சக்திபீடம்-25-ஜ2/சம்
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#*#*#*#*#எண் சக்திபீடம்-25
அட்சரம் ஜ2/சம்(ஒன்பதாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் லாப்பூர் அருகில் புல்லாரா
அட்சரதேவிகள் ஜங்கரிணிதேவி/ நிர்ஜரனதீதேவி
அங்கம் வயிறு,2வதுமடிப்பு
பைரவர்/இறைவன் விச்வேசர்
அங்கதேவி/இறைவி புல்லாரா/ ஆமைஉருவம்
பீடங்கள் அட்டஹாஸாயை நம
51-ல் நம் உடலில் இடது கைவிரல்கள்
ஊர் லாப்பூர்
அருகில் புல்லாராஅட்டஹாஸ்-போல்பூர்-50
மாகாணம்/நாடு மே.வங்காளம்
இது அட்டகாசம் என்ற சக்தி பீடமாகும். இங்கு உச்சரிக்கப்படும் கணேசர் மந்திரங்கள் சித்தி அளிக்கும். 1895-ம் ஆண்டு கட்டப் பட்டது. தேவி உருவத்திற்குப் பதிலாக கருங்கல்லால் ஆன ஆமை உருவத்தை புல்லார தேவியாக பாவித்து வழிபாடு. தற்போது அம்மனை குஹயேஸ்வரி என அழைக்கின்றார்கள்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
மழைக்கால மேக வர்ண நிறமேனி- நான்கு கரங்களில் தாமரை, பாசம், வர –அபய முத்திரைகளுடன் முதலை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஜோ நிர்ஜர நதீ தேவீ சரந்மேக நிபாம் புஜா
பாசம் வராபயௌ தத்தே நக் ரஸ்தா சுபதா ந்ருணாம்:
#####