சக்திபீடம்-44-ல/லம்
ஓம்நமசிவய!
திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-44
அட்சரம் ல/லம்(இருபத்தெட்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஜ்வாலாமுகி
அட்சரதேவிகள் லம்போஷ்டிதேவி/ மோஹினிதேவி
அங்கம் நாக்கு
பைரவர்/இறைவன் உன்மத்தர்
அங்கதேவி/ இறைவி தூமாவதி,ஜ்வாலாமுகி
பீடங்கள் மேரவே நம
51-ல் நம் உடலில் பிடாரி
ஊர் ஜ்வாலாமுகி
அருகில் காங்ராஅருகில்,தர்மசாலா-
மாகாணம்/நாடு இமாசல்பிரதேசம்
இது கிரி பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு ஜபித்தால் வாக்கு சக்தி ஏற்படும். தீச்சுடரே தேவியாக பாவிக்கப் பட்டு வழிபடப் படுகின்றாள். காலம் காலமாக பறையிலிருந்து தானாகவே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீச்சுடர். யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட யாகப் புகையே சக்தியாக மாறி தூமாவதியானது.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பொன் நிறமேனி-ஆறு கரங்கள்- வலது கரங்களில் அபய முத்திரை, கத்தி, அங்குசம், இட்து கரங்களில்- சூலம், கேடயம், வர முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
வாத் மிகா மோஹிநீ தேவீ ஸ்வர்ணாபா கஜ ஸிம்ஹகா
ஷட் புஜாங்குச சூலாஸி கேட தாநா பயாந் விதா:
#####