சக்திபீடம்-23-ச2/சம்
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-23
அட்சரம் ச2/சம்(ஏழாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் கர்நாடகா உத்ரபகுதியின் கார்வார் மாவட்டம்-கோகர்ணம்
அட்சரதேவிகள் சயார்தாதேவி/ நிர்ஜலருந்தி/ நிர்ஜராதேவி
அங்கம் வயிறு
பைரவர்/இறைவன் அபீரு/மகாபலநாதர்
அங்கதேவி/இறைவி ஜலதுர்க்கா,பத்ரகர்ணி
பீடங்கள் கோகர்ணாயை நம
51-ல் நம் உடலில் இடது முழங்கை
ஊர் கோகர்ணம்
அருகில் கார்வார் மாவட்டம்
மாகாணம்/நாடு கர்நாடகம்
இது கோகர்ண பீடம் எனும் மகாசக்தி பீடம். நிர்ஜரா என்ற இந்த தேவி அருந்ததி என்றும் அழைக்கப்படுகின்றாள். மகாபலேஸ்வரர் கோவிலின் தெற்கு வாயில் அருகில் சக்திபீடநாயகி பத்ரகாளி தரிசனம். கோவில் கருவறைமேல் ஸ்ரீசக்ர மேரு ரூபத்தில் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. வைகாசி மாதம்- பண்டிஹப்பேவில் விழா. வைதீக முறைப்படி வழிபாடு இல்லாததால் ஆடு கோழிகள் பலியிடப்படுகின்றன.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
மஞ்சள் நிற மேனி-நான்கு கரங்கள், வலது கரங்களில் த்ரிசூலம், கொடுவாள், இடது கரங்களில்- பாசம் கேடயத்துடன் மர்கடம் எனும் குரங்கு வாகனத்துடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ச நிர்ஜ ராருந்த தீயம் பீதா மர்கட வாஹனா
த்ரிசூலம் ச்ருரி காம் பாசம் கேடம் ச த்த்தீ சுபா:
#####