ஓம்நமசிவய!
நாரணன்முன் பணிந்தேத்த நின்று எல்லைநடாவிய
அத்தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே,என்பவர்க்கில்லைஅல்லல்களே!
#*#*#*#*#
22.வெற்றிலை பாக்கு!
வெற்றிலையை போட்டு சிறிது மென்ற பின்னரே பாக்கைப் போட்டுக் கொள்ளவேண்டும். முதலில் பாக்கைப் போட்டு மென்றுவிட்டு வெற்றிலையை போடக்கூடாது. வெற்றிலை பாக்கு இரண்டையும் ஒன்றாக போட்டு மெல்லக் கூடாது. வெற்றிலையின் அடி, நுனி, நரம்பு ஆகியவற்றை தின்னக் கூடாது. சுண்ணாம்பு வைத்திருந்த வெற்றிலையை உபயோகிக்கக்கூடாது. வெற்றிலை போட்டு இருக்கும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது
சாட்சியத்திற்கு வெற்றிலை பாக்கு ஏன்!
நம் முன்னோர்கள் தங்களின் வாக்குறுதியை பெரிதாக மதித்தனர். ஒருவருக்கு ஆணையிட்டுக் வாக்குக் கொடுக்கும்போது சாட்சியாக வெற்றிலையையும் பாக்கையும் வைத்து ஆணையிடுவது வழக்கம். வெற்றிலையில் அனுமனும், பாக்கில் விநாயகரும் இருப்பதாக ஐதீகம். உண்மைக்கும் சத்தியத்திற்கும் விநாயகரையும் அனுமனையும் தெய்வங்களாக கருதினர் நம் பெரியோர்கள். அதனால்தான் திருமண நிச்சயத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு வைத்து உறுதி செய்து கொள்ளும் முறை வழக்கமாகியது.
#*#*#*#*#