ஓம்நமசிவய!
விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
#^#^#^#^#
4.அங்க லட்சணங்கள்!
வெண்மை நிறங்கொண்ட பற்களும், கூர்மையான கண்களும், கைகள், குறி, முதுகு மூன்றும் நீளமாக அமைந்திருந்து, வயிற்றின் மீது மூன்று மடிப்புகள் ஆகியன நல்ல லட்சணங்கள்.
உள்ளங்கால் தாமரை மலர் போன்று நிறத்துடன் சதைப்பிடிப்புடன் இருந்தால் அரசன் போல் வாழ்வான். முறம் போலிருந்தால் சுகமில்லாதவனாயிருப்பன். நீண்டிருந்தால் தேச சஞ்சாரம் செய்வான்.
கால் நகங்கள் பவளம் போன்று சிவப்புடனிருந்தால் ராஜ்யத்தை ஆள்பவர்களாக இருப்பர். செம்புபோல் இருந்தால் எதிலும் வெற்றி அடைவர். கருப்பு வண்ணமாக இருந்தால் மிகவும் கஷ்டப்படுவார்கள். நகங்கள் விசாலமாக இருந்தால் செல்வம் பெருகி கொழிக்கும். நகத்தின் முனைகள் கூர்மையாகவும் வளைந்தும் இருத்தல் கூடாது. முழங்கால்கள் பெரியதாக சதைப் பற்றுடன் இருந்தால் அரசு பதவிகள் கிடைக்கும்.
ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும் மிகுந்த அதிகாரங்கள் உடையவராகவும் இருப்பர்.
சற்றே நீலம் பாய்ந்த நாக்கினை உடையவர்கள் உத்தமமான திரண்ட ஐஸ்வர்யங்களைப் பெற்றிருப்பர்.
குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்கச் சிந்தனை உள்ளவர்கள்.
மூக்கு, முகம், அக்குள், விடும் மூச்சுக் காற்று ஆகியவை துர்கந்தமாக இருந்தால் லட்சணங்கள் குறைந்தனவாம்.
கண்விழிகள், கேசம், இரு புருவங்கள் கருப்பாய் இருக்க வேண்டும். கற்றையான கேச வளர்ச்சி, உயர்ந்த கன்னங்கள், சீரான எலும்புகள், உயர்ந்த மூக்கு,
உடலில் மயிர் வரிகள், மெல்லிய தோல், விரல் நகங்கள் உயர்ந்து மிருதுவாக இருத்தல், உடல் அங்கங்கள் பூரண வளர்ச்சியுடன் இருத்தல், நிற்கும்போது கைகள் சமமாக இருத்தல் ஆகியவை அங்க லட்சணங்களாகும்.
#^#^#^#^#