சக்திபீடம்-34-த3/தம்
ஓம்நமசிவய!
புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !
#*#*#*#*#
எண் சக்திபீடம்-34
அட்சரம் த3/தம்(பதினெட்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் திரிபுரா மாநிலத்தின் உதயப்பூர்/ராதாகிஷோர் கிராமம்
அட்சரதேவிகள் தாஷாயணிதேவி/ போகதாயினிதேவி
அங்கம் வலது கணுக்கால் பாகம்
பைரவர்/இறைவன் த்ரிபுரேஷ்வர்
அங்கதேவி/ இறைவி திரிபுரசுந்தரி
பீடங்கள் சித்ராயை நம
51-ல் நம் உடலில் இடது கணுக்கால்
ஊர் ராதாகிஷோர் கிராமம்/உதயப்பூர்
அருகில் உதயப்பூர்-3.கி.மீ
மாகாணம்/நாடு திரிபுரா
இது யோகினீ எனும் மகாசக்தி பீடம். கௌல மார்க்க மந்திரங்கள் சித்திக்கும் தலம். அன்னையின் வேறு பெயர்கள்- திரிபுரவாசினி, திரிபுரஸித்தா, திரிபுராஸ்ரீ, திரிபுரேசி, திரிபுராம்பிகா, திரிபுரா, திரிபுரமாலினி எனப்படும். மந்திரம், ரூபம், யந்திரம் ஆகிய மூன்றும் தேவி வழிபாட்டில் முக்கிய அங்கம்- அதனால் திரிபுரா என்பர்.
கி.பி.1501-ல் தான்யா மாணிக்யாவால் கட்டப்பட்டு கி.பி.1681-ல் ராமா மாணிக்யாவால் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு பகவதிகள். சிறியதை சோட்டிமா என்றும் பெரியதை மகாசக்தி பீடேஸ்வரியாக வணங்குகின்றனர். கோவிலுக்கு கிழக்கில் கல்யாண சாகர் என்ற பெரிய ஏரி உள்ளது. தசமி, திதி தவர மற்ற நாட்கலில் தினமும் ஆட்டுக்கிடா பலி. அமாவாசையன்று ஒரு எருமை ஐந்து ஆடுகள் பலியிடப்படுகின்றன.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
அருணோதய நிறம்- எட்டு கரங்களில்- வலது கரங்களில்- தாமரை, வீணை, உடுக்கை, அபய முத்திரை இடது கரங்களில் தாமரை, மான், மழு வரத முத்திரையுடன் தாமரை மீது அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
ஏக வக்த்ரா ருணா தாக்யாஷ்ட புஜா போக தாயிநீ
தத்தே ப்ஜம் சாரி காம் வீணா டமர் வர்ண வராபயாந்:
#####