சக்திபீடம்-20-க4/கம்
ஓம்நமசிவய!
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-20
அட்சரம் க4/கம்(நான்காவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் விநோத நாட்டின் மிதிலாபுரி/மாளவம்
அட்சரதேவிகள் கண்டாகர்ஷிணி/ வராஹமுகி
அங்கம் இடதுதோள்
பைரவர்/இறைவன் மஹோதர்
அங்கதேவி/இறைவி உமா
பீடங்கள் மால்வாய் நம
51-ல் நம் உடலில் வலது கை விரலடியில்
ஊர் ஜனக்புரி,மிதிலாபுரி
அருகில் சீதாமாடி/தர்பங்கா விலிருந்து ஜனக்பூர் ர.பயணம்+38 கி.மி
மாகாணம்/நாடு நேபாளம்
இது மாளவ பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு கந்தர்வர்கள் தேவியை உபாசித்து ஞான, ராக, சங்கீத வித்தைகளை கைவரப் பெற்றார்கள்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
கருநீல வர்ண மேனி-வராக முகம்- மெலிந்த வயிறு- ஆறு கரங்கள்-வலக் கரங்களில்-சூலம், கட்வாங்கம் வரமுத்திரை, இடது கரங்களில்- கட்கம், கேடயம், அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
க்ருஷ்ண வர்ணா கருபாச ஸூ காராஸ்யா க்ரு சோதரீ
ஷட் புஜா சூல கட் வாங்க வராந் தக்ஷ புஜை க்ரமாத்
வாமே கட்கம் ததா கேடம் அபயம் சத்ரு பஞ்ஜி நீ:
#####