Print this page
புதன்கிழமை, 15 March 2023 08:45

திருமணம்-அறுபதாம் கல்யாணம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!


#*#*#*#*#

 

14.திருமணம்-அறுபதாம் கல்யாணம்!

 

20 வயது- ஒரு உயிர் தன்னை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20-40 வயது வாழ்வின் உச்சத்தை தொடத் துடிக்கும் துடிப்பான வாழ்க்கை

40-60 வயது பெறுப்பான குடும்ப வாழ்க்கை

60 வயதிற்குமேல் உயிர்கள் மனதிற்கு பிடித்தமான தெளிவான வாழ்க்கை

அறுபதிற்கு மேலான வாழ்வில் ஒவ்வொரு ஆரோக்கிய நாளும் உயிர்களுக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம் என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயல்களால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ளவும், 59, 60, 61, 70 வயது துவக்கம், 78துவக்கம், 80நிறைவு, 100 ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள புராணங்கள் வலியுறுத்துகின்றன. அதாவது இதுவரையில் வாழந்த கட்டாயங்களினால் வாழ்க்கையில் நடைபெற்ற தவறுகளுக்கு வருந்தி குடும்ப பாரத்தை இறக்கிவைத்து ஒரு நல்ல ஆத்மாவாக மாற உறுதி எடுத்துக்கொள்ளுதலே இதன் சிறப்பு.

கலியுகத்தில் உயிர்கள் 120வயது வரை வாழ இயற்கை வழிவகுத்துள்ளது. அதன் படி முதல் அறுபதில் லௌமீக-கர்ம வாழ்க்கை வாழ்ந்து கடமைகள் முடிந்து அடுத்த அறுபதிற்குள் அடிஎடுத்து வைத்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்க முயலவேண்டும்.

இதை உறுதி செய்யவே அறுபதாம் கல்யாணம் நடைபெறுகின்றது. அதனால் ஒரு உயிர் தான் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கின்றது. கர்மத்தின் காரணமாக தான் செய்த பாவங்களுக்கு வருந்தி பரிகாரம் செய்து மனதை சுத்தமாக்கிக் கொள்கின்றது.. இனிமேல் தர்ம வாழ்க்கை வாழ உறுதி பூண்டு தன் கூட இருந்த மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத சூழ்நிலையில் மனைவியின் தியாகங்களை நினைந்து இனிமேல் நல்ல வாழ்வை தருவதற்கு உறுதி கொள்கின்றனர்.

பிடிப்பு-பற்றுதல்!

ஒவ்வொரு திருமணத்தின் முடிவில் மணமகன் கையில் மணமகள் கையை வைத்து அல்லது சுண்டு விரலை கோர்த்துவிட்டு துண்டில் கட்டி திருமண மேடையைச் சுற்றி வரச் செய்வார்கள். இந்த நிகழ்வு ஏனென்றால் நீ சிறியவள். உன்னால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல், விவேகம் ஆகியன இல்லை. நீ என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் எந்தச் சந்தர்பத்திலும் அதிர்ச்சியில் கையை விட்டு விடுவாய். நீ தடுமாறும் போது உடனடியாக என்னால் உன்னை தாங்கி பிடிக்க முடியாது. ஆனால் நீ என் கையைப் பிடித்துக் கொண்டால் நீ தடுமாறினாலும் நான் உன்னைப் பிடித்திருப்பதால் உனக்கு எந்த துன்பமும் ஏற்படாது. எல்லா நிலையிலும் உன்னை நான் பாதுகாப்பேன் என்று அர்த்தமாகும். மேலும் இது சிவனுள் சக்தி அடக்கம் என்கின்ற தத்துவத்தை உணர்த்துவதாகும்.

உயிர்களாகிய நாம் இறைவனைப் பற்ற வேண்டியதில்லை. இறைவன் நம்மை எப்போதும் பற்றிக் கொண்டிருக்கின்றான் என்று நம்புங்கள். அந்த பிடிப்பே உங்கள் வழ்க்கை முழுவதற்கும் பயன்படும். அதைவிடுத்து சிறு குழந்தைபோல் என்னால் முடியும் என நினைத்து இறைவன் உங்களைப் பற்றியிருப்பதை தவிர்த்து நீங்கள் இறைவனை பற்ற ஆசைப்பட வேண்டாம்!

#*#*#*#*#

 

Read 455 times
Login to post comments