தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடிய வில்லை என்றால் அந்தந்த திதிகளுக்குரிய உணவை உண்டு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குரிய தேவதைகள் திருப்தி அடைவர். எந்த விரதமாக இருந்தாலும் விரதம் முடிந்தபின் தான தர்மங்கள் முடிந்த அளவிற்குச் செய்தல் சிறப்பான பலன்களைத் தரும்.

கணபதியின் உருவங்கள் வேண்டிய வடிவில் இல்லையென்றால் அந்த பெயரை ஒன்பதுமுறை இருக்கும் கணபதிமுன் சொல்லி வேண்டவும். எந்த நாளும் எந்த நிலையிலும் வணங்கலாம்.

ராஜகணபதி சபை
பிங்கள கணபதி, வல்லப கணபதி,

ஸப்த ஆவரணத்தில் (ஏழு பிரிவு) 56 கணபதி மூர்த்தங்கள். மூர்த்தங்களின் பெயர்களைச் சொல்லி பூஜை- நன்மைகள் ஏற்படும்.

முதல் ஆவரணம்(6மூர்த்தங்கள்):- துண்டி கணபதி, துர்க்கை கணபதி, அர்க்க கணபதி, பிரஸன்ன கணபதி, பீம கணபதி, சுந்தர கணபதி,

இரண்டாம் ஆவரணம்(14 மூர்த்தங்கள்):- சித்ரூப கணபதி, லம்போதர கணபதி, கூப தந்த கணபதி, சலாடக கணபதி, குலப்பிரிய கணபதி, சதுர்த்தி கணபதி, பஞ்சமி கணபதி,, முண்ட கணபதி, சசிமுக கணபதி, விடங்க கணபதி, நிஜ கணபதி, ராஜபுத்ர கணபதி, பிரணவ கணபதி, உபதாப கணபதி,

மூன்றாம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- வக்ர துண்ட கணபதி, ஏக தந்த கணபதி, த்விமுக கணபதி, பஞ்சமுக கணபதி, ஏரம்ப கணபதி, விக்னராஜ கணபதி, வரத கணபதி, மோதகப்ரிய கணபதி,

நான்காம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- ஏகோபயப்ரத கணபதி, சிங்கமுக கணபதி, கூர்ணிதாஷ கணபதி, க்ஷிப்ரப்பிரஸாத கணபதி, சிந்தாமணி கணபதி, தந்த வக்த்ர கணபதி, அயிசண்டி கணபதி, ஊர்த்திவாண்டமுண்ட கணபதி,

ஐந்தாம் ஆவரணம்(6 மூர்த்தங்கள்):- மணிகர்ண கணபதி, ஆசார சிருஷ்டி கணபதி, கஜகர்ண கணபதி, கண்டா கணபதி, சுமங்கல கணபதி, மந்த்ர கணபதி,

ஆறாம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- மோதக கணபதி, ஸுமுக கணபதி, துர்முக கணபதி, கண கணபதி, அமர கணபதி, ஆக்கினை கணபதி, துவார கணபதி, அவிமுக்த கணபதி,

ஏழாம் ஆவரணம்(6 மூர்த்தங்கள்):- ஆமோத கணபதி, பாகீரத கணபதி, ஹரிச்சந்ர கணபதி, கபர்த்தி கணபதி, பந்து கணபதி, கனக கணபதி,


பௌர்ணமி திதி-நித்யகணபதி / அமாவாசை திதி -நிருத்தகணபதி

பிரதிபத (எ) பிரதமை திதி -பாலகணபதி
த்விதீய / துவிதையை திதி!-தருணகணபதி
த்ரிதியை / திருதியை திதி! -பக்திகணபதி
சதுர்த்தி திதி -வீரகணபதி
பஞ்சமி திதி -சக்திகணபதி
சஷ்டி திதி -துவிஜகணபதி
சப்தமி திதி -சித்திகணபதி
அஷ்டமி திதி -உச்சிஷ்ட கணபதி
நவமி திதி -விக்ன கணபதி
தசமி திதி -க்ஷிப்ர கணபதி
ஏகாதசி திதி -ஹேரம்ப கணபதி
துவாதசி திதி -லக்ஷ்மி கணபதி,
த்ரையோதசி திதி -மகா கணபதி
சதுர்த்தசி திதி -விஜய கணபதி

$$$$$

வெள்ளிக்கிழமை, 09 March 2018 10:22

சபைகள்!

Written by

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
&&&&&

ஓம் சிவபர தத்துவத்தை சொல்லாமல் சொல்லும் அற்புத ஆலயம்
மூலிகை வனநாதர் ஆலயம்
&&&&&

யுகங்கள்-யுகதர்மங்கள்

கிருதயுகம்- மக்கள் ஈசன் திருவடியை எப்பொழுதும் போற்றித் துதி செய்த வண்ணம் இருப்பர். தருமதேவதைக்கு நான்கு கால்கள். அனைவரின் வாழ்நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். பேதங்களின்ரி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திரேதாயுகம்- சிரந்த யாகங்கள் புரிவர். தரும் தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார். மழை நன்கு பொழிந்து மரம் செடி கொடிகள் நன்கு வளரும். காய் கனிகள் குறைவின்றி கிடைக்கும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் என்ரு ஆசைப்பட்டு மக்கள் கோபமுடன் சண்டையிடுவர். இளம் பெண்கள் இன்பமுடன் வாழ்வர்.
துவாபரயுகம்- மக்கள் கோபம், போட்டி, சண்டை, சச்சரவு என்றிருப்பர். தரும தேவதை இருகால்களை இழந்து இரண்டு கால்களில் நிற்கும். மக்கள் பாப புண்ணியங்கள் தெரியாமலும் தரும நெறியை அறிவதிலும் குழம்பித் தவிப்பர். வியாசர் தோன்றி வேதங்களை நான்காக பகுப்பார். புராணங்களை இயற்றுவார்.
கலியுகம்- மெய்ஞானம் விளங்கி மக்கள் தானம் புரிவர். தரும தேவதை ஒரு காலுடன் நிற்கும். அதர்மம் தலை தூக்கி இருக்கும். பொய், சூது, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியன தழைத்தோங்கும். வணிகர்கள், அந்தணர்கள், ஆளுநர்கள் பலவகை இன்னல்களுக்கு ஆளாகுவர். ஒழுக்கம் தவறி நடப்பர். வேதம் வேள்வியின்றி போகவாழ்வு வாழ முயற்சிப்பர்.

கோவில்கள் இயற்கை எழிலும், ரம்யமான சூழலும் கொண்டிருக்க வேண்டும். ஏரிகள், குளங்கள், கிணறுகள், பூக்கள், மரங்கள், அன்னப்பட்சிகளின் இனிமையான சத்தங்கள், இசையொலிகள் போன்ற அருமையான சூழலில் கோயில் கொண்டிருக்கத்தான் தெய்வங்கள் விரும்பும். குளங்கள் வெட்டுவது மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் சேர்த்த புண்ணியம். கோவில் கட்டும் பணியானது யாகங்கள் நடத்துவது போன்ற புண்ணியங்களைத் தரும். எனவே அப்படிபட்ட ஓர் அற்புதமான கோவிலை இறையருள் முழுமையாக நிறைந்த வண்ணமாக மூலிகை வனநாதர் ஆலயம் அமைக்க விரும்பும் எண்ணத்தை அடியேனுக்கு இறைவன் அருளியுள்ளான்.

யுகதர்மங்கள் எப்படி யிருந்தாலும் மக்கள் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்டு தங்களின் பிறவியை நன்னிலைப் படுத்த ஆன்மீக வழியில் பயனிக்க ஆன்மீக முறைகளை தெரிந்துகொள்ள உதவியாய் அமையட்டும் இந்த மூலிகை வனநாதர் ஆலயம்- ஒவ்வொரு தெய்வத்திற்கும் சபை ஏற்படுத்தி அதில் அவர்கள் மக்கள் நல் வாழ்விற்காக எடுத்த உருவங்கள், அதன் சிறப்புக்கள், பயன்கள் ஆகியவற்றை முடிந்தவரையில் அடியேன் தேடித் தெளிந்து தெரிவித்துள்ளேன். இந்த எண்ணங்களுக்குச் சொந்தக்காரார் அடியேனில்லை. என்னுள்ளே இருக்கும் பரம்பொருளே. அவன் அருளால் அனைத்து உயிர்களும் இந்த ஆன்மீக தெளிவுகளைத் தெரிந்து ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே அடியேன் விருப்பம் பண்டைய மன்னர்கள் மக்களின் நாகரீகம் வாழ்முறைகளுக்கு உதவிகரமாய் இருக்கவே ஆலயங்களை கட்டுவித்தனர். அந்த முறையில் வருங்கால சந்த்தியினர் புரிந்து கொள்ளும் விதமாக நம் கலாச்சார பண்பாடுகள் உணர்த்தப்பட வேண்டும். அதற்கான முதல் தொடர் முயற்சி இது. அன்புடன் -குருஸ்ரீ பகோரா.

சபைகள்!

1. விநாயகர் சபை
2.  நவகிரகங்கள்! சூரிய சபா! 
3.  லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை! 
4.  நாரயணர் சபா!
5.  ராஜலட்சுமி சபை!
6.  பத்ரகாளி சபை!
7.   பூமாதேவி!
8.  பைரவ சபை!
9.  ஞான பண்டிதன் சபை!
10. குபேரன் சபை- 12 ராசிக்குரியவர்!
11. பிரம்மன்-சரஸ்வதி!
12. பெரியதிருவடி! 
13. சின்னதிருவடி! 
14. விஷ்வக்‌ஷேனர்!
15. நாரதர்!
16. தத்தாத்ரேயர்!
17. ஐயப்பன்!

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26948572
All
26948572
Your IP: 54.158.138.161
2024-03-29 16:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg