சக்திபீடம்-18-க2/கம்
ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-18
அட்சரம் க2/கம்(இரண்டாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் நர்மதாநதிக்கரை-அதிஷ்டானம்-ஓம்காரம்
அட்சரதேவிகள் கண்டிதாதேவி/ கத்யோதிநீதெவி
அங்கம் முதுகு
பைரவர்/இறைவன் நிமிஷர்
அங்கதேவி/இறைவி ஜ்யோதிஷ்மதி
பீடங்கள் ஒங்காராயை நம
51-ல் நம் உடலில் வலது முழங்கை
ஊர் ஓம்காரோச்வர்
அருகில் கண்ட்வா, இந்தூர்
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்
இது ஓம்கரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். சிவாலயத்தைஒட்டி மலைச் சரிவில் உள்ள குகையே மாகாளி கோவில்.
உபபீடம்:
இந்த தலத்தின் வடபகுதியில் தேவியின் ஆடை விழுந்த பகுதி- பீடசக்தியாக ஜ்யோதிஷ்மதி தேவி. இந்த ஜுவாலையில் அக்னிதேவன் தவம் புரிந்துள்ளார். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி திரவியங்கள் கொண்டுபுரசரண ஹோமம் செய்தால் யாராகினும் மந்திர ஸித்தி அடைவர்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
மஞ்சள் நிறமேனி-மூன்று சிரங்கள்-நான்கு கரங்கள், வலதுகரங்களில்- திரிசூலம், அபயமுத்திரை, இடது கரங்களீல்- கட்கம், வரத முத்திரையுடன் கஞ்ஜரீடம் எனும் வாலட்டிக் குருவி வாகனம்.
தியானஸ்லோகம்:
கஞ்ஜ ரீடஸ்திதா பீதா த்ரிசிரா ச த்ரிசூலி நீ
காக்யா கத்யோதி நீ கட்க வரா பயாகரா மதா:
#####
சக்திபீடம்-18அ-க2
எண் சக்திபீடம்-18அ
அட்சரம் க2
அட்சரதேவிகள் கண்டிதாதேவி
அங்கம் முதுகு
பைரவர்/இறைவன் நிமிஷர்
அங்கதேவி/இறைவி பத்ரகாளி/ பகவதி
பீடங்கள்
51-ல் நம் உடலில்
ஊர் கன்யாகுமரி
அருகில் நாகர்கோவில்-4.கி.மீ
மாகாணம்/நாடு தமிழ்நாடு
பகவதி கன்யாகுமரியில் தவமேற்கும் பல யுகங்களுக்கு முன்பே அங்கம் வீழ்ந்துள்ளது. அந்த இடமே தற்போது பத்ரகாளி கோவில். சாந்தஸ்வரூபியாக காட்சி. பகவதி கன்யாகுமரிக்கு நடக்கும் எந்த திருவிழாவாக இருந்தாலும் முதன் முதலில் பத்ரகாளிக்கு பலி, பூஜை நடந்த பின்புதான் விழா துவங்கும். கம்பர் குலத்தோர் அர்ச்சகராக இருக்கின்றனர். ஆடி மாதம் நான்கு செவ்வாய், மற்றும் மார்கழி இரண்டாவது செவ்வாயில் பெரும் படையல் விழா.ஊரின் காவல் தெய்வம்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
#####