சக்திபீடம்-3-இ/இம்
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#
எண் சக்திபீடம்-3
அட்சரம் இ/இம்(மூன்றாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் காட்மாண்டு-நேபாளம்/நேபாலா/நைபாலா
அட்சரதேவிகள் இந்திராணி/இளாதேவி
அங்கம் பிருஷ்டம்
பைரவர்/இறைவன் கபாலி
அங்கதேவி/இறைவி குஹ்யேஸ்வரி
பீடங்கள் நேபாலாயை நம
51-ல் நம் உடலில் வலது கண்ணில்
ஊர் காட்மாண்டு
அருகில் பாகமநதிக்கரை
மாகாணம்/நாடு நேபாளம்
இது நேபாலா/நைபாலா எனும் மகாசக்தி பீடம். இடுப்பிற்கு கீழே மறைக்கப்பட வேண்டிய அங்கங்கள்- குல்ஹா-அந்த புனித அங்கம் குல்ஹா ஈஸ்வரி என்று அழைக்கப்பட்டு பின்னர் குஹ்யேஸ்வரி ஆனார்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
வெண்ணிற மேனி- மதஜலம் பெருகும் வெள்ளையானை வாகனம்- வலதுமேல் கரத்தில் சந்த்ரஹாசம், கீழ்க் கரத்தில் வரமுத்திரை- இடது மேல் கரத்தில் கதை, கீழ்க் கரத்தில் அபய முத்திரை யுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
மாதவ ஸூக்ஷ்ம ஸம்ஞச்ச வித்யா தக்ஷிண லோசநம்
கந்தர்வ பாஞ்ச ஜந்யச்ச இடகாரச்ச மகாங்குர:
#####