சக்திபீடம்-28-ட2/டம்
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-28
அட்சரம் ட2/டம்(பன்னிரண்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஒரிஸ்ஸா மநிலத்தின் ஜாஜ்பூர்
அட்சரதேவிகள் டங்காரிணிதேவி/ க்ரியாசரஸ்வதிதேவி
அங்கம் நிதம்பம்-இடுப்பு
பைரவர்/இறைவன் அஸிதாங்கர்
அங்கதேவி/ இறைவி காளி-விராஜா
பீடங்கள் மகாபதாயை நம
51-ல் நம் உடலில் வலது முழங்ககால்
ஊர் ஜாஜ்பூர்
அருகில் க்யூன்ஞர் ர.நி. -27.கி.மீ
மாகாணம்/நாடு ஒரிஸ்ஸா
இது மகாபதம் / மகாயதம் பீடம் எனப்படும் மகாசக்திபிடம். . சிவனை வழிபடுபவர்கள் மார்க்கத்தில் வழிபட்டு ஆரோக்கியம் பெறும் இடம். விராஜா என்றால் பாவமற்றவள், ராஜோ குணம் இல்லாதவாள் என்று பொருள். இவள் மகிஷாசுரமர்த்தினியாக தோற்றமளிக்கின்றாள். போகமண்டப் என்ற பிரார்த்தனை மண்டபம், கர்ப்பக்கிரகம் என்று இரண்டு பாகங்கள். கர்ப்பக் கிரகத்தின்மீது உயர்ந்த கோபுரம். இரு கரங்களுடன் காட்சியளிப்பதால் காளி என்றும் காத்யாயினி என்றும் அழைக்கப் படுகின்றாள்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிவந்த நிறமேனி- சதுர் புஜங்கள்- வலது கரங்களில் டங்கா (கோடாரி), அபய முத்திரை, இடது கரங்களில் அங்குசம், வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
க்ரியா ஸரஸ்வதி டாக்யா டங் காங்குச வராபயாந்
தத்தே ஸிம்ஹ வரா ரூடா சை கவக் த்ரா ருணா மதா
#####