ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#
11.பெண்களிடம் நிலைப்பாடு!
அம்மா, அக்கா, பெண் ஆகியோருடன் ஒரே ஆசனத்தில் அமரக்கூடாது.
பிறர் மனைவி பிறபெண்கள் ஆகியோரை தன்னைப் பெற்ற தாயாகவும் உடன் பிறந்த சகோதரியாகவும் நினைக்கும் தூய மனமுடையவனுக்கு மறு பிறவியில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வணங்கும் கற்புக்கரசி மனைவியாக வாய்த்து மனைவி தரக்கூடிய அனைத்து இன்பங்களையும் தடையில்லாமல் அளித்து மகிழ்ந்திருப்பாள்.
மாதா, பிதா, குரு இவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க எல்ல பலன்களும் கிட்டும். இவர்களின் அனுமதியுடன்தான் தவம், விரதம் முக்கிய காரியங்களை மேற்கொள்ள வேண்டும் இவர்களே 3 உலகங்கள், 3 ஆஸ்ரமங்கள், 3 அக்னிகள். (கர்ப்பத்தீ-அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, தட்சிணாக்கினி- பிதா-பின்னை இட்டத்தீ தென் இலங்கையிலே, ஹோமத்தீ-ஆச்சார்யர் கடவுள் அழைக்கும்போது சொல்லும் ஹோமத்தீ.) முழு மனதுடன் இம்மூவரையும் ஆராதிப்பவன் தனது செயல்களில் வெற்றி அடைவான்.
தாயிடம் கொண்ட பக்தியினால் பிறவி இன்பத்தையும், தந்தையிடம் வைக்கும் பக்தியினால் மறுமையில் சொர்க்கமும் குருவிற்கு சேவை செய்தால் பிரம்மலோக பேரானந்தத்தையும், பசுவை பூஜிப்பதால் ஐச்வர்யங்களையும், துன்பப்படும் பிறருக்கு உதவுவதால் நீண்ட ஆயுளும் ஒருவன் அடைகின்றான் –மனுதர்ம சாஸ்திரம்.
ஒரு பெண்ணை ஒரு முறைதான் திருமணம் செய்து கொடுக்க முடியும். மணமான பெண்ணைக் கவர்ந்து செல்பவன் கொள்ளையனாகக் கருதப்படுவான்.
பெண்களையும் குழந்தைகளையும் விற்பவனுக்கு விமோசனம் என்ற நற்கதி கிட்டாது.
தன் மனைவி மக்களை நிராதரவாக தவிக்க விட்டு சந்நியாசி ஆனவனுக்கு இறையருள் கிட்டாது. அப்படிப்பட்டவன் அடுத்து வரும் பல பிறவிகளில் மனித பிறவி அல்லாத மற்ற பிறவிகளை எடுத்து அந்த பாவத்தை போக்க வேண்டும்.
சுந்தரமான குணவதியான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும். முப்பேறுகளான தனம், தர்மம், காமம் இவற்றை நடத்த மனைவியும் தர்மமும் இருந்தால்தான் வாழ்க்கையின் அர்த்தம் முழுமையாகும். ஒருவனிடம் வித்தை வரலாம். மற்றவை வராது. பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் தானம் கிடைக்கும். இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய்ய முடியும்.
தர்மமும் புண்ணியமும் இரண்டற கலந்து வாழ்வில் நிற்கும். பறவை பறக்க இரு சிறகுகள் கட்டாயம் தேவை என்பது போல மனைவி இல்லாமல் ஒருவன் செய்யும் தர்ம காரியங்கள் பலனைத் தராது.
மனைவி கணவனின் பாதி. புருஷன் அவளைக் கண்மணிபோல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
குடும்பம் ஒரு தெய்வீக விருட்சத்திற்கு ஆதாரம். அதனால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பர். அந்த ஆதார சக்தி மனைவியே! விருட்சத்தின் ஆணிவேரும் அவளே. குடுபத்தில் உள்ள அனைவரும் வாழ்வில் குறையில்லாமல் இருக்க தன் வாழ்க்கை சுகங்களைத் தியாகம் செய்பவள் மனைவியே. விருட்சத்தில் விளையும் கனிகளான குழந்தைகளைத் தருவதும் மனைவியே. பராசக்தியின் அம்சமான அவள் தாய் எனப் போற்றப்படுவாள். எனவே குடும்பத்தில் பெண்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும்.
#*#*#*#*#