ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
$^$^$^$^$
10.உத்தமர்கள் யார்! நற்குணங்கள்! ஒழுக்கம்!
கணவனின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் மனைவி,
தாய் தந்தையின் உள்ளத்தை மகிழ்விக்கும் மகன்,
தன்னுடைய சுகதுக்கம்போல் அடுத்தவன் சுகதுக்கத்தை நினைக்கும் நண்பன்.
நற்குணங்கள்.
பிராணிகளைக் கொல்லாமை,
உண்மையே பேசுவது,
எளியோரிடம் இரக்கப்படுதல்,
பிராணிகளிடம் அன்பு,
இறைவனிடம் பக்தியுடன் தளரா நம்பிக்கை
பெறியோர், மூத்தோரிடம் பணிவு,
பெற்றவர்களை ஆதரித்தல்,
அனைவரிடமும் நட்புடன் இருத்தல்,
மூதாதையர்களை வணங்குதல்,
அரசின்மேல் பக்தி,
கஷ்டங்களில் மனம் தளராமை,
கற்க வேண்டியதை தெளிவாக நுட்பமாக கற்றல்,
தூஷனை சொல்லாமலிருப்பது
வம்பு பேசாமலிருத்தல்
காம, குரோத, லோபங்களைத் தவிர்த்தல்.
ஆகியன ஒவ்வொரு ஆத்மாவும் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்களாகும்.
ஒழுக்கம்
நேரம் அறிந்து மகிழ்ச்சி அடைதல், நேர்மையாக லாபம் ஈட்டல், அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் ஆகியன 3வகை ஒழுக்கங்களாகும்
வீட்டிற்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று நீர்கொடுத்து உபசரித்தல் நன்மை. பெண்களாயிருந்தால் அவர்கள் திரும்பிச் செல்லும்போது பெண்கள் மஞ்சள், குங்குமம் கொடுப்பது சிறப்பு.
வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. அடைசல்கள் இன்றி வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பகலில் குப்பைகளை வீட்டில் குவித்து வைப்பது கூடாது. இரவில் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது.
வீட்டு வாசல் படியில் இருந்து கொண்டு யாருக்கும் எதுவும் தரக்கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்குதல் / கொடுத்தல் வேண்டும்.
இறைவன் கொடுத்ததே போதும் என்ற மனத்திருப்தியுடன் வழ்ந்தால் சுகமும், நிம்மதியும் தேடிவரும். நமக்கு என்ன வேண்டும் எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் அறிவான். இந்த உண்மைதனை உணர்ந்து அனைத்து ஆசைகளையும் தவிர்த்து தன் வருமானத்திற்குள் வாழ்க்கையை நடத்திச் செல்லும் மனிதன் அதிக சோதனைகளுக்கு ஆட்படாமல் பிறவி என்ற வாழ்க்கைப் பயணத்தை எளிதில் பயணித்துவிடுவான்.
$^$^$^$^$