ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#^#^#^#^#
7.ஸ்திரி- புருஷ லட்சணங்கள் எவை!
நல்ல முறையில் நாடிநரம்புகள் அமைந்து விட்டால் நமக்கு நல்ல உடல் கிடைத்துவிடும். உடல் ஆரோக்கியமாக இருக்க ரத்த ஓட்டம் நாடி நரம்புகள், வாயுக்களின் ஆகியவற்றின் பணி செவ்வனே அமைய வேண்டும். அருமையான உடல் அமைப்புடன் உள்ள ஒழுக்கமும் நன்கு அமைந்து விட்டால் அதுவே ஸ்திரி- புருஷ லட்சணங்களுக்கு அடிப்படையாகும்.
தினசரி முறைப்படி நித்யர்மானுஷ்ட கர்மங்களைச் செய்து நல்லொழுக்கம் திடமான சித்தம் பெற்றவர் வாழ்வில் சுகமும் மகிழ்ச்சியும் பெறுவார்.
வெண்மை நிறப் பற்களுடன் கூர்மையான பர்வையுடைய கண்களும், கைகள், குறி, முதுகு மூன்றும் நீளமாக அமைந்திருத்தல் வயிற்றின் மீது மூன்று மடிப்புகள் காணப்படுவது ஆகியவையே லட்சணங்கள்.
இறைவனிடமும் முன்னோர்களிடமும் பணிவு முக்கியமாக வேண்டும்.
நேரம் அறிந்து மகிழ்ச்சி அடைதல், லாபம் ஈட்டல், அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் ஆகிய மூன்றும் மூன்றுவகை ஒழுக்கங்களாகும்.
மூக்கு, முகம், அக்குள், விடும் மூச்சுக்காற்று ஆகியவை துர்கந்தமாக இருக்கக்கூடாது.
#^#^#^#^#