சக்திபீடம்-11-ஏ/ஏம்
ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.
#*#*#*#*#
எண் சக்திபீடம்-11
அட்சரம் ஏ/ஏம்(பதினோராவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் தீஸ்தா நதிக்கரை-த்ரிஸ்ரோதஸ்
அட்சரதேவிகள் ஏகபாதாதேவி/ ரேவதிதேவி
அங்கம் நெற்றிமடிப்பு
பைரவர்/இறைவன் அம்பர்
அங்கதேவி/இறைவி ப்ராமரீ
பீடங்கள் திரிஸ்ரோதஸ் நம
51-ல் நம் உடலில் மேல் உதடு
ஊர் த்ரிஸ்ரோதா
அருகில் ஜல்பைகுரி-20. கி.மீ.-வைகுந்த்பூர் வனக்கேட்டம்
மாகாணம்/நாடு மே.வங்காளம்
இது திரிஸ்ரோதஸ் எனும் மகாசக்தி பீடம். மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் ஜல்பைகுரி நகரிலிருந்து 20 கி.மீ தொலைவில் தீஸ்தா நதிக்கரையில் திரிஸ்ரோதா. அரசு, ஆல், வன்னி ஆகிய மூன்று மரங்களும் ஒன்றோடு பின்னிப் பிணைந்து இருக்கும் விருட்சம். மூன்று கால பூஜைகள். சிம்ம வாகனம். பூசாரியை புட்டாதேவ் பாஸ்ராப் என்பர். கர்பகிரகத்தில் தேவி நீலத்திருமேனி- எட்டு கரங்களுடன்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிவந்த நிறமேனி- முக்கண்களோடு இருபது கரங்கள் கொண்டவள். வலது கரங்களில்- சக்ரம், சூலம், பாசம், கட்கம், கமண்டலம், ருத்ராட்சமாலி, சின்முத்திரை, புகண்டி, முத்கரம், வரமுத்திரையும், இடது கரங்களில்- சங்கு, பிண்டி, சந்திரன், மான், கேடயம், கபாலம், தகனத் தீச்சட்டி, குறுந்தடி, கதை, அபயமுத்திரையுடன் காட்சி. சிம்ம வாகனம்.
தியானஸ்லோகம்:
ஏகாராக்யா ரேவதீ ஸ்யாத் தசாஸ்யா ருண்டமாலி நீ
ரக்தா விம்சத் புஜா ஸிம்ஹவா ஹநா பால லோச நா
கரைர் தத்தே சக்ர சூல பாச கட்க கமண்டலாந்
அக்ஷ ஸூத்ரம் ச சித் முத்ராம் புகண்டீம் முத்தரம் வரம்
வாமே தத்தே கரைச் சங்கம் பிண்டீந் தும்ருக கேடகாந்
கபாலம் தஹநம் சோஷம் தண்டம் சைவ கதா பயௌ:
#####