சக்திபீடம்-24-ஜ1/சம்
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-24
அட்சரம் ஜ1/சம்(எட்டாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் பிரபாஸ்பட்டணம்/சோமநாத்/சோம்பூர்/ஹர்நகர்/சிவநகர்
அட்சரதேவிகள் ஜயாதேவி/ போகதாதேவி
அங்கம் வயிறு,முதல்மடிப்பு
பைரவர்/இறைவன் வக்ரதுண்டர்/ சோமநாதர்-1/12
அங்கதேவி/இறைவி சந்திரபாகா/ சந்திரபாஹா
பீடங்கள் மருதேச்வராயை நம
51-ல் நம் உடலில் வலது மணிக்கட்டு
ஊர் சோமநாதம்/வில்வில்பூர் பட்டணம்/சூர்பட்டணம்
அருகில் பிரபாஸ்-அகமதாபத்-5
மாகாணம்/நாடு குஜராத்
இது மதுரேச்வர பீடம் எனப்படும். சிவ மந்திரங்கள் போற்றப்படும் தலம். காலபைரவரை பத்ர சேனன் என்றும் அழைப்பர்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ரக்த வர்ண நிற மேனி- மூன்று கண்கள், நான்கு கரங்கள்- வலதுகரங்களில்- கட்கம், அபயமுத்திரை, இடது கரங்களில்- கேடயம் வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி
தியானஸ்லோகம்:
ஜோ போகதா ஹி ரக்தா ஸ்யாத் திரிணேத்ரா ஸிம்ஹ வாஹநா
சதுர் புஜா கட்க கேட வரா பய கராந் வித:
#####